Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Wednesday, September 24
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»மாநிலம்»நீட் தேர்வில் இருந்து விலக்கு பெற முதல்வரின் நடவடிக்கைகளுக்கு மத்திய அரசு முட்டுக்கட்டை: சுகாதாரத் துறை அமைச்சர் குற்றச்சாட்டு
    மாநிலம்

    நீட் தேர்வில் இருந்து விலக்கு பெற முதல்வரின் நடவடிக்கைகளுக்கு மத்திய அரசு முட்டுக்கட்டை: சுகாதாரத் துறை அமைச்சர் குற்றச்சாட்டு

    adminBy adminMay 6, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    நீட் தேர்வில் இருந்து விலக்கு பெற முதல்வரின் நடவடிக்கைகளுக்கு மத்திய அரசு முட்டுக்கட்டை: சுகாதாரத் துறை அமைச்சர் குற்றச்சாட்டு
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    சென்னை: நீட் விலக்கு பெற முதல்வர் எடுக்கும் நடவடிக்கைகளுக்கு மத்திய அரசு முட்டுக்கட்டையாக உள்ளது என்று சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.

    தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் 72-வது பிறந்தநாளை முன்னிட்டு சென்னை கிழக்கு மாவட்ட திமுக சார்பில் “அன்னம் தரும் அமுதக்கரங்கள்” திட்டமானது கடந்த பிப்ரவரி 20-ம் தேதி முதல் 2026 பிப்ரவரி 19-ம் தேதி வரை 365 நாட்களும் தினமும் 1000 நபர்களுக்கு மேல், வெவ்வேறு இடங்களில் காலை உணவு வழங்கப்பட்டு வருகிறது.

    75-வது நேற்று கொளத்தூர் 70-வது வார்டு, ரமணா நகர், கௌதமபுரம் குடியிருப்பு பகுதி மற்றும் 68-வது வார்டு, பெரியார் நகர் மருத்துவமனை அருகில், கார்த்திகேயன் சாலை ஆகிய இடங்களில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு ஆகியோர் பொதுமக்களுக்கு காலை உணவு வழங்கினார். வடசென்னை மக்களவை தொகுதி உறுப்பினர் கலாநிதி வீராசாமி மற்றும் கட்சி நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

    அப்போது, அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர்களிடம் கூறியதாவது: நீட் வந்த நாள் முதலே குளறுபடிகள் தான் நடக்கிறது. மருத்துவ படிப்பில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீதம் என்பது சட்டரீதியாக ஒப்புக்கொள்ளப்பட்ட ஒன்று. இந்த 7.5 சதவீதத்தினால் பலனும் இருக்கின்றது என்கின்ற வகையில், தமிழக முதல்வர் மருத்துவ கல்வி போல் சட்டம், பொறியியல் உள்ளிட்ட படிப்புகளில் 7.5 சதவீதத்தை கொண்டு வந்தார்.

    இதனை உயர்த்தி வேறு யாராவது நீதி மன்றங்களுக்கு சென்று சட்டரீதியான சிக்கல் வந்து விடக்கூடாது என்பதில் அரசு கவனமாக இருக்கின்றது. 10 சதவீதம் வரை உயர்த்த சட்டரீதியான நுணுக்கங்களை ஆராய வேண்டிய அவசியம் இருக்கிறது. முதல்வர் நிச்சயம் சட்ட விதிகளை பின்பற்றி எந்த நடவடிக்கையானாலும் எடுப்பார்.

    அவசரக்கோளத்தில் அள்ளி தெளித்த கதையாக கடந்த காலங்களில் போடப்பட்ட ஆணைகள் எப்படி கிடப்பில் இருக்கின்றதோ, நாம் நன்றாக அறிவோம். எனவே அந்த வகையில் இதை தெரிந்து சரியான முடிவை எடுப்பது என்பது தான் முதல்வரின் கடமை. நீட் விலக்கு பெறுவோம் என்பதில் எந்த விதமான மாற்று கருத்தும் இல்லை. திமுகவின் தேர்தல் அறிக்கையில் ஆட்சிக்கு வந்தால் நீட் விளக்கை பெறுவோம் என்கின்ற வகையிலான அறிவிப்பு இருக்கின்றது.

    நீட் விலக்கு பெற தமிழக முதல்வர் நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். ஆனால், மத்திய அரசு முட்டுக்கட்டையாக உள்ளது. இதில் அக்கறை உள்ளவர்களாக இன்றைக்கு சொல்லிக்கொண்டு இருக்கும் அதிமுக பொதுச்செயலாளர், முன்னாள் ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் ஆகியோர் நீட் விளக்கு பெறுவதற்கு இந்த அரசுக்கு உறுதுணையாக இருந்திருக்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    மாநிலம்

    சென்னையில் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்டவர் மரணம்: எஸ்ஐ, 2 தலைமை காவலர்களுக்கு ஆயுள் தண்டனை

    September 24, 2025
    மாநிலம்

    ஊரக வேலைத் திட்டத்தில் ரூ.87 கோடி ஊழல்: உயர்நிலை விசாரணை நடத்த அன்புமணி வலியுறுத்தல்

    September 24, 2025
    மாநிலம்

    ஈரோடு மாவட்ட மலையாளி பழங்குடியினருக்கு சாதிச் சான்றிதழ் வழங்குக: அன்புமணி

    September 24, 2025
    மாநிலம்

    ‘வந்தவங்க வாழ்றாங்க… இருக்கிறவங்க வாடுறோம்ங்க..!’ – அமைச்சர் முன்னிலையில் திமுக நிர்வாகி புலம்பல்

    September 24, 2025
    மாநிலம்

    உடலுறுப்பு தானத்தால் 8,000 பேருக்கு மறுவாழ்வு: அமைச்​சர் மா.சுப்​பிரமணி​யன் தகவல்

    September 24, 2025
    மாநிலம்

    90 பேருக்கு கலைமாமணி விருது அறிவிப்பு: 2021, 2022, 2023-க்கான முழு பட்டியல்

    September 24, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • ‘ரஷ்யாவிடம் எண்ணெய் வாங்கலாம்; ஆனால் இந்தியா எங்களுடன்தான் இருக்கிறது’ – ஜெலன்ஸ்கி
    • சென்னையில் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்டவர் மரணம்: எஸ்ஐ, 2 தலைமை காவலர்களுக்கு ஆயுள் தண்டனை
    • ‘இந்த தினசரி பழக்கம் உங்கள் உயிரைக் காப்பாற்றும்!’: 100 வயதான மருத்துவர் ஆச்சரியமான ரகசியத்தை நீண்ட, ஆரோக்கியமான வாழ்க்கைக்கு பகிர்ந்து கொள்கிறார் | – தி டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • H-1B விசா உயர்வு: 000 100,000 கட்டண அதிகரிப்பிலிருந்து மோசமாக பாதிக்கப்படக்கூடிய அமெரிக்க தொழில்நுட்ப நிறுவனங்கள் | உலக செய்தி – தி டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • ஊரக வேலைத் திட்டத்தில் ரூ.87 கோடி ஊழல்: உயர்நிலை விசாரணை நடத்த அன்புமணி வலியுறுத்தல்

    Recent Comments

    No comments to show.

    Archives

    • September 2025
    • August 2025
    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.