Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Tuesday, July 22
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»மாநிலம்»“நீதித்துறையின் சுதந்திரத்தை பாதுகாப்பேன்” – சென்னை உயர் நீதிமன்ற புதிய தலைமை நீதிபதி
    மாநிலம்

    “நீதித்துறையின் சுதந்திரத்தை பாதுகாப்பேன்” – சென்னை உயர் நீதிமன்ற புதிய தலைமை நீதிபதி

    adminBy adminJuly 22, 2025No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    “நீதித்துறையின் சுதந்திரத்தை பாதுகாப்பேன்” – சென்னை உயர் நீதிமன்ற புதிய தலைமை நீதிபதி
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    சென்னை: சென்னை உயர் நீதிமன்றத்தின் மரபை உறுதி செய்யும் வகையில், தலைமை நீதிபதியாக அல்லாமல், பணிவான சேவகனாக பணியாற்றி நீதித்துறையின் சுதந்திரத்தை பாதுகாப்பதாக, புதிய தலைமை நீதிபதி எம்.எம்.ஶ்ரீவஸ்தவா உறுதி அளித்தார்.

    புதிய தலைமை நீதிபதி எம் எம் ஶ்ரீவஸ்தவா- வுக்கு சென்னை உயர் நீதிமன்றத்தின் சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது. புதிய தலைமை நீதிபதியை வரவேற்று பேசிய தமிழக அரசின் தலைமை வழக்கறிஞர் பி எஸ் ராமன், தமிழகத்தின் பெருமைகளையும் சென்னையின் வளமையையும் 163 ஆண்டு பழமையான உயர் நீதிமன்றத்தின் தொன்மையையும், தமிழின் பெருமையையும் விளக்கி, நீதி பரிபாலனத்துக்கு முழு ஒத்துழைப்பை வழங்குவதாக உறுதி அளித்தார்.

    ராஜஸ்தான் மாநிலத்தில் வழக்கறிஞர்கள் பாதுகாப்பு சட்டம் கொண்டுவர காரணமாக இருந்த தலைமை நீதிபதி மூலமாக தமிழகத்திலும் இந்த சட்டம் கொண்டுவரப்பட வேண்டும் என்ற நீண்ட கால கோரிக்கை நிறைவேற்றப்படும் என நம்புவதாக தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில் தலைவர் அமல்ராஜ் மற்றும் சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர் சங்க தலைவர் மோகன கிருஷ்ணன் ஆகியோர் தெரிவித்தனர்.

    இதே போல பல்வேறு வழக்கறிஞர்கள் சங்க நிர்வாகிகள் புதிய தலைமை நீதிபதி வரவேற்று பேசினர். பின்னர் ஏற்புரையாற்றிய தலைமை நீதிபதி எம் எம் ஸ்ரீ வஸ்தவா, 1892 ஆம் ஆண்டு சென்னை உயர் நீதிமன்றத்தின் சாவியை பெற்றுக்கொண்ட அப்போதைய தலைமை நீதிபதி சர் ஆர்தர் கோலன், எந்த பாகுபாடும் இல்லாமல் நீதி நிர்வாகம் மேற்கொள்ளப்படும் என்று குறிப்பிட்டு இருந்தார். அந்த மரபை உறுதி செய்யும் வகையில் சென்னை உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக அல்லாமல் சேவகனாக பணியாற்றி நீதித்துறையின் சுதந்திரத்தை பாதுகாப்பதாக உறுதி அளித்தார்.

    மக்களின் உரிமைகளை பாதுகாக்க, திறமையான வெளிப்படைத்தன்மையுடன் நீதி நிர்வாகம் நடத்தப்படும் என்றும், வழக்கறிஞர்களின் எதிர்பார்ப்புக்கு ஏற்ப பணியாற்றுவதாகவும் உறுதி தெரிவித்தார்.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    மாநிலம்

    கொடிக் கம்பம் வழக்கு: அனைத்து கட்சிகளும் ஆக.5-க்குள் இடையீட்டு மனு தாக்கல் செய்ய ஐகோர்ட் உத்தரவு

    July 22, 2025
    மாநிலம்

    அதிமுக கூட்டணிக்கு இபிஎஸ் அழைப்பு: விஜய்யின் தவெக பதில் என்ன?

    July 22, 2025
    மாநிலம்

    செந்தில் பாலாஜி வழக்கின் விசாரணையை தள்ளிவைக்க கோரிய மனு: அமலாக்கத் துறை பதிலளிக்க உத்தரவு

    July 22, 2025
    மாநிலம்

    “தீமைக்கு மாற்று தீமை கிடையாது!” – எடப்பாடி பழனிசாமியின் அழைப்பை நிராகரித்த சீமான்

    July 22, 2025
    மாநிலம்

    ‘ஓரணியில் தமிழ்நாடு’ ஓடிபி விவகாரத்தில் ஐகோர்ட் உத்தரவு: திமுக ரியாக்‌ஷன் என்ன?

    July 22, 2025
    மாநிலம்

    நாமக்கல் கிட்னி திருட்டு விவகாரம்: திருச்செங்கோட்டில் சுகாதாரத் துறை அதிகாரிகள் ஆய்வு

    July 22, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • ‘அவர்கள் வாழ்க்கையைப் பொருட்படுத்தாத விலங்குகளைப் போன்றவர்கள்’: 8 இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஆண்கள் கடத்தல், சித்திரவதை, மிரட்டி பணம் பறித்தல் ஆகியவற்றிற்காக அமெரிக்காவில் வைத்திருக்கிறார்கள்; இந்தியாவில் கொலைகளுடன் எஃப்.பி.ஐ கும்பலை இணைக்கிறது | சண்டிகர் செய்தி – டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • கொடிக் கம்பம் வழக்கு: அனைத்து கட்சிகளும் ஆக.5-க்குள் இடையீட்டு மனு தாக்கல் செய்ய ஐகோர்ட் உத்தரவு
    • மூளை பூஸ்ட் தந்திரம்: இந்த காலை பழக்கம் உங்கள் கவனம் மற்றும் உற்பத்தித்திறனை அமைதியாக அழிக்கிறது, மூளை நிபுணரை விளக்குகிறது- அதை எவ்வாறு சரிசெய்வது என்பது இங்கே | – டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • வருண் மோகன் யார்? விண்ட்சர்ஃப் இந்திய-ஆரிஜின் தலைமை நிர்வாக அதிகாரி கூகிளின் தொடக்கத்தை விட்டு வெளியேறிய பிறகு பின்னடைவை எதிர்கொள்கிறார், b 3 பி ஓப்பனாய் டீல் | உலக செய்திகள் – டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • குடியரசு துணைத் தலைவர் பதவிக்கு தேர்தல் நடந்தால் வெற்றி யாருக்கு? – பாஜக+ Vs எதிர்க்கட்சிகள் பலம்

    Recent Comments

    No comments to show.

    Archives

    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.