Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Sunday, July 27
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»மாநிலம்»”நாட்டின் வளர்ச்சி என்ற பெயரில் அதானி, அம்பானிக்காக பாஜக அரசு சட்டங்களை இயற்றுகிறது” – திருமாவளவன் குற்றச்சாட்டு
    மாநிலம்

    ”நாட்டின் வளர்ச்சி என்ற பெயரில் அதானி, அம்பானிக்காக பாஜக அரசு சட்டங்களை இயற்றுகிறது” – திருமாவளவன் குற்றச்சாட்டு

    adminBy adminMay 1, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    ”நாட்டின் வளர்ச்சி என்ற பெயரில் அதானி, அம்பானிக்காக பாஜக அரசு சட்டங்களை இயற்றுகிறது” – திருமாவளவன் குற்றச்சாட்டு
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    சென்னை: “உழைக்கும் மக்களின் உரிமைகள் மென்மேலும் நசுக்கப்படும் நிலை தொடர்கிறது. தரகு முதலாளிகளும் பன்னாட்டு நிறுவன பெருமுதலாளிகளும் வலுப்பெற்று வருகின்றனர். அதானிகளும் அம்பானிகளும் இங்கே தனிப்பெரும் முதலாளிகளாக வளர்ந்துள்ளனர். அவர்களுக்காகவே இங்குள்ள பாஜக அரசு கொள்கைகளை வரையறுத்து, சட்டங்களை இயற்றி, நாட்டின் வளர்ச்சிக்காக என நடைமுறைப்படுத்தி வருகிறது,” என்று விசிக தலைவர் திருமாவளவன் சாடியுள்ளார்.

    இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: “உழைப்பைப் போற்றும் உன்னத நாளான மே நாளில் உலகத் தொழிலாளர்கள் யாவருக்கும் விசிக சார்பில் நெஞ்சார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறோம். உழைக்கும் மக்களுக்கு எதிரான சுரண்டல் கொடுமை உலகெங்கும் காலமெல்லாம் தொடர்கிறது. அதனை எதிர்த்து உழைக்கும் வர்க்கமும் இடையறாது போராடிக் கொண்டே உள்ளது.

    முதலாளித்துவம் வல்லரசியமாகப் பரிணாம வளர்ச்சியுடைந்துள்ளது. ஜனநாயகம் சமூகநீதி போன்றவற்றை உள்வாங்கிக் கொண்டே, முதலாளித்துவம் உழைக்கும் மக்களின் மீதான சுரண்டலையும் ஒடுக்குமுறைகளையும் புதிய புதிய வடிவங்களில் தீவிரப்படுத்தி வருகிறது. உழைக்கும் மக்களின் உரிமைகள் மென்மேலும் நசுக்கப்படும் நிலை தொடர்கிறது. தரகு முதலாளிகளும் பன்னாட்டு நிறுவன பெருமுதலாளிகளும் வலுப்பெற்று வருகின்றனர்.

    இந்தியாவிலும் இந்நிலையைத் தெளிவுறக் காணமுடிகிறது. குறிப்பாக, கார்ப்பரேட் முதலாளித்துவம் வளர்ச்சியடைந்து வருகிறது. அதானிகளும் அம்பானிகளும் இங்கே தனிப்பெரும் முதலாளிகளாக வளர்ந்துள்ளனர். அவர்களுக்காகவே இங்குள்ள பாஜக அரசு கொள்கைகளை வரையறுத்து, சட்டங்களை இயற்றி, நாட்டின் வளர்ச்சிக்காக என நடைமுறைப்படுத்தி வருகிறது.

    ஏற்கெனவே நடைமுறையிலிருந்த நாற்பத்து நான்கு வகை தொழிலாளர் நலச் சட்டங்களையெல்லாம் நான்குச் சட்டங்களாகத் தொகுத்துள்ளது. இவை நான்கும் கார்ப்பரேட் நிறுவனங்களின் நலன்களை முன்னிறுத்தியே உருவாக்கப்பட்டுள்ளன. ஆலைத் தொழிலாளர்கள் மட்டுமின்றி, விவசாயத் தொழிலாளர்கள் உள்ளிட்ட அமைப்புச்சாரா தொழிலாளர்கள் அனைத்து உழைக்கும் வர்க்கத்தினரையும் ஒடுக்கி முடக்கும் வகையில் இன்றைய பாஜக அரசு இயங்கிவருகிறது.

    கார்ப்பரேட் நிறுவனங்கள் உள்ளிட்ட அனைத்துப் பன்னாட்டு நிறுவனங்களுக்கும் பாதுகாவலர்களாக இந்திய ஆட்சியாளர்கள் பணியாற்றி வருகின்றனர். இத்தகைய சூழலில், இந்திய தொழிலாளர் வர்க்கம் உள்ளிட்ட அனைத்து உழைக்கும் மக்கள் யாமனைவரும் ஒருங்கிணைந்து அடிப்படை உரிமைகளுக்காகவும் வாழ்வாதாரங்களுக்காகவும் போராட உறுதியேற்போம். உழைக்கும் மக்களை ஒருங்கிணைப்போம். சுரண்டிக் கொழுக்கும் அரசியலுக்குக் குழிபறிப்போம்,” என்று அவர் கூறியுள்ளார்.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    மாநிலம்

    “சர்வாதிகாரத்துக்கு துணை போகிறது திமுக அரசு” – காங். ஆர்ப்பாட்டத்தில் திருச்சி வேலுச்சாமி காட்டம்

    July 27, 2025
    மாநிலம்

    முதல்வர் ஸ்டாலின் தனியார் மருத்துவமனை சென்றது ஏன்? – தமிழிசைக்கு மா.சுப்பிரமணியன் பதில்

    July 27, 2025
    மாநிலம்

    முதல்வர் பதவியில் அதிக நாட்கள் – பழனிசாமியை முந்திய மு.க.ஸ்டாலின்!

    July 27, 2025
    மாநிலம்

    இடைநிலை ஆசிரியர்களுக்கு சம ஊதியம் வழங்க ஓபிஎஸ் வலியுறுத்தல்

    July 27, 2025
    மாநிலம்

    சென்னை உயர் நீதிமன்றத்துக்கான ஆர்டிஐ இணையதள முகவரி அறிவிப்பு

    July 27, 2025
    மாநிலம்

    திருப்பூர் அடுக்குமாடி குடியிருப்பில் அடுக்கடுக்கான பிரச்சினைகள்!

    July 27, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • “சர்வாதிகாரத்துக்கு துணை போகிறது திமுக அரசு” – காங். ஆர்ப்பாட்டத்தில் திருச்சி வேலுச்சாமி காட்டம்
    • ஆப்டிகல் மாயை: சிறந்த கண்பார்வை மற்றும் ஆக்கபூர்வமான சிந்தனை கொண்ட ஒருவர் மட்டுமே சிறுவனின் அறையில் உள்ள 5 வேறுபாடுகளையும் 10 வினாடிகளில் காணலாம் – இந்தியாவின் டைம்ஸ்
    • கில் 4-வது சதம் விளாசல்: டான் பிராட்மேன், கவாஸ்கர் பட்டியலில் இணைந்தார்!
    • கேங்ஸ்டர் கதையில் ஹீரோவாக நடிப்பதை உறுதி செய்த லோகேஷ் கனகராஜ்!
    • முதல்வர் ஸ்டாலின் தனியார் மருத்துவமனை சென்றது ஏன்? – தமிழிசைக்கு மா.சுப்பிரமணியன் பதில்

    Recent Comments

    No comments to show.

    Archives

    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.