Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Sunday, September 21
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»மாநிலம்»“நான் மக்கள் சக்தியின் பிரதிநிதி, மாபெரும் கட்சியின் தலைவன்” – திமுகவுக்கு விஜய் பகிரங்க சவால்
    மாநிலம்

    “நான் மக்கள் சக்தியின் பிரதிநிதி, மாபெரும் கட்சியின் தலைவன்” – திமுகவுக்கு விஜய் பகிரங்க சவால்

    adminBy adminSeptember 21, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    “நான் மக்கள் சக்தியின் பிரதிநிதி, மாபெரும் கட்சியின் தலைவன்” – திமுகவுக்கு விஜய் பகிரங்க சவால்
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    நாகப்பட்டினம் / திருவாரூர்: பூச்​சாண்டி வேலை காட்ட வேண்​டாம். வரும் தேர்​தலில் நீங்​களா, நானா என்று பார்த்து விடலாம் என்று திமுக​வுக்கு தவெக தலை​வர் விஜய் சவால் விடுத்​தார்.

    நாகை புத்​தூர் அண்ணா சிலை அருகே திரண்​டிருந்த தொண்​டர்​கள் மத்​தி​யில் தவெக தலை​வர் விஜய் நேற்று பேசி​ய​தாவது: தமிழகத்​தில் மீன் ஏற்​றும​தி​யில் 2-வது இடத்​தில் இருக்​கும் நாகை​யில், நவீன வசதி​யுடன் மீன்​களை பதப்​படுத்​தும் தொழிற்​சாலைகள் இல்​லை. மீனவ மக்​கள் வசிக்​கும் பகு​தி​களில் அடிப்​படை வசதி​கள் இல்​லை.

    இலங்கை கடற்​படை​யால் தமிழக மீனவர்​கள் தாக்​கப்​படு​வதை கண்​டித்து குரல் கொடுப்​பது நமது கடமை. நாகை​யில் 14 ஆண்​டு​களுக்கு முன்பு மீனவர்​கள் தாக்​கப்​பட்​டதை கண்​டித்து பொதுக்​கூட்​டம் நடத்​தினோம். நான் எப்​போதும் மக்​களு​டன்​தான் இருக்​கிறேன். அதே​நேரத்​தில், ஈழத் தமிழர்​களுக்​காக துணை நிற்​பதும் நமது கடமை. மீனவர் பிரச்​சினை​யில் திமுக​தான் கபட நாடகம் நடத்​துகிறது.

    வெளி​நாட்​டில் முதலீ​டா? – தமிழக முதல்​வர் ஒவ்​வொரு முறை வெளி​நாடு பயணம் சென்​று​விட்டு வரும்​போதெல்​லாம், பல ஆயிரம் கோடி முதலீடு என்று சொல்​கிறார். அவர் மனதை தொட்டு சொல்​லட்​டும், வெளி​நாட்டு முதலீடா இல்லை வெளி​நாட்​டில் முதலீ​டா? ஒட்​டுமொத்த தமிழகத்​துக்கு முதலீ​டா? உங்​கள் குடும்​பத்​தின் முதலீ​டா? மக்​களுக்கு தொந்​தர​வு இருக்​கக் கூடாது என்​ப​தற்​காகத்​தான் வார இறு​தி​நாளில் சந்​திக்க வரு​கிறேன். அரசி​யலில் சிலருக்கு ஓய்வு கொடுப்​ப​தற்​காக​வும்​தான் ஓய்வு நாளில் வரு​கிறேன். ஆனால், மக்​களை சந்​திக்க எவ்​வளவு கட்​டுப்​பாடு​கள்? அரியலூரில் மின்​சா​ரத்தை நிறுத்​தி​விட்​டனர். திருச்​சி​யில் ஸ்பீக்​கர் வயர் கட்​டாகி​விட்​டது.

    இதே​போல, ஆர்​எஸ்​எஸ் தலை​வர், பிரதமர் மோடி அல்​லது உள்​துறை அமைச்​சர் வந்​தால் கட்​டுப்​பாடு​கள் விதிப்​பீர்​களா? மின்​சாரத்தை நிறுத்​து​வீர்​களா? நிறுத்த மாட்​டீர்​கள். நீங்​கள் அவர்​களது மறை​முக உறவுக்​காரர்​கள்.

