Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Thursday, September 18
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»மாநிலம்»நயினார் நாகேந்திரன் அடுத்த மாதம் முதல் சுற்றுப்பயணம்: பாஜக ஆலோசனை கூட்டத்தில் முடிவு
    மாநிலம்

    நயினார் நாகேந்திரன் அடுத்த மாதம் முதல் சுற்றுப்பயணம்: பாஜக ஆலோசனை கூட்டத்தில் முடிவு

    adminBy adminSeptember 18, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    நயினார் நாகேந்திரன் அடுத்த மாதம் முதல் சுற்றுப்பயணம்: பாஜக ஆலோசனை கூட்டத்தில் முடிவு
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    சென்னை: தமிழகம் முழு​வதும் அக்​டோபர் மாதம் முதல் நயி​னார் நாகேந்​திரன் சுற்​றுப்​பயணம் மேற்​கொள்ள உள்​ளார். அதன்​படி, தினசரி 3 மாவட்​டங்​களில் மக்​கள் சந்​திப்பு நடத்த ஆலோ​சனை கூட்​டத்​தில் திட்​ட​மிடப்​பட்​டிருப்​ப​தாக தகவல் வெளி​யாகி உள்ளது. தமிழக பாஜக சார்​பில் சிந்​தனை அமர்வு கூட்​டம் சென்​னை​யில் நேற்று நடந்​தது. இதற்கு கட்​சி​யின் தேசிய பொதுச் செய​லா​ளர் பி.எல்​.சந்​தோஷ் தலைமை தாங்​கி​னார்.

    மாநில தலை​வர் நயி​னார் நாகேந்​திரன், மத்​திய இணை அமைச்​சர் எல்​.​முரு​கன், முன்​னாள் மாநில தலை​வர்​கள் தமிழிசை, பொன்​.​ரா​தா கிருஷ்ணன், தேசிய மகளிர் அணி தலை​வர் வானதி சீனி​வாசன், மேலிட பொறுப்​பாளர்​கள் சுதாகர் ரெட்​டி, அரவிந்த் மேனன், மாநில துணை தலை​வர்​கள் டால்​பின் ஸ்ரீதர், கரு.​நாக​ராஜன், குஷ்பு, மாநில செய்தி தொடர்​பாளர் ஏ.என்​.எஸ்​.பிர​சாத் உள்பட மூத்த நிர்​வாகி​கள், அணிப்​பிரிவு தலை​வர்​கள் கலந்து கொண்​டனர்.

    பிற்​பகலுக்கு பிறகு அண்​ணா​மலை கூட்​டத்​தில் பங்​கேற்​றார். இதையடுத்து பாஜக மாநில தலை​வர் நயி​னார் நாகேந்​திரன், தென் தமிழகத்​தில் தேசிய ஜனநாயகக் கூட்​ட​ணிக்​கான பாரம்​பரிய வாக்​கு​களை எப்​படி ஒருங்​கிணைப்​பது, பெண் வாக்​காளர்​களை எப்​படி ஈர்ப்​பது, போராட தகுந்த பகு​தி​வாரி​யான பிரச்​சினை​கள் என்ன என்​பது உள்​ளிட்ட பல்​வேறு விஷ​யங்​கள் குறித்து ஆலோ​சனை மேற்​கொண்​டார்.

    பின்​னர், பேசிய அண்​ணா​மலை, அதி​முக பொதுச் செய​லா​ளர் பழனி​சாமி​யின் சுற்​றுப் ​பயணத்​துக்கு அதி​கள​வில் கூட்​டம் கூடு​வ​தாக​வும், தன்​னெழுச்​சி​யாக பாஜக நிர்​வாகி​களும் பங்​கேற்​ப​தாக​வும் தெரி​வித்​தார். இதே​போல் தமிழகம் முழு​வதும் கூட்​ட​ணிக் கட்​சிகளு​டன் இணைந்து தேர்​தல் பிரச்​சா​ரங்​களை மேற்​கொள்ள வேண்​டும் என்​றார்.

