Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Saturday, June 28
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»மாநிலம்»நிலத்தடி நீருக்கு வரி விதிக்கும் முடிவை மத்திய அரசு கைவிட டிடிவி தினகரன் வலியுறுத்தல்
    மாநிலம்

    நிலத்தடி நீருக்கு வரி விதிக்கும் முடிவை மத்திய அரசு கைவிட டிடிவி தினகரன் வலியுறுத்தல்

    adminBy adminJune 28, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    நிலத்தடி நீருக்கு வரி விதிக்கும் முடிவை மத்திய அரசு கைவிட டிடிவி தினகரன் வலியுறுத்தல்
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    சென்னை: “நிலத்தடி நீர் வீணடிக்கப்படுவதையும், தவறாக பயன்படுத்துவதையும் தடுக்கவே வரி விதிக்கப்படுவதாக மத்திய நீர்வளத்துறை கூறியிருக்கும் விளக்கம் ஏற்புடையதல்ல. எனவே, நிலத்தடி நீருக்கான வரி விதிக்கும் முடிவை கைவிட வேண்டும்,” என்று அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் வலியுறுத்தியுள்ளார்.

    இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “நாடு முழுவதும் விவசாயத்துக்காக பயன்படுத்தப்படும் நிலத்தடி நீரின் அளவுக்கு ஏற்ப வரி விதிக்கும் முறையை செயல்படுத்த இருப்பதாக வெளியாகியிருக்கும் மத்திய நீர்வளத்துறையின் அறிவிப்புக்கு தமிழகத்தின் ஒட்டுமொத்த விவசாயிகளும் கடும் எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர்.

    திமுக அரசின் கூட்டணி தர்மத்தால் அண்டை மாநிலங்களிலிருந்து தமிழகத்துக்கு கிடைக்க வேண்டிய நீர் உரிய நேரத்தில் கிடைக்கப்பெறாத நிலையில், மாநிலத்தின் பெரும்பங்கு வேளாண்மைக்கு முதன்மை நீராக பயன்படுத்தப்படும் நிலத்தடி நீருக்கும் வரி விதிக்கும் மத்திய நீர்வளத்துறையின் முடிவு தமிழக விவசாயிகள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

    நிலத்தடி நீரின் அருமையையும், அவசியத்தையும் மாநிலத்தின் ஒவ்வொரு விவசாயியும் நன்றாக அறிந்து தேவைக்கேற்ப பயன்படுத்தி வரும் நிலையில், நிலத்தடி நீர் வீணடிக்கப்படுவதையும், தவறாக பயன்படுத்துவதையும் தடுக்கவே வரி விதிக்கப்படுவதாக மத்திய நீர்வளத்துறை கூறியிருக்கும் விளக்கம் ஏற்புடையதல்ல.

    ஏற்கெனவே, விளைச்சல் பாதிப்பு, உரிய விலையின்மை என அடுத்தடுத்து இன்னல்களை சமாளிக்க முடியாமல் தமிழக விவசாயிகள் தவித்து வரும் நிலையில், தற்போது நிலத்தடி நீருக்கும் வரி என்பது அவர்களை விவசாயத்தை விட்டே வெளியேற்றக் கூடிய ஆபத்தை உருவாக்கும் வகையில் அமைந்திருக்கிறது.

    எனவே, எத்தகைய இடையூறுகள் வந்தாலும் உணவு உற்பத்தி எனும் மகத்தான பணியை மேற்கொண்டிருக்கும் விவசாயிகளின் வாழ்வாதாரத்துக்கு பெரும் ஆபத்தை ஏற்படுத்தக்கூடிய நிலத்தடி நீருக்கான வரி விதிக்கும் முடிவை கைவிட வேண்டும் என மத்திய நீர்வளத்துறையை வலியுறுத்துகிறேன்,” என்று அவர் கூறியுள்ளார்.

    பாஜக மறுப்பு: இதனிடையே, “விவசாயிகள் பாசனத்திற்காக பயன்படுத்தும் நிலத்தடி நீருக்கு வரி விதிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது என்ற செய்தி பல்வேறு தமிழ் ஊடகங்களில் வெளிவந்துள்ளது. இதற்கு பலரும் கண்டன அறிக்கை வெளியிட்டுள்ளனர். உண்மையில், இது போன்ற எந்த ஒரு முடிவோ அல்லது கருத்தோ மத்திய அரசால் குறிப்பிடப்படவில்லை என்பதும், விவசாயம் மற்றும் தண்ணீர் ஆகிய இரு விவகாரங்களுமே மாநில அரசின் கீழ் உள்ளவை என்பதும் குறிப்பிடத்தக்கது. ஆனால் இல்லாத ஒன்றை இருப்பது போல், மத்திய அரசின் மீது வெறுப்பை ஏற்படுத்த வேண்டுமென்றே திட்டமிட்ட ரீதியில் இந்த வதந்தியை ‘ஒரு சில ஊடகங்கள்’ பரபரப்பியதோடு, பாஜக அரசின் மீதான தங்களின் வெறுப்பை உமிழ்ந்துள்ளன. இது ஊடக ‘அறம்’ அல்ல, ஊடக ‘புறம்'” என பாஜக மாநில துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி தெரிவித்துள்ளார்.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    மாநிலம்

    ”தமிழகத்தில் ஆதிதிராவிடர் பள்ளிகளில் 20% ஆசிரியர்கள் இல்லை” – நயினார் நாகேந்திரன்

    June 28, 2025
    மாநிலம்

    உபரி நீர் திறப்பு அதிகரிப்பு: காவிரி கரையோர 11 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

    June 28, 2025
    மாநிலம்

    புதுவை மாநில பாஜக தலைவர் பதவிக்கு நாளை வேட்புமனு தாக்கல்

    June 28, 2025
    மாநிலம்

    பாஜகவுக்கு மீனவர் நலனில் கடுகளவு கூட அக்கறை இல்லை – செல்வப்பெருந்தகை குற்றச்சாட்டு

    June 28, 2025
    மாநிலம்

    புதுச்சேரி பாஜகவில் பிளவை தடுக்க 3 எம்எல்ஏக்கள் ராஜினாமா – சாய் சரவணக்குமார் ஆதரவாளர்கள் எதிர்ப்பு

    June 28, 2025
    மாநிலம்

    கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தில் 72,081 வீடுகள் கட்டி முடிக்கப்பட்டுள்ளன: ஊரக வளர்ச்சித்துறை

    June 28, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • ”தமிழகத்தில் ஆதிதிராவிடர் பள்ளிகளில் 20% ஆசிரியர்கள் இல்லை” – நயினார் நாகேந்திரன்
    • உலகின் 7 அதிசயங்கள், அவை எங்கே அமைந்துள்ளன
    • உபரி நீர் திறப்பு அதிகரிப்பு: காவிரி கரையோர 11 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை
    • உலகின் 10 பழமையான நகரங்கள் மற்றும் அவை ஏன் பார்வையிடத்தக்கவை
    • தலைமை ஆசிரியர் பதவி உயர்வில் இடஒதுக்கீடு – மாற்றுத் திறனாளி ஆசிரியர்கள் விவரம் சேகரிப்பு

    Recent Comments

    No comments to show.

    Archives

    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.