    நேரடி​யாகவே கேட்​கிறேன்… முதல்​வரை நேரடி​யாகவே கேட்​கிறேன். நீங்​கள் மிரட்​டிப் பார்க்​கிறீர்​களா? குடும்​பத்தை வைத்து கொள்​ளை​யடிக்​கும் உங்​களுக்கே இவ்​வளவு இருந்​தால், சொந்​த​மாக உழைத்து சம்​பா​திக்​கும் எனக்கு எவ்​வளவு இருக்​கும்? மக்​களை சந்​திக்க நான் கேட்​கும் இடத்​துக்கு அனு​மதி தராமல், நெருக்​கடி​யாக உள்ள இடத்தை தரு​கிறீர்​கள். இந்த அடக்​கு​முறை, அராஜகம் தவறு. நான் மக்​கள் சக்​தி​யின் பிர​தி​நி​தி, மாபெரும் கட்​சி​யின் தலை​வன்.

    2026-ல் திமுக​வுக்​கும், தவெக​வுக்​கும்​தான் போட்​டி. இந்த பூச்​சாண்டி வேலை​யெல்​லாம் வேண்​டாம். தில்​லாக, கெத்​தாக, நேர்​மை​யாக தேர்​தலை சந்​திக்க வாருங்​கள், நீங்​களா அல்​லது நானா என்று பார்த்​து​விடலாம். இவ்​வாறு அவர் பேசி​னார்.

    மூட்​டைக்கு ரூ.40 கமிஷன்: தொடர்ந்​து, திரு​வாரூர் தெற்கு வீதி​யில் விஜய் பேசும்​போது, “திரு​வாரூர் சொந்த மாவட்​டம் என்​கிறார்​கள். ஆனால், திரு​வாரூர் கரு​வா​டாக காய்​கிறது. சாலை வசதி இல்​லை. இங்​குள்ள அமைச்​சருக்கு முதல்​வரின் குடும்​பத்​துக்கு சேவை செய்​வது​தான் வேலை​யாக உள்​ளது. நெல் கொள்​முதல் மையங்​களில் ஒரு மூட்​டைக்கு ரூ.40 கமிஷன் வாங்​கு​கிறார்​கள். அந்த வகை​யில், பல கோடி ரூபாயை விவ​சா​யிகளிட​மிருந்து பிடுங்கி உள்​ளனர்.

    கல்​வி, மருத்​து​வம், ரேஷன், வறுமை இல்​லாத தமிழகம், குடும்ப ஆதிக்​கம் இல்​லாத தமிழகம், ஊழல் இல்​லாத தமிழகம், உண்​மை​யான மக்​களாட்​சி​தான் தவெக​வின் நோக்​கம்” என்றார்​.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    மாநிலம்

    சுரண்டை அருகே குளத்தில் தண்ணீர் எடுக்கும் விவகாரம்: அதிமுக எம்எல்ஏ தலைமையில் பொதுமக்கள் சாலை மறியல்

    September 21, 2025
    மாநிலம்

    தூத்துக்குடியில் ரூ.30 ஆயிரம் கோடியில் கப்பல் கட்டும் தளங்கள்: தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா தகவல்

    September 21, 2025
    மாநிலம்

    கடந்த 6 ஆண்டுகளாக வேட்பாளர்களை நிறுத்தாத காரணத்தால் மமக, கொமதேக உள்ளிட்ட 42 கட்சிகளின் பதிவு ரத்து

    September 21, 2025
    மாநிலம்

    அக்.1 முதல் நயினார் நாகேந்திரன் யாத்திரை: பாஜக மாநில பொதுச் செயலாளர் கருப்பு முருகானந்தம் தலைமையில் குழு

    September 20, 2025
    மாநிலம்

    சிறுபான்மையினர் நலத்திட்டங்களை ஆய்வு செய்ய சிறப்புக் குழு

    September 20, 2025
    மாநிலம்

    ரூ.105 கோடி இன்சூரன்ஸ் மோசடிகளை விசாரிக்க உத்தரவு

    September 20, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • ஸ்ரீ சாரதா நவராத்திரி விழாவை முன்னிட்டு காஞ்சி மடத்தின் பீடாதிபதிகள் பட்டினப்பிரவேசம்
    • சுரண்டை அருகே குளத்தில் தண்ணீர் எடுக்கும் விவகாரம்: அதிமுக எம்எல்ஏ தலைமையில் பொதுமக்கள் சாலை மறியல்
    • ஹெரிடேஜ் நிறுவன பங்கு விலை உயர்வால் சந்திரபாபு மனைவியின் சொத்து ஒரே நாளில் ரூ.121 கோடி உயர்வு
    • எச்1பி விசா கட்டணம் ரூ.88 லட்சமாக அதிகரிப்பு: அமெரிக்காவில் இன்று முதல் அமலுக்கு வருகிறது – முழு விவரம்!
    • தமிழகம் முழுவதும் இருந்து வைணவ கோயில்களுக்கு 500 பக்தர்கள் ஆன்மிக பயணம்

    Recent Comments

    No comments to show.

    Archives

    • September 2025
    • August 2025
    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.