Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Monday, September 29
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»மாநிலம்»நீதிமன்றம் முன்கூட்டியே அறிவுறுத்தியும் கரூரில் நடந்த துயரம்: பொதுமக்களின் எதிர்பார்ப்பு என்ன?
    மாநிலம்

    நீதிமன்றம் முன்கூட்டியே அறிவுறுத்தியும் கரூரில் நடந்த துயரம்: பொதுமக்களின் எதிர்பார்ப்பு என்ன?

    adminBy adminSeptember 29, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    நீதிமன்றம் முன்கூட்டியே அறிவுறுத்தியும் கரூரில் நடந்த துயரம்: பொதுமக்களின் எதிர்பார்ப்பு என்ன?
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    சென்னை: கரூரில் நேற்று முன்​தினம் தவெக தலை​வர் விஜய் பிரச்​சா​ரம் செய்​த​போது ஏற்​பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி குழந்​தைகள் உட்பட 40 பேர் உயி​ரிழந்​தனர். 50-க்​கும் மேற்​பட்​டோர் காயமடைந்து சிகிச்சை பெற்று வரு​கின்​றனர். எவரும் எதிர்​பா​ராத இந்த துயர சம்​பவம் ஒட்​டுமொத்த தமிழகத்​தையே சோகத்​தில் ஆழ்த்​தி​யுள்​ளது.

    கடந்த செப். 14 முதல் மாவட்ட வாரி​யான பிரச்​சா​ரத்தை திருச்​சி​யில் தொடங்​கிய விஜய், தஞ்​சாவூர், நாகை உள்​ளிட்ட மாவட்​டங்​களில் சனிக்​கிழமை​களில் பிரச்​சா​ரம் மேற்​கொண்​டார். அவரைக் காண ரசிகர்​கள், தொண்​டர்​கள் மிக அதிக அளவில் திரண்​ட​தால், அவர்​களைக் கட்​டுப்​படுத்​து​வது காவல் துறைக்கு சவாலாக இருந்​தது. மேலும், பல இடங்​களி​லும் பொதுச் சொத்​துகள் சேதமடைந்​தன.

    அதே​போல, தொண்​டர்​கள், ரசிகர்​கள் சிலர் உயர​மான இடங்​களி​லும், மின்​சார டிரான்​ஸ்​பார்​மர்​கள் மற்​றும் மரங்​களி​லும் ஆபத்​தான முறை​யில் நிற்​பது, விஜய் பிரச்​சார வாக​னத்தை பைக்​கு​களில் பின்​தொடர்​வது என ஆபத்தை உணராமல் செயல்​பட்​டனர். இதனால் தவெக பிரச்​சா​ரங்​களுக்கு காவல் துறை பல்​வேறு கட்​டுப்​பாடு​களை விதித்​தது. இதை எதிர்த்து தவெக துணைப் பொதுச் செய​லா​ளர் சி.டி.ஆர். நிர்​மல்​கு​மார் உயர் நீதி​மன்​றத்​தில் மனு தாக்​கல் செய்​தார். இந்த மனு நீதிபதி என்​.சதீஷ்கு​மார் முன்​னிலை​யில் கடந்த செப். 18-ல் விசா​ரணைக்கு வந்​தது.

    அப்​போது நீதிப​தி, ‘‘இது​போன்ற கூட்​டங்​களின்​போது போக்​கு​வரத்து நெருக்​கடி​யால் மக்​கள் கடுமை​யாக பாதிக்​கப்​படு​கின்​றனர். பொது சொத்​துகளும் சேதப்​படுத்​தப்​படு​கின்​றன. சாலைகள் முழு​மை​யாக முடக்​கப்​படு​கின்​றன. மக்​களின் பாது​காப்​பை​யும் உறு​தி​செய்ய வேண்​டியது போலீ​ஸாரின் கடமை. இது​போன்ற ஆபத்​தான இடங்​களில் ஏறி நிற்​கும்​போது அசம்​பா​விதம் நேரிட்​டால், அதற்கு யார் பொறுப்​பேற்​பது? நீங்​கள்​தான் கூட்​டத்​தை​யும், தொண்​டர்​களை​யும் கட்​டுப்​படுத்த வேண்​டும். பொது சொத்​துகளுக்கு சேதம் விளை​விப்​பவர்​களிட​மிருந்து உரிய இழப்​பீட்​டுத் தொகையை வசூலிக்க வேண்​டும். இல்​லை​யெனில் நீதி​மன்​றம் தலை​யிட நேரிடும்​’’என்று எச்​சரித்​தார்.

    மேலும், “இது​போன்ற கூட்​டங்​கள், பேரணி​களுக்கு கர்ப்​பிணி​கள், மாற்​றுத் திற​னாளி​கள், குழந்​தைகள் வரு​வதை தவிர்க்க வேண்​டுமென, மற்​றவர்​களுக்கு முன்​மா​திரி​யாக விஜய் தெரிவிக்​கலாமே? மேலும், தனது தொண்​டர்​களும் ஒழுக்​கத்​துடன் நடந்​து​கொள்ள வேண்​டும் என அறி​வுறுத்​த​வும் வேண்​டும்’’ என்​றும் நீதிபதி அறி​வுறுத்​தி​னார்.

