Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Monday, August 4
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»மாநிலம்»‘நலம் காக்கும் ஸ்டாலின்’ திட்டத்தை தற்போதைய பெயரிலேயே தொடர அனுமதி கோரி தமிழக அரசு மனு
    மாநிலம்

    ‘நலம் காக்கும் ஸ்டாலின்’ திட்டத்தை தற்போதைய பெயரிலேயே தொடர அனுமதி கோரி தமிழக அரசு மனு

    adminBy adminAugust 4, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    ‘நலம் காக்கும் ஸ்டாலின்’ திட்டத்தை தற்போதைய பெயரிலேயே தொடர அனுமதி கோரி தமிழக அரசு மனு
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    சென்னை: ‘உங்களுடன் ஸ்டாலின்’, ‘நலம் காக்கும் ஸ்டாலின்’ திட்டங்களை தற்போதைய பெயரிலேயே தொடர்ந்து செயல்படுத்த அனுமதிக்கக் கோரி, தமிழக அரசின் மனு மீதான விசாரணையை சென்னை உயர் நீதிமன்றம், ஆகஸ்ட் 7 ஆம் தேதிக்கு தள்ளிவைத்தது.

    ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்டத்தில் முதல்வரின் பெயரை பயன்படுத்த தடை விதிக்கக் கோரி அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் தாக்கல் செய்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், அரசுத் திட்டங்களின் பெயர்களில் வாழும் ஆளுமைகளின் பெயர்கள் பயன்படுத்த அனுமதிக்க முடியாது எனவும், திட்டம் தொடர்பான விளம்பரங்களில் முன்னாள் முதல்வர், கட்சியின் கொள்கைத் தலைவர்களின் புகைப்படங்கள் இடம் பெறக் கூடாது எனவும் உத்தரவிட்டிருந்தது.

    இந்த உத்தரவை மாற்றியமைக்கக் கோரி, தமிழக பொதுத்துறை செயலாளர் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அந்த மனுவில், மாநில முதல்வர், அரசியல் சாசன அதிகாரி என்பதால், அரசியல் ஆளுமை எனக் கருத முடியாது. முன்னாள் முதல்வர்களின் புகைப்படங்களை பயன்படுத்த உச்ச நீதிமன்றம் தடை விதிக்கவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    ‘உங்களுடன் ஸ்டாலின்’, ‘நலம் காக்கும் ஸ்டாலின்’ போன்ற திட்டங்கள் துவங்கப்பட்டு விட்டதால், இரு திட்டங்களையும் தற்போதைய பெயரிலேயே தொடர அனுமதிக்க வேண்டும் எனக் கேட்டுக் கொள்ளப்பட்டிருந்தது. இந்த மனு, தலைமை நீதிபதி எம்.எம்.ஸ்ரீவஸ்தவா மற்றும் நீதிபதி சுந்தர் மோகன் அமர்வில் விசாரணைக்கு வந்த போது, உயர் நீதிமன்ற இடைக்கால உத்தரவை எதிர்த்து திமுக தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அந்த மனு, ஆகஸ்ட் 6-ம் தேதி விசாரணைக்கு எடுக்கப்பட உள்ளது என, சி.வி.சண்முகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

    இதையடுத்து, உச்ச நீதிமன்றத்தின் முடிவுக்கு பின், தமிழக அரசின் மனுவை விசாரணைக்கு எடுக்கலாம் எனக் கூறி, விசாரணையை ஆகஸ்ட் 7 ஆம் தேதிக்கு நீதிபதிகள் தள்ளிவைத்தனர். இதற்கிடையில், உயர்நீதிமன்ற தடையை மீறி, ‘நலம் காக்கும் ஸ்டாலின்’ திட்டத்தை அரசு துவங்கியுள்ளதாகக் கூறி, அரசுக்கு எதிராக, சி.வி.சண்முகம் தரப்பில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கும், ஆகஸ்ட் 7 ஆம் தேதி விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    மாநிலம்

    ரூ.32,554 கோடி முதலீடு, 49,845 பேருக்கு வேலை: தூத்துக்குடியில் முதல்வர் முன்னிலையில் 41 ஒப்பந்தங்கள் கையெழுத்து

    August 4, 2025
    மாநிலம்

    “பிஹார் வாக்காளர்கள் குறித்து ப.சிதம்பரம் சொல்வது கதை” – தமிழிசை சாடல்

    August 4, 2025
    மாநிலம்

    காவல் துறைக்கு தேர்வாகியும் பணி ஆணைக்கு காத்திருப்பு: புலம்பும் புதிய எஸ்.ஐ-க்கள்

    August 4, 2025
    மாநிலம்

    டாஸ்மாக் ஊழியர்கள் நாளை உண்ணாவிரத போராட்டம்

    August 4, 2025
    மாநிலம்

    ‘நல்லா வரணும்…வெற்றி பெறணும்…’ – விஜய்க்கு வாழ்த்து சொன்ன ரங்கசாமி!

    August 4, 2025
    மாநிலம்

    கரூர்: மேட்டுமகாதானபுரம் கோயிலில் பக்தர்கள் தலையில் தேங்காய் உடைத்து நேர்த்திக் கடன்

    August 4, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • ‘கிங்டம்’ படத்துக்கு சீமான் கடும் எதிர்ப்பு!
    • ரூ.32,554 கோடி முதலீடு, 49,845 பேருக்கு வேலை: தூத்துக்குடியில் முதல்வர் முன்னிலையில் 41 ஒப்பந்தங்கள் கையெழுத்து
    • குறுநடை போடும் குழந்தையை தந்திரங்களைப் போல வீசத் தெரிந்த 10 விலங்குகள்!
    • கார்த்தி சிதம்பரம் ஐரோப்பா செல்ல நிபந்தனைகளுடன் அனுமதி வழங்கியது டெல்லி நீதிமன்றம்!
    • விவோ Y400 ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம்: விலை, சிறப்பு அம்சங்கள் என்னென்ன?

    Recent Comments

    No comments to show.

    Archives

    • August 2025
    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.