Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Friday, August 22
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»மாநிலம்»நாமக்கல் சிறுநீரக திருட்டு புகார் எதிரொலி: உடல் உறுப்பு மாற்று ஒப்புதல் குழுவை கலைக்க தமிழக அரசு முடிவு
    மாநிலம்

    நாமக்கல் சிறுநீரக திருட்டு புகார் எதிரொலி: உடல் உறுப்பு மாற்று ஒப்புதல் குழுவை கலைக்க தமிழக அரசு முடிவு

    adminBy adminAugust 22, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    நாமக்கல் சிறுநீரக திருட்டு புகார் எதிரொலி: உடல் உறுப்பு மாற்று ஒப்புதல் குழுவை கலைக்க தமிழக அரசு முடிவு
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    மதுரை: நாமக்​கல் சிறுநீரக திருட்டு புகாரையடுத்​து, தற்​போதுள்ள உடல் உறுப்பு மாற்று ஒப்​புதல் குழுவை கலைத்​து​விட்​டு, புதிய குழு அமைக்க நடவடிக்கை எடுக்​கப்​பட்​டுள்​ள​தாக உயர் நீதி​மன்​றத்​தில் தமிழக அரசு சார்​பில் தெரிவிக்​கப்​பட்​டது. பரமக்​குடியைச் சேர்ந்த சத்​தீஸ்​வரன், உயர் நீதி​மன்ற மதுரை அமர்​வில் தாக்​கல் செய்த மனு​வில் கூறி​யிருப்​ப​தாவது: நாமக்​கல் மாவட்​டம் பள்​ளிப்​பாளை​யத்​தில் விசைத்​தறித் தொழிலா​ளர்​கள், ஏழை தொழிலா​ளர்​களின் சிறுநீரகங்கள் திருடப்பட்டுள்ளன.

    இருப்​பினும் சிறுநீரகத் திருட்டு தொடர்​பாக தமிழக அரசு இது​வரை எந்த நடவடிக்​கை​யும் எடுக்​க​வில்​லை. இந்த விவ​காரத்​தில் அரசி​யல் கட்​சி​யினருக்கு தொடர்​புள்​ளது. இதனால் மாநில போலீ​ஸார் விசா​ரித்​தால் உண்மை வெளிவ​ராது. எனவே, சிறுநீரக திருட்டு தொடர்​பாக சிபிஐ விசா​ரணைக்கு மாற்றி உத்​தர​விட வேண்​டும். இவ்​வாறு மனு​வில் கூறப்​பட்​டிருந்​தது.

    இந்த மனு, நீதிப​தி​கள் எஸ்​.எம்​.சுப்​பிரமணி​யம், ஜி.அருள் முரு​கன் அமர்​வில் விசா​ரணைக்கு வந்​தது. ஊரக சுகா​தா​ரச் சேவை​கள் இயக்​குநர் பதில் மனு தாக்​கல் செய்​தார். அதில், “சிறுநீரகத் திருட்டு தொடர்​பாக தமிழ்​நாடு சுகா​தார சேவைத் திட்ட இயக்​குநர் வினித் தலை​மையி​லான குழு விசா​ரணை நடத்​தி​யது. பெரம்​பலூர் தனலட்​சுமி னி​வாசன் மருத்​து​வக் கல்​லூரி மருத்​து​வ​மனை மற்​றும் திருச்சி கேத்​தார் மருத்​து​வ​மனை​யின் உரிமம் ரத்து செய்​யப்​பட்​டுள்​ளது. இது தொடர்​பாக ஆனந்​தன், ஸ்டான்லி மோகன் ஆகிய இரு தரகர்​கள் கைது செய்​யப்​பட்​டுள்​ளனர்.

    இந்​தச் சம்​பவத்​தையடுத்து உறுப்பு மாற்று அறுவை சிகிச்​சைக்கு ஒப்​புதல் வழங்​கும் ஒப்​புதல் குழு இனிவரும் காலங்​களில் முறை​யாக வீடியோ பதிவு செய்​ய​வும், முறை​கேட்​டில் தொடர்​புடைய அலு​வலர்​கள் மீது துறை ரீதி​யான நடவடிக்கை எடுக்​க​வும் பரிந்​துரை செய்​யப்பட்​டுள்​ளது. தற்​போதுள்ள உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை ஒப்​புதல் குழு கலைக்​கப்​பட்டு புதிய குழு அமைக்க நடவடிக்கை எடுக்​கப்​பட்​டுள்​ளது” என தெரிவிக்​கப்​பட்​டது.