    மேலும், அக்​டோபர் மாதம் முதல் தமிழகம் முழு​வதும் நயி​னார் நாகேந்​திரன் சுற்​றுப்​பயணம் மேற்​கொண்​டு, மக்​கள் சந்​திப்பை நடத்​தவுள்​ள​தாக​வும் தினசரி 3 மாவட்​டங்​களில் சுற்​றுப்​பயணம் செய்து பிரச்​சா​ரம் மேற்​கொள்​வார் என்​றும் அப்​போது அண்​ணா​மலை தெரி​வித்​தார்.

    இந்​தக் கூட்​டத்​தில், தேர்​தலை எதிர்​கொள்​வது, அதி​முக தலை​மையி​லான தேசிய ஜனநாயக கூட்​ட​ணியை ஒருங்​கிணைத்து செல்​வது குறித்த பல்​வேறு ஆலோ​சனை​களை மூத்த தலை​வர்​கள் வழங்​கினர். முன்​ன​தாக கூட்​டம் தொடங்​கு​வதற்கு முன்​பாக அண்​ணா​மலையை அவரது வீட்​டுக்​குச் சென்று பி.எல்​. சந்​தோஷ் சந்​தித்து பேசி​னார்.

    பின்னர் செய்​தி​யாளர்​களிடம் நயி​னார் நாகேந்​திரன் கூறிய​தாவது: தேர்​தலை எதிர்​கொள்​வது குறித்து கூட்​டத்​தில் ஆலோ​சிக்​கப்​பட்​டது. பழனி​சாமி கடந்த காலக்​கட்​டத்​தில் என்ன நடந்​ததோ அதைப்​பற்றி தான் பேசி​யிருக்​கிறார். அவர் டெல்லி சென்று வந்த பிறகுதான் எதற்​காக சென்​றார் என்​பது தெரி​யும்.

    எனது சுற்​றுப்​பயணத்​துக்​கான திட்​ட​மிடல்​களை மேற்​கொள்ள ஒரு குழு அமைக்​கப்​பட்​டுள்​ளது. அந்த குழு சுற்​றுப்​பயணத்துக்கான தேதி, இடங்​கள், பங்​கேற்​பாளர்​கள் உள்​ளிட்​டதகவல்​களை தெரிவிக்​கும்​. இவ்​வாறு நயி​னார் நாகேந்​திரன் கூறினார்​.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    மாநிலம்

    தமிழகத்தில் வாக்குச்சாவடிகள் எண்ணிக்கை 74,000-ஆக உயர்த்த தேர்தல் ஆணையம் நடவடிக்கை

    September 18, 2025
    மாநிலம்

    டிஜிபி தேர்வு குறித்து 26-ல் டெல்லியில் ஆலோசனை

    September 18, 2025
    மாநிலம்

    டெல்லியில் அமித் ஷாவுடன் இபிஎஸ் ஆலோசனை

    September 18, 2025
    மாநிலம்

    டெல்டா, காஞ்சி, மதுரை, சேலம் உள்ளிட்ட 19 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு

    September 18, 2025
    மாநிலம்

    சத்துணவு, அங்கன்வாடி ஊழியர்கள் சார்பில் கோரிக்கை மாநில மாநாடு

    September 18, 2025
    மாநிலம்

    அமைச்சராகி 50 நாளாச்சு… இலாகா ஒதுக்கீடு என்னாச்சு? – பிரேக் போடும் ரங்கசாமி… பேசாமல் இருக்கும் பாஜக!

    September 18, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • தமிழகத்தில் வாக்குச்சாவடிகள் எண்ணிக்கை 74,000-ஆக உயர்த்த தேர்தல் ஆணையம் நடவடிக்கை
    • டிஜிபி தேர்வு குறித்து 26-ல் டெல்லியில் ஆலோசனை
    • பிரதமர் நரேந்திர மோடி டயட்: சூடான நீரிலிருந்து மோரிங்க பராத்தா வரை: பி.எம். நரேந்திர மோடியின் தினசரி உணவு 75 வயதில்
    • டெல்லியில் அமித் ஷாவுடன் இபிஎஸ் ஆலோசனை
    • மதுராந்தகத்தில் 2,000 ஏக்கரில் புதிய சர்வதேச நகரம்: மாஸ்டர் பிளான் தயாரிக்க டிட்கோ நிறுவனம் ஒப்பந்தம் கோரியது

    Recent Comments

    No comments to show.

    Archives

    • September 2025
    • August 2025
    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.