Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Wednesday, July 2
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»மாநிலம்»நாம் தமிழர் கட்சிக்கு விவசாயி சின்னம்: தேர்​தல் ஆணை​யம் ஒதுக்கீடு
    மாநிலம்

    நாம் தமிழர் கட்சிக்கு விவசாயி சின்னம்: தேர்​தல் ஆணை​யம் ஒதுக்கீடு

    adminBy adminMay 11, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    நாம் தமிழர் கட்சிக்கு விவசாயி சின்னம்: தேர்​தல் ஆணை​யம் ஒதுக்கீடு
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    நாம் தமிழர் கட்சிக்கு மீண்டும் விவசாயி சின்னத்தை இந்திய தேர்தல் ஆணையம் ஒதுக்கியுள்ளதாக சீமான் தெரிவித்துள்ளார். ஒதுக்கப்பட்ட விவசாயி சின்னத்தில் கரும்புக்கு பதிலாக ஏர் கலப்பை இடம்பெற்றுள்ளது.

    நாம் தமிழர் இயக்கமாக இருந்ததை, கடந்த 2010-ம் ஆண்டு நாம் தமிழர் கட்சியாக மாற்றி, கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளராக சீமான் செயல்பட்டு வருகிறார். நாம் தமிழர் கட்சி, இதுவரை போட்டியிட்ட அனைத்து தேர்தல்களிலும் தோல்வியை சந்தித்து வந்தாலும், வாக்கு சதவீதம் மட்டும் ஒவ்வொரு முறையும் அதிகரித்து வந்துள்ளது.

    அதேநேரத்தில் அங்கீகரிக்கப்படாத கட்சியாகவும் இருந்து வந்தது. தேர்தல் ஆணைய விதிப்படி, அங்கீகரிக்கப்பட்ட கட்சியாக மாற, சட்டப்பேரவை தேர்தலில் 6 சதவீத வாக்குகளுடன் 2 சட்டப்பேரவை தொகுதிகளில் வெற்றிப் பெற வேண்டும். அல்லது சட்டப்பேரவைத் தொகுதிகளில் மொத்த தொகுதிகளில் 3 சதவீத இடங்களை பெற வேண்டும். அல்லது மக்களவைத் தேர்தலில் 6 சதவீத வாக்குகளுடன் ஒரு மக்களவை தொகுதியில் வெற்றிப் பெற வேண்டும். அல்லது 8 சதவீத வாக்குகளை பெற வேண்டும். இந்நிலையில், கடந்த சட்டப்பேரவை தேர்தலில் நாம் தமிழர் கட்சி 6.58 சதவீத வாக்குகளை மட்டும் பெற்றது. இதனால் அக்கட்சிக்கு அங்கீகாரம் கிடைக்கவில்லை. இதனால், அக்கட்சியின் கரும்பு விவசாயி சின்னம் பறிபோனது மட்டுமில்லாமல், மக்களவைத் தேர்தலில் அவர்கள் கேட்ட சின்னமும் கிடைக்கவில்லை. ‘மைக்’ சின்னம் கிடைத்தது.

    இந்நிலையில், கடந்த மக்களவைத் தேர்தலில் 8.22 சதவீத வாக்குகளை பெற்று அங்கீகரிக்கப்பட்ட கட்சி என்ற அந்தஸ்துக்கு நாம் தமிழர் உயர்ந்தது. இதையடுத்து, கடந்த ஜனவரி மாதம் நாம் தமிழர் கட்சிக்கு மாநில கட்சி அங்கீகாரத்தை தேர்தல் ஆணையம் வழங்கியது. இதனால், விவசாயி அல்லது புலி சின்னம் தங்களுக்கு ஒதுக்க வேண்டும் என நாம் தமிழர் கட்சி சார்பில் தேர்தல் ஆணையத்திடம் முறையிடப்பட்டது.

    ஆனால், அந்த சின்னம் வேறு மாநில கட்சியான பாரதிய மக்கள் ஐக்கிய கட்சிக்கு ஒதுக்கப்பட்டிருந்ததால் நாம் தமிழர் கட்சிக்கு அச்சின்னத்தை ஒதுக்க முடியாது என தேர்தல் ஆணையம் அறிவித்தது. இந்நிலையில், விவசாயி சின்னத்தில் மாற்றங்கள் செய்து வழங்கினால் அச்சின்னத்தை ஒதுக்க பரிசீலிக்கப்படும் என தேர்தல் ஆணையம் தெரிவித்ததாக கூறப்படுகிறது.

    இதையடுத்து, நாம் தமிழர் கட்சி சார்பில் ஏற்கெனவே இருந்த கரும்பு விவசாயி சின்னத்தில் சிறிய மாற்றம் செய்து, கரும்புக்கு பதிலாக ஏர் கலப்பையுடன் விவசாயி இருப்பதுபோல் சின்னம் வடிவமைக்கப்பட்டு தேர்தல் ஆணையத்தில் வழங்கப்பட்டது. இந்நிலையில், ஏர் கலப்பை விவசாயி சின்னத்தை நாம் தமிழர் கட்சிக்கு ஒதுக்கீடு செய்து தேர்தல் ஆணையம் மே.10-ம் தேதி அறிவித்ததாக நாம் தமிழர் கட்சி சீமான் தனது எக்ஸ் தளத்தில் தெரிவித்துள்ளார். நாம் தமிழர் கட்சிக்கு மீண்டும் விவசாயி சின்னம் ஒதுக்கப்பட்டிருப்பதால் தொண்டர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    மாநிலம்

    10 நாட்களில் வன்னியர் இடஒதுக்கீட்டை வழங்க வேண்டும்: அன்புமணி காட்டம்

    July 2, 2025
    மாநிலம்

    பாமக எம்எல்ஏ அருள் கட்சியிலிருந்து நீக்கம்: அன்புமணி அதிரடி நடவடிக்கை

    July 2, 2025
    மாநிலம்

    மருத்துவர் தினத்தையொட்டி 50 மருத்துவர்களுக்கு விருது: அமைச்சர் மா.சுப்பிரமணியன் வழங்கினார்

    July 2, 2025
    மாநிலம்

    தமிழகத்தில் கடந்த 6 மாதங்களில் 2.80 லட்சம் பேர் நாய்க்கடியால் பாதிப்பு

    July 2, 2025
    மாநிலம்

    ஆய்வுகள் முறையாக மேற்கொள்ளாததே பட்டாசு ஆலை விபத்துக்கு காரணம்: எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு

    July 2, 2025
    மாநிலம்

    திமுக எம்.பி. ஆ.ராசாவை கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட முயன்ற பாஜகவினர் கைது

    July 2, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • மும்பை ஐஐடி-ல் சிக்கிய போலி மாணவர்
    • 10 நாட்களில் வன்னியர் இடஒதுக்கீட்டை வழங்க வேண்டும்: அன்புமணி காட்டம்
    • உங்கள் வாழ்க்கையை மாற்றும் 10 தலாய் லாமா மேற்கோள்கள்
    • ஜூலை 4 அன்று விண்வெளியில் இருந்து மாணவர்கள் மற்றும் இஸ்ரோ விஞ்ஞானிகளுடன் தொடர்பு கொள்ள சுபன்ஷு சுக்லா தயாராக இருக்கிறார் | – தி டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • திடீர் மாரடைப்பு மரணங்களுக்கு காரணம் கோவிட் தடுப்பூசியா: ஐசிஎம்ஆர், எய்ம்ஸ் ஆய்வு முடிவுகள் சொல்வது என்ன?

    Recent Comments

    No comments to show.

    Archives

    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.