Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Saturday, August 2
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»மாநிலம்»நீதிபதி டி.வினோத்குமாருக்கு பதவி பிரமாணம்: தெலங்கானாவில் இருந்து சென்னை உயர் நீதிமன்றத்துக்கு இடமாறுதல்!
    மாநிலம்

    நீதிபதி டி.வினோத்குமாருக்கு பதவி பிரமாணம்: தெலங்கானாவில் இருந்து சென்னை உயர் நீதிமன்றத்துக்கு இடமாறுதல்!

    adminBy adminAugust 2, 2025No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    நீதிபதி டி.வினோத்குமாருக்கு பதவி பிரமாணம்: தெலங்கானாவில் இருந்து சென்னை உயர் நீதிமன்றத்துக்கு இடமாறுதல்!
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    சென்னை: தெலங்கானாவில் இருந்து சென்னை உயர் நீதிமன்றத்துக்கு இடமாறுதலில் வந்துள்ள நீதிபதி டி.வினோத்குமாருக்கு, தலைமை நீதிபதி எம்.எம்.ஸ்ரீவஸ்தவா நேற்று பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.

    தெலங்கானா உயர் நீதிமன்றத்தில் நீதிபதியாக பணியாற்றி வந்த டி.வினோத்குமாரை சென்னை உயர் நீதிமன்றத்துக்கு இடமாறுதல் செய்ய உச்ச நீதிமன்ற கொலீஜியம் பரிந்துரை செய்தது. அதையேற்று அவரை இடமாறுதல் செய்து குடியரசுத் தலைவர் உத்தரவிட்டார்.

    அதன்படி நீதிபதி டி.வினோத் குமாருக்கு சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி எம்.எம்.ஸ்ரீவஸ்தவா, உயர் நீதிமன்றத்தில் நேற்று நடைபெற்ற விழாவில் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.

    புதிய நீதிப​தி​யான டி.​வினோத்​கு​மாரை அரசு தலைமை வழக்​கறிஞர் பி.எஸ்​.​ராமன் வரவேற்​றுப் பேசுகை​யி்ல், ‘‘நீதிபதி வினோத்​கு​மாரின் சொந்த ஊர் தெலங்​கா​னா​வில் நல்​கொண்டா மாவட்​டத்​தில் உள்ள சூரிய பேட்​டை. இந்த ஊரில் லட்​சம் ஆண்​டு​களுக்கு முன்​பாக கற்​கால மனிதர்​கள் வாழ்ந்​த​தாக வரலாற்று ஆவணங்​கள் உள்​ளன. சுத்​த​மான நகராட்சி என பெயர் எடுத்த ஊரும் கூட. அத்​தகைய பெருமை மிகு ஊரில் இருந்து சென்​னைக்கு வந்​துள்ள நீதிபதி வினோத்​கு​மாரை வரவேற்​கிறோம். கடந்த 2019-ம் ஆண்டு தெலங்​கானா உயர் நீதி​மன்​றத்​தில் நீதிப​தி​யாக பதவி​யேற்​றுள்ள அவர் சென்னை உயர் நீதி​மன்​றத்​தி​லும் சிறப்​பாக பணி​யாற்ற வழக்​கறிஞர்​கள் முழு ஒத்​துழைப்பை வழங்​கு​வர்” என்​றார்.

    இந்​நிகழ்​வில் தமிழ்​நாடு புதுச்​சேரி பார் கவுன்​சில் தலை​வர் பி.எஸ்​.அமல்​ராஜ், சென்னை உயர் நீதி​மன்ற வழக்​கறிஞர்​கள் சங்​கத் தலை​வர் ஜி.மோக​னகிருஷ்ணன், மெட்ராஸ் பார் அசோசி​யேஷன் தலை​வர் எம்​.​பாஸ்​கர், பெண் வழக்​கறிஞர்​கள் சங்​கத் தலை​வர் ரேவ​தி, லா அசோசி​யேஷன் தலை​வர் செல்​வ​ராஜ் ஆகியோரும் வரவேற்​றுப் பேசினர்.

    அனை​வருக்​கும் நன்றி தெரி​வித்​து, நீதிபதி டி.​வினோத்​கு​மார் பேசும்​போது, ‘‘ பாரம்​பரியமிக்க சென்னை உயர் நீதி​மன்​றத்​தில் பணி​யாற்​று​வதை பெரு​மை​யாக கருதுகிறேன். என்னை வாழ்த்​திய அனை​வருக்​கும் நன்றி தெரி​வித்​துக்​ கொள்​கிறேன், என்​றார்.

    நீதிபதி வினோத்​கு​மார் பதவி​யேற்​றதன் மூலம் சென்னை உயர் நீதி​மன்​றத்​தில் பணி​யில் உள்ள நீதிப​தி​களின் எண்​ணிக்கை 56 ஆக உயர்ந்​துள்​ளது.காலி​யிடங்​களின்​ எண்​ணிக்​கை 19-ஆக குறைந்​துள்​ளது.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    மாநிலம்

    நீதிமன்ற பிடிவாரண்ட்கள் மீது குறித்த நேரத்தில் நடவடிக்கை: காவல் துறைக்கு ஐகோர்ட் உத்தரவு

    August 2, 2025
    மாநிலம்

    ஆண்டிபட்டி: ‘நலம் காக்கும் ஸ்டாலின்’ முகாம் மேடையில் திமுக எம்பி, எம்எல்ஏ வாக்குவாதம்

    August 2, 2025
    மாநிலம்

    ரஷ்யாவில் போருக்கு அனுப்பப்பட இருக்கும் ஸ்ரீமுஷ்ணம் மாணவர் – மீட்கும் முயற்சி தொடருவதாக துரை வைகோ தகவல்

    August 2, 2025
    மாநிலம்

    குளித்தலையில் கூகுள் மேப் பார்த்து நடைபாலத்தில் சிக்கிய கார் மீட்பு

    August 2, 2025
    மாநிலம்

    கோவை மாநகரில் சாலையோர பொது இடங்களில் குப்பை கொட்டினால் அபராதம் என மாநகராட்சி அறிவிப்பு

    August 2, 2025
    மாநிலம்

    வன்னியர்களுக்கு உள் இடஒதுக்கீடு வழங்க தமிழக அரசு சட்டமியற்ற வேண்டும்: அன்புமணி

    August 2, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • நீதிமன்ற பிடிவாரண்ட்கள் மீது குறித்த நேரத்தில் நடவடிக்கை: காவல் துறைக்கு ஐகோர்ட் உத்தரவு
    • 5 குழந்தைகளுக்கு ஆங்கிலம் கற்க உதவுவதற்கான உதவிக்குறிப்புகள் அது அவர்களின் முதல் மொழியாக இல்லாவிட்டால் – இந்தியாவின் டைம்ஸ்
    • டெல்டா காக்பிட் ரெய்டு: சிறுவர் பாலியல் துஷ்பிரயோக முகங்களால் குற்றம் சாட்டப்பட்ட இந்திய மூல பைலட் 24 மோசமான எண்ணிக்கைகள்; ஜாமீன் 15 மில்லியன் டாலர் – டைம்ஸ் ஆப் இந்தியா
    • பிஹார் வரைவு வாக்காளர் பட்டியலில் எனது பெயர் இல்லை: தேஜஸ்வி யாதவ்
    • ஆண்டிபட்டி: ‘நலம் காக்கும் ஸ்டாலின்’ முகாம் மேடையில் திமுக எம்பி, எம்எல்ஏ வாக்குவாதம்

    Recent Comments

    No comments to show.

    Archives

    • August 2025
    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.