    அதே​போல, ‘‘அனைத்து அரசி​யல் கட்​சிகளும் நடத்​தும் மாநாடு​கள், கூட்​டங்​களுக்கு குறிப்​பிட்ட எண்​ணிக்​கை​யில் தொண்​டர்​கள் வரவேண்​டும். பொது சொத்​துகளுக்கு சேதம் விளைவிக்​கக் கூடாது உள்​ளிட்ட நிபந்​தனை​களை விதித்​து, தமிழக அரசு வழி​காட்டு நெறி​முறை​களை உரு​வாக்க வேண்​டும்.

    அரசி​யல் கட்​சி​யினருக்​கிடையே பாரபட்​சம் காட்​டக்​கூ​டாது. பொது சொத்​துகள் அல்​லது மக்​களின் தனிப்​பட்ட உடமை​கள் சேதப்​படுத்​தப்​பட்​டால், அதற்​கான இழப்​பீட்​டுத் தொகையை சம்​பந்​தப்​பட்ட கட்​சிகளிட​மிருந்து வசூலிக்க வேண்​டும்’’ என்​றும் உத்​தர​விட்​டார்.

    உயர் நீதி​மன்​றத்​தின் அறி​வுறுத்​தலை தொடர்ந்​து, கர்ப்​பிணிகள், கைக்​குழந்​தை​யுடன் இருக்​கும் சகோ​தரி​கள், முதி​ய​வர்​கள், உடல்​நலம் குன்​றியோர், பள்​ளிச் சிறு​வர், சிறுமியர் மற்​றும் மாற்​றுத் திற​னாளி​கள் ஆகியோர், விஜய் மக்​கள் சந்​திப்பு நிகழ்ச்​சிகளில் நேரில் கலந்​து​கொள்​வதை தவிர்க்​கு​மாறு தவெக பொதுச் செய​லா​ளர் புஸ்ஸி ஆனந்த் செப். 19-ம் தேதி அறிக்கை வெளி​யிட்​டார்.

    உயர் நீதி​மன்​றம் மற்​றும் கட்​சித் தரப்​பில் அறி​வுறுத்​தி​யும், கரூரில் தவெக நடத்​திய பிரச்​சா​ரத்​தில் கர்ப்​பிணி​கள், குழந்​தைகள், முதி​யோர் ஏராள​மானோர் பங்​கேற்​றனர். எதிர்​பா​ராத வகை​யில் நடந்த விபத்​தில் குழந்​தைகள், கர்ப்​பிணி​கள் உள்​ளிட்ட 40 பேர் உயி​ரிழந்​தனர். இவ்​வளவு கட்​டுப்​பாடு​கள் விதித்​தும் இந்த துயரச் சம்​பவம் நிகழ்ந்​துள்​ள​தால், இனி எந்த அரசி​யல் கட்​சிக்​கும் ‘ரோடு ஷோ’ போன்ற பிரச்​சா​ரங்​களுக்கு கண்​டிப்​பாக அனு​மதி வழங்​கக் கூடாது.

    அரசி​யல் கட்​சிகள் பொதுக் கூட்​டங்​கள் மூல​மாக மட்​டுமே பிரச்​சா​ரம் மேற்​கொள்ள அனு​மதி வழங்க வேண்​டும். சா​மானியர்​களின் உயிரைப் பணயம் வைக்​கும் விஷப் பரிட்​சையை மீண்​டும் முயற்​சிக்​க வேண்​டாம்​ என்​ப​தே பொது​மக்​களின்​ எதிர்​பார்​ப்​பாக உள்​ளது.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    மாநிலம்

    உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவிக்க மீண்டும் கரூர் செல்ல விஜய் திட்டம்

    September 29, 2025
    மாநிலம்

    நெரிசல் சம்பவம் குறித்து சிபிஐ விசாரணை கோருகிறது தவெக: உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் இன்று விசாரணை

    September 29, 2025
    மாநிலம்

    விஜய் பிரச்சாரத்தில் கல்வீச்சு சம்பவம் நடைபெறவில்லை: ஏடிஜிபி டேவிட்சன் தேவாசீர்வாதம் தகவல்

    September 29, 2025
    மாநிலம்

    தமிழக அரசும், விஜய்யும் இன்னும் கவனமாக இருந்திருக்க வேண்டும்: கரூரில் பழனிசாமி கருத்து

    September 29, 2025
    மாநிலம்

    கரூர் சம்பவத்தில் நீதிமன்றத்தை நாடிய தவெக தலைவர் விஜய் மீது விசிக கடும் விமர்சனம்

    September 29, 2025
    மாநிலம்

    “தவெகவின் தவறு, அரசும் கவனக்குறைவு” – கரூரில் பிரேமலதா குற்றச்சாட்டு

    September 29, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவிக்க மீண்டும் கரூர் செல்ல விஜய் திட்டம்
    • நெரிசல் சம்பவம் குறித்து சிபிஐ விசாரணை கோருகிறது தவெக: உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் இன்று விசாரணை
    • விஜய் பிரச்சாரத்தில் கல்வீச்சு சம்பவம் நடைபெறவில்லை: ஏடிஜிபி டேவிட்சன் தேவாசீர்வாதம் தகவல்
    • ஆப்டிகல் மாயை: உங்கள் கண்கள் கடிகாரத்தை வெல்ல முடியுமா? மறைக்கப்பட்ட நட்சத்திர மீன்களை 7 வினாடிகளில் கண்டுபிடி! | – தி டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • நீதிமன்றம் முன்கூட்டியே அறிவுறுத்தியும் கரூரில் நடந்த துயரம்: பொதுமக்களின் எதிர்பார்ப்பு என்ன?

    Recent Comments

    No comments to show.

    Archives

    • September 2025
    • August 2025
    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.