Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Sunday, January 18
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»மாநிலம்»நில அபகரிப்பு வழக்கு: அமைச்சர் மா.சுப்பிரமணியன், மனைவி மீது ஜூலை 24-ல் குற்றச்சாட்டு பதிவு
    மாநிலம்

    நில அபகரிப்பு வழக்கு: அமைச்சர் மா.சுப்பிரமணியன், மனைவி மீது ஜூலை 24-ல் குற்றச்சாட்டு பதிவு

    adminBy adminJune 17, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    நில அபகரிப்பு வழக்கு: அமைச்சர் மா.சுப்பிரமணியன், மனைவி மீது ஜூலை 24-ல் குற்றச்சாட்டு பதிவு
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    சென்னை: போலி ஆவணங்கள் மூலம் நிலத்தை அபகரித்த வழக்கில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் மீது ஜூலை 24ல் குற்றச்சாட்டுப் பதிவு செய்யப்படும் என்று சென்னை சிறப்பு நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

    சென்னை கிண்டியில் உள்ள தொழிலாளர் காலனியில் எஸ்.கே.கண்ணன் என்பவருக்கு ஒதுக்கீடு செய்த சிட்கோவின் நிலத்தை தமிழக அமைச்சர் மா.சுப்ரமணியன்,

    சென்னை மாநகர மேயராக இருந்த போது, தனது அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி முறைகேடான ஆவணங்கள் மூலம் தனது மனைவி காஞ்சனாவின் பெயருக்கு மாற்றம் செய்துள்ளதாக சைதாப்பேட்டையை சேர்ந்த பார்த்திபன் என்பவர் புகார் அளித்தார்.

    இந்த புகாரின் அடிப்படையில் போலி ஆவணம் தயாரித்தல், ஏமாற்றுதல், கூட்டு சதி மற்றும் ஊழல் தடுப்பு சட்டத்தின் கீழ் மா.சுப்பிரமணியன் மற்றும் அவரது மனைவி காஞ்சனா மீது சிபிசிஐடி போலீஸார் வழக்கு பதிவு செய்தனர். இந்த வழக்கில் கடந்த 2019ம் ஆண்டு காவல் துறை தரப்பில் குற்றபத்திரிகை தாக்கல் செய்யபட்டது. தன்மீதான வழக்கை ரத்து செய்யக் கோரி மா.சுப்பிரமணியன் தாக்கல் செய்த மனுவை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டிருந்தது. இந்த உத்தரவை எதிர்த்தும், வழக்கில் இருந்து விடுவிக்க கோரியும் உச்ச நீதிமன்றத்தில் மா.சுப்பிரமணியன், அவரது மனைவி தரப்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.

    இந்நிலையில், இந்த வழக்கு சென்னை சிறப்பு நீதிமன்ற நீதிபதி என். வெங்கடவரதன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது மா.சுப்பிரமணியன் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், “வழக்கில் இருந்து விடுவிக்க கோரிய மனுவை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்ததை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீட்டு செய்யப்பட்டுள்ளது. தற்போது உச்ச நீதிமன்றத்தில் கோடை விடுமுறை காரணமாக அந்த வழக்கு விசாரணைக்கு எடுக்கப்படவில்லை.எனவே, குற்றச்சாட்டுப் பதிவு நடைமுறையை தள்ளிவைக்க வேண்டும். இதனை இறுதி வாய்ப்பாக வழங்க வேண்டும்” என கோரினார்.

    இதையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதி, இந்த வழக்கில் எவ்வித கூடுதல் கால அவகாசமும் வழங்க முடியாது எனக் கூறி அடுத்த விசாரணைக்குள் உச்ச நீதிமன்றத்தில் உத்தரவை பெற வேண்டும் என தெரிவித்தார். இல்லாவிட்டால், ஜூலை 24-ம் தேதி மா.சுப்பிரமணியன் மற்றும் அவரது மனைவி மீது குற்றச்சாட்டுப் பதிவு நடைமுறை மேற்கொள்ளப்படும் எனக் கூறி அன்றைய தினத்துக்கு விசாரணையை ஒத்திவைத்தார்.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    மாநிலம்

    வானிலை முன்னறிவிப்பு: சென்னை உள்ளிட்ட 15 மாவட்டங்களில் நாளை கனமழைக்கு வாய்ப்பு

    December 3, 2025
    மாநிலம்

    மகிளா வங்கியை மூடிய பாஜக அரசு: ப.சிதம்பரம் குற்றச்சாட்டு

    December 3, 2025
    மாநிலம்

    “விருதுநகர் தொகுதியில் அதிமுகதான் போட்டி” – ராஜேந்திர பாலாஜி திட்டவட்டம்

    December 3, 2025
    மாநிலம்

    “பிஹார் தேர்தல் முடிவை விமர்சன கண்ணோட்டத்தோடு பார்க்க வேண்டும்” – கமல்ஹாசன் எம்.பி

    December 3, 2025
    மாநிலம்

    ‘புலி வருது, புலி வருது’ என்பது போல – ஆந்திராவுக்கு மடைமாறிய முதலீடு: நயினார் நாகேந்திரன் கிண்டல்!

    December 3, 2025
    மாநிலம்

    மேயர் இல்லாததால் மதுரை மாநகராட்சியில் திமுக – மார்க்சிஸ்ட் இடையே அதிகார மோதல்!

    December 3, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • குடியரசு தின நீண்ட வார இறுதி: பெரிய பூனைகளை பார்க்க 5 தேசிய பூங்காக்கள்
    • காசிரங்கா உயர்த்தப்பட்ட தாழ்வாரம்: புதிய திட்டம் வனவிலங்குகளைப் பாதுகாப்பது மற்றும் இணைப்பை மேம்படுத்துவதை எவ்வாறு நோக்கமாகக் கொண்டுள்ளது | – டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • யார் பொறுப்பு – ரயில்வே, அரசாங்கம் அல்லது பயணிகள்? தொடக்க விழா வந்தே பாரத் ஸ்லீப்பரில் கண்டெடுக்கப்பட்ட குப்பை ஆத்திரத்தை தூண்டியது | – டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • ஐன்ஸ்டீன் விசாவுக்கான தேவை அதிகரித்து வருகிறது: அமெரிக்காவால் வழங்கப்படும் இந்த விசா என்ன, அதை யார் பெறலாம் | – டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • ‘டாக்சிக்’ நடிகை ருக்மணி வசந்த், புகைப்படக் கலைஞர் சித்தாந்த் நாக் உடன் அமைதியாக டேட்டிங் செய்கிறாரா? மீண்டும் ஒரு புகைப்படம் வதந்திகளை தூண்டுகிறது – தி டைம்ஸ் ஆஃப் இந்தியா

    Recent Comments

    No comments to show.

    Archives

    • January 2026
    • December 2025
    • November 2025
    • October 2025
    • September 2025
    • August 2025
    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2026 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.