Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Thursday, July 10
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»மாநிலம்»நீட் தேர்வு முடிவுகளை வெளியிட தடை: தேசிய தேர்வு முகமைக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு
    மாநிலம்

    நீட் தேர்வு முடிவுகளை வெளியிட தடை: தேசிய தேர்வு முகமைக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு

    adminBy adminMay 18, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    நீட் தேர்வு முடிவுகளை வெளியிட தடை: தேசிய தேர்வு முகமைக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    மின் தடையால் பாதிக்கப்பட்ட நீட் தேர்வு மாணவர்களுக்கு மறு தேர்வு நடத்த உத்தரவிடக் கோரிய வழக்கில், நீட் தேர்வு முடிவுகளை வெளியிட தடை விதித்து தேசிய தேர்வு முகமைக்கு, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

    திருவள்ளூரைச் சேர்ந்த சாய் ப்ரியா, காஞ்சிபுரத்தைச் சேர்ந்த ஹரிஹரன் மற்றும் ராணிப்பேட்டையைச் சேர்ந்த அக்‌ஷயா உள்ளிட்ட 13 நீட் தேர்வு எழுதிய மாணவர்கள், சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது:

    தேசிய மருத்துவ ஆணையத்தின் மூலம் மே 4-ம் தேதி மருத்துவ படிப்புக்காக நீட் நுழைவுத் தேர்வு நாடு முழுவதும் பல்வேறு மையங்களில் நடத்தப்பட்டது. இந்நிலையில், ஆவடியில் உள்ள ஶ்ரீ கேந்திரிய வித்யாலயா சி.ஆர்.பி.எப் மையத்தில் 464 மாணவர்களுக்கு தேர்வு எழுத நுழைவுச்சீட்டு வழங்கப்பட்டது.

    அனைத்து சோதனைகளுக்கும் பிறகு 2 மணிக்கு தேர்வு தொடங்கிய நிலையில் 2.45 மணிக்கு தொடங்கிய கனமழை காரணமாக 3 மணியில் இருந்து 4.15 மணி வரை மின் தடை ஏற்பட்டது. தற்காலிக மின் சேவைக்காக எந்த சாதனங்களும் மையத்தில் இருப்பில் இல்லை. குறைவான வெளிச்சத்தில் தேர்வு எழுதிய நிலையில், தேர்வு மையத்துக்குள் மழைநீர் புகுந்ததால், மாற்று இடத்தில் இருந்து தேர்வு எழுத அறிவுறுத்தப்பட்டது. இதனால் மேலும் சிரமம் ஏற்பட்டது.

    கடுமையான சிரமத்துக்கு இடையே தேர்வு எழுதிய மாணவர்களால் தங்கள் திறமையை வெளிக்காட்ட முடியவில்லை. கூடுதல் நேரம் ஒதுக்க வேண்டும் என தேர்வு மைய அதிகாரியிடம் வைக்கப்பட்ட கோரிக்கையும் நிராகரிக்கப்பட்டது.

    தேர்வுக்குப்பின், மின் தடை காரணமாக சரியாக தேர்வு எழுத முடியவில்லை என இணையதளம் மூலமாக தேசிய தேர்வு முகமைக்கு புகார் அளிக்கப்பட்டும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

    பலருடைய கனவாக மருத்துவ படிப்புக்கான நுழைவுத்தேர்வில் சிறு குறைபாடும் மாணவர்களின் எதிர்காலத்தை பாதித்துவிடும். மின் தடை காரணமான மன அழுத்தம் மற்றும் புழுக்கத்தால் சரியாக தேர்வு எழுத முடியவில்லை. மறு-தேர்வு நடத்த வேண்டும் என பலமுறை கோரிக்கை மனு அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

    தேர்வில் தேர்ச்சி பெறுவதற்கான நியாயமான வாய்ப்பு மறுக்கப்பட்டதன் மூலம் அரசியலமைப்பின் 21-வது பிரிவின் கீழ் அடிப்படை உரிமைகள் மீறப்பட்டுள்ளன. மறு தேர்வு எழுத மறுக்கப்படுவதன் மூலம் மாணவர்களின் எதிர்கால மருத்துவக் கனவு வீணாகிறது. அதனால், வழக்கு முடியும் வரை நீட் தேர்வு முடிவுகளை வெளியிட தேசிய தேர்வு முகமைக்கு தடை விதிக்க வேண்டும். மின் தடையால் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு மறு தேர்வு எழுத அனுமதிக்க வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.

    இந்த மனு உயர் நீதிமன்ற நீதிபதி வி.லட்சுமி நாராயணன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, மத்திய அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர் ஏ.ஆர்.எல்.சுந்தரேசன், “மின் தடை ஏற்பட்டதா? என்பது குறித்தும், அவ்வாறு மின்தடை ஏற்பட்டிருந்தால் மாணவர்களின் கோரிக்கையை பரிசீலிப்பது குறித்து பதிலளிக்க அவகாசம் அளிக்க வேண்டும்” என தெரிவித்தார்.

    இதையடுத்து, மனுவுக்கு மத்திய அரசு பதிலளிக்க உத்தரவிட்ட நீதிபதி, அதுவரை நீட் தேர்வு முடிவுகளை வெளியிட தடை விதித்து விசாரணையை ஜூன் 2-ம் தேதி தள்ளிவைத்தார்.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    மாநிலம்

    திருவாரூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் இதயம், மூளை நரம்பியல் சிகிச்சை கிடைக்காமல் அவதி!

    July 10, 2025
    மாநிலம்

    கோவை குண்டுவெடிப்பு வழக்கில் தேடப்பட்ட நபர் 28 ஆண்டுகளுக்கு பிறகு கைது

    July 10, 2025
    மாநிலம்

    ‘சாத்தூர் நிகழ்வு விரும்பத்தகாதது’ – மன்னிப்பு கோரிய துரை வைகோ எம்.பி.

    July 10, 2025
    மாநிலம்

    ‘உங்களுடன் ஸ்டாலின்’ ஊரை ஏமாற்றும் திட்டம்: விளக்கங்களை அடுக்கி அன்புமணி விமர்சனம்

    July 10, 2025
    மாநிலம்

    “கோட்சே கூட்டம் பின்னால் மாணவர்கள் செல்லக்கூடாது” – திருச்சி கல்லூரி விழாவில் முதல்வர் ஸ்டாலின் பேச்சு

    July 10, 2025
    மாநிலம்

    “காவி உடை அணியும் நிலைக்கு மாறிவிட்டார் பழனிசாமி” – அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர்

    July 10, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • திருவாரூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் இதயம், மூளை நரம்பியல் சிகிச்சை கிடைக்காமல் அவதி!
    • அரிசி மாவு அல்லது பெசன்: எந்த மாவு மிருதுவான ‘பக்கோரஸை’ ஆக்குகிறது? | – டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • நாசாவின் டார்ட் மிஷன் சிறுகோள் டிமார்போஸிலிருந்து கற்பாறைகளை வெளியேற்றியது, சிறுகோள் மோதல் விளைவுகளைப் பற்றிய புதிய நுண்ணறிவை வழங்குகிறது | – தி டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • ‘லாராவின் 400 சாதனையை உடைக்க கிட்டிய வாய்ப்பு இனி வருமா?’ – முல்டர் மீது ஸ்டோக்ஸ் ஆதங்கம்
    • கோவை குண்டுவெடிப்பு வழக்கில் தேடப்பட்ட நபர் 28 ஆண்டுகளுக்கு பிறகு கைது

    Recent Comments

    No comments to show.

    Archives

    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.