    இதையடுத்து நீதிப​தி​கள், “சிறுநீரகத் திருட்டு குற்​றச்​சாட்டை முறை​யாக விசா​ரிக்க வேண்​டும். சட்​ட​விரோத​மாக உடல் உறுப்​பு​களை விற்​பனை செய்​வது தண்​டனைக்​குரிய குற்​றம்” என்று தெரி​வித்​தனர். தனி​யார் மருத்​து​வ​மனை சார்​பில் ஆஜரான வழக்​கறிஞர், “உடல் உறுப்பு விற்​பனை​யில் மருத்​து​வ​மனை​யின் பங்கு இல்​லை. உடல் உறுப்பு தானத்​துக்கு ஒப்​புதல் வழங்​கும் குழு அனு​மதி வழங்​கி​னால் மட்​டுமே உடல் உறுப்பு தான அறுவை சிகிச்சை நடை​பெறுகிறது” என்​றார்.

    பின்​னர் நீதிப​தி​கள், “மருத்​து​வ​மனை நிர்​வாகத்​துக்கு தொடர்பு இல்லை என்​பதை ஏற்க முடி​யாது. மருத்​து​வ​மனை நியமிக்​கும் மருத்​து​வர்​கள்​தான் அறுவை சிகிச்சை மேற்​கொள்​கின்​றனர். ஒவ்​வொரு மருத்​து​வ​மனை​யும் சிறப்​பாக சிகிச்சை அளிப்​ப​தாக​வும், சிறப்பு மருத்​துவ நிபுணர்​கள் பணி​யில் இருப்​ப​தாக​வும் விளம்​பரம் செய்​கிறது. அதை நம்பி சிகிச்​சைக்கு வரும் நோயாளி​களுக்கு ஏதாவது நடந்​தால் அதற்கு அங்கு பணிபுரி​யும் மருத்​து​வர்​கள்​தான் பொறுப்​பு.

    எனவே, அனைத்​துக் கோணத்​தி​லும் விசா​ரணை நடத்த வேண்​டும். பாதிக்​கப்​பட்​டோர் அளித்த புகாரின் பேரில் விசா​ரணை நடத்​தி, முகாந்​திரம் இருக்​கும் நிலை​யில் வழக்​குப் பதிவு செய்து விசா​ரணை​யைத் தொடர வேண்​டும். விசா​ரணை ஆக. 25-க்கு தள்​ளிவைக்​கப்​படு​கிறது” என உத்​தர​விட்​டனர்.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    மாநிலம்

    விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு சென்னையில் சிலைகள் வைக்க 11 கட்டுப்பாடுகள் விதிப்பு

    August 22, 2025
    மாநிலம்

    நெல்லையில் இன்று பாஜக பூத் கமிட்டி மண்டல மாநாடு: அமித் ஷா பங்கேற்பு

    August 22, 2025
    மாநிலம்

    சென்னையில் கனமழை: தாழ்வான பகுதிகளில் தேங்கிய மழைநீர்

    August 22, 2025
    மாநிலம்

    சாலைகளில் வைக்கப்பட்டுள்ள விளம்பர தடுப்புகளை அகற்றக் கோரி வழக்கு: நெடுஞ்சாலை துறை பதில் அளிக்க உத்தரவு

    August 22, 2025
    மாநிலம்

    முன்னாள் வீரர்களின் குறைகளைக் கேட்டறிய ராணுவத்தினர் இருசக்கர வாகனப் பேரணி

    August 22, 2025
    மாநிலம்

    சினிமாவில் சம்பாதித்துவிட்டு ஓய்வுபெறும் வயதில் சிலர் கட்சி தொடங்குகின்றனர்: இபிஎஸ் விமர்சனம்

    August 22, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • சியா விதைகள் உண்மையில் ஆரோக்கியமானதா? ஹார்வர்ட் பயிற்சி பெற்ற இரைப்பை குடல் ஆய்வாளர் உண்மைகளையும் புராணங்களையும் விளக்குகிறார் | – டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • வாட்ச்: சுபன்ஷு சுக்லா ‘பாரத் ஃப்ரம் ஸ்பேஸ்’ இன் டைமலேப்ஸ் வீடியோவைப் பகிர்ந்து கொள்கிறார்; சுற்றுப்பாதையில் சூரிய உதயத்தை பிடிக்கிறது ‘| இந்தியா செய்தி – டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • வெளிமாநில தமிழ்ச் சங்கங்களுக்கு தமிழ்நாடு அரசு பாடநூல்கள் தொடர்ந்து இலவசம்
    • மாநில கிரிக்கெட் வாரியங்களுக்கு பிசிசிஐ கண்டிப்பு – பின்னணி என்ன?
    • விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு சென்னையில் சிலைகள் வைக்க 11 கட்டுப்பாடுகள் விதிப்பு

    Recent Comments

    No comments to show.

    Archives

    • August 2025
    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.