Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Friday, July 18
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»மாநிலம்»‘நான்கரை ஆண்டுகளில் கிடைக்காத தீர்வு 45 நாட்களில் கிடைக்கும் என்பது நகைச்சுவை’ – டிட்டோ ஜேக் நிர்வாகி பேச்சு
    மாநிலம்

    ‘நான்கரை ஆண்டுகளில் கிடைக்காத தீர்வு 45 நாட்களில் கிடைக்கும் என்பது நகைச்சுவை’ – டிட்டோ ஜேக் நிர்வாகி பேச்சு

    adminBy adminJuly 18, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    ‘நான்கரை ஆண்டுகளில் கிடைக்காத தீர்வு 45 நாட்களில் கிடைக்கும் என்பது நகைச்சுவை’ – டிட்டோ ஜேக் நிர்வாகி பேச்சு
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    சிவகங்கை: நான்கரை ஆண்டுகளில் கிடைக்காத தீர்வு 45 நாட்களில் கிடைக்கும் என்பது நகைச்சுவையாக உள்ளது என தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி மாநில பொதுச் செயலாளரும், டிட்டோ ஜேக் மாநில உயர்மட்டக் குழு உறுப்பினருமான ச.மயில் தெரிவித்தார்.

    சிவகங்கையில் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது, “நாங்கள் வைத்துள்ள 10 அம்சக் கோரிக்கைகளும் புதிதாக வைக்கப்பட்டவை அல்ல. எங்களிடமிருந்து பல உரிமைகளை ஒவ்வொன்றாக திமுக அரசு பறித்து கொண்டே செல்கிறது.

    ஐஏஎஸ் அதிகாரிகள் வெளியிட்ட அரசாணைகளுக்கு புறம்பாக, பள்ளிக்கல்வித்துறையில் இருக்கும் அதிகாரிகள் செயல்முறை ஆணைகளை வெளியிட்டு வருகின்றனர். ஒரு சாதாரண எழுத்தர் கூட ஆசிரியர்கள் பெற்று வந்த ஊதியத்திற்கு தணிக்கை தடை விதிக்கிறார்.

    25 ஆண்டுகளாக பெற்று வந்த ஊதியத்தை திடீரென தவறு என்று கூறி, ரூ.20 லட்சம் முதல் ரூ.25 லட்சம் வரை திரும்பச் செலுத்த சொல்கின்றனர். இதனால் ஆயிரக்கணக்கான ஆசிரியர்கள் ஓய்வூதிய பலன்களை பெற முடியாமல் ரத்தக் கண்ணீர் வடிக்கின்றனர்.

    தற்போது திமுக அரசு, ‘உங்களுடன் ஸ்டாலின்’ என்ற திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. இதை நாங்கள் வரவேற்கிறோம். அந்த திட்டத்தில் மனு கொடுத்தால் 45 நாட்களில் தீர்வு கிடைக்கும் என்று கூறுகின்றனர். நாங்கள் நான்கரை ஆண்டுகளாக அரசிடம் மனு கொடுத்து கொண்டிருக்கிறோம். எட்டு முறை முதல்வரை சந்தித்து பேசியிருக்கிறோம். அமைச்சர்கள், அதிகாரிகளிடம் பலமுறை கூறி இருக்கிறோம். ஆனால் இதுவரை எங்களுடைய கோரிக்கைகளுக்கு எந்தத் தீர்வும் கிடைக்கவில்லை.

    ஒருவேளை உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தில் மனு கொடுத்தால் நடக்குமோ? என்னமோ? மேலும் நான்கரை ஆண்டுகளாக கிடைக்காத தீர்வு 45 நாட்களில் கிடைக்கும் என்பது நகைச்சுவையாக உள்ளது. ‘ஓரணியில் தமிழ்நாடு; என்று முதல்வர் சொல்வது போல, எங்களுடைய பாதிப்புகளை கேட்பதற்காக அனைத்து இயக்கங்களும் ஓரணியில் திரண்டு போராடுகிறோம்.

    ஆசிரியர்கள், அரசு ஊழியர்களுக்கு கொடுத்த தேர்தல் வாக்குறுதிகளில் ஒன்றை கூட நிறைவேற்றவில்லை. நாங்கள் ஓய்வூதியம் கேட்டால், முன்னாள் எம்எல்ஏக்களுக்கு 2 முறை ஓய்வூதியத்தை உயர்த்திவிட்டனர். ஆசிரியர்கள் ஓய்வுக்கு பின்னர் பிச்சை தான் எடுக்க வேண்டும். சபாநாயகர் அப்பாவு, முன்னாள் எம்எல்ஏக்கள் சட்டை பட்டன் கூட இல்லாமல் கஷ்டப்படுகின்றனர். அதனால் அவர்களுக்கு ஓய்வூதியத்தை உயர்த்த வேண்டும் என்கிறார். சட்டையே இல்லாமல் இருக்கும் ஆசிரியர்களுக்கு என்ன கோரிக்கை வைப்பது. எங்களது கோரிக்கைகளை அலட்சியம் செய்தால் ஆக.8-ம் தேதி சென்னையில் கோட்டையை முற்றுகையிடுவோம்” இவ்வாறு அவர் கூறினார்.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    மாநிலம்

    திருவள்ளூரில் சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை: தமிழிசை சரமாரி கேள்வி

    July 18, 2025
    மாநிலம்

    ‘ஓரணியில் தமிழ்நாடு’ உறுப்பினர் சேர்க்கையில் ஆதார் விவரம் சேகரிக்க தடை கோரி வழக்கு!

    July 18, 2025
    மாநிலம்

    தவெகவில் அதிக உறுப்பினர்களை சேர்க்கும் நிர்வாகிகள் வீட்டுக்கு நேரில் சென்று கவுரவிக்க விஜய் திட்டம்

    July 18, 2025
    மாநிலம்

    மதுரை அருகே வரதட்சணை கேட்டு மனைவியை கொடூரமாக தாக்கிய காவலர்: அதிர்ச்சி ஆடியோ வைரல்

    July 18, 2025
    மாநிலம்

    “ஆட்சிக்கு வருவோமென்று இபிஎஸ் பொய் சொல்லி வருகிறார்” – அமைச்சர் ஐ.பெரியசாமி

    July 18, 2025
    மாநிலம்

    பொதுக்கூட்ட பேச்சுக்காக அவதூறு வழக்கு: நீதிமன்றத்தில் ஆஜராவதில் இருந்து திருமாவளவனுக்கு விலக்கு

    July 18, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • திருவள்ளூரில் சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை: தமிழிசை சரமாரி கேள்வி
    • வீக்கத்திற்கு என்ன காரணம்: வீக்கத்தைக் குறைக்க உதவும் உணவுகள் மற்றும் உதவிக்குறிப்புகளைக் கண்டறியவும் | – டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • ‘ஓரணியில் தமிழ்நாடு’ உறுப்பினர் சேர்க்கையில் ஆதார் விவரம் சேகரிக்க தடை கோரி வழக்கு!
    • சைவ உணவுக்கு மாற்றுவது நீரிழிவு மற்றும் எடை இழப்பை நிர்வகிக்க உதவும்: ஆய்வு | – டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • அடுத்த வீரர் உள்நாட்டு விண்கலத்தில் பயணம் செய்வார்: மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் தகவல்

    Recent Comments

    No comments to show.

    Archives

    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.