Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Friday, July 11
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»மாநிலம்»நம்மை காக்கும் 48 திட்டம் மூலம் தமிழகத்தில் 3.57 லட்சம் பேர் பயன்: அதிகாரிகள் தகவல்
    மாநிலம்

    நம்மை காக்கும் 48 திட்டம் மூலம் தமிழகத்தில் 3.57 லட்சம் பேர் பயன்: அதிகாரிகள் தகவல்

    adminBy adminMay 13, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    நம்மை காக்கும் 48 திட்டம் மூலம் தமிழகத்தில் 3.57 லட்சம் பேர் பயன்: அதிகாரிகள் தகவல்
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    சென்னை: இன்னுயிர் காப்போம் நம்மைக் காக்கும் 48 திட்டம் மூலம் 3.57 லட்சம் பேர் பயனடைந்துள்ளனர் என்று தமிழக சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சாலை விபத்துகளில் சிக்கியவர்களுக்கு இலவச சிகிச்சை அளிக்கும் திட்டத்தை மத்திய அரசு அறிவித்துள்ளது. அந்த திட்டம் தமிழகத்தில் ஏற்கெனவே நடைமுறையில் உள்ளது.

    இதுகுறித்து சுகாதாரத் துறை அதிகாரிகள் கூறியதாவது: இன்னுயிர் காப்போம் நம்மைக் காக்கும் 48 திட்டம் கடந்த 2021 டிசம்பர் 18-ம் தேதி முதல்வர் மு.க.ஸ்டாலினால் தொடங்கிவைக்கப்பட்டது. சாலை விபத்துகளில் சிக்கியவர்களை உடனடியாக மீட்டு, அவர்களைக் காப்பாற்றுவதே இதன் நோக்கம்.

    தமிழகத்தில் அதிக சாலை விபத்துகள் நடைபெறும் 500-க்கும் மேற்பட்ட இடங்களைக் கண்டறிந்து, அருகில் உள்ள தனியார் மற்றும் அரசு மருத்துவமனைகளைத் தேர்ந்தெடுத்து இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இந்த திட்டத்தின்படி, விபத்தில் சிக்கியவர்களை மருத்துவமனைகளில் சேர்ப்பவர்களுக்கு ரூ.5,000 வழங்கப்படுகிறது.

    இத்திட்டத்தில் தமிழகத்தை சேர்ந்தவர்கள் மட்டுமில்லாமல், மற்ற மாநிலம் மற்றும் வெளிநாடுகளை சேர்ந்தவராக இருந்தாலும், விபத்துக்குள்ளானால் முதல் 48 மணி நேரத்தில் அவரிடத்தில் பணம் இருக்கிறதோ, இல்லையோ மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சைக்கு அளித்து, அவரின் உயிரை காப்பாற்ற நடவடிக்கை எடுக்கப்படுகிறது.

    இந்த திட்டத்தில் கடந்த 3 ஆண்டுகளில் 3,57,137 பேர் விபத்து காய சிகிச்சை கட்டணமின்றி பெற்றுள்ளனர். அதற்காக அரசு ரூ.318.89 கோடி செலவிட்டுள்ளது. மொத்தம் 250 அரசு மருத்துவமனைகள், 473 தனியார் மருத்துவமனைகள் என மொத்தம் 723 மருத்துவமனைகளில் இத்திட்டம் செயல்பாட்டில் உள்ளது.

    அந்த மருத்துவமனைகள் அனைத்திலும் இத்திட்டத்தின் கீழ் ரூ.1 லட்சம் வரை கட்டணமில்லா சிகிச்சை வழங்கப்பட்டு வந்தது. மருத்துவர்கள், பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று அந்த தொகை ரூ.2 லட்சமாக அண்மையில் உயர்த்தி வழங்கப்பட்டது.

    மக்களைத்தேடி மருத்துவம், இன்னுயிர் காப்போம் நம்மைக் காக்கும் 48 என்ற திட்டம் தமிழகத்துக்கு மட்டுமல்ல, உலக அளவில் அனைத்து நாடுகளுக்கும் வழிகாட்டும் திட்டங்களாக மக்களுக்கு பயன்பாட்டில் இருந்து கொண்டிருக்கிறது. அதன் தொடர்ச்சியாகவே தற்போது மத்திய அரசு இத்திட்டத்தை தேசிய அளவில் அறிமுகப்படுத்தியுள்ளது. இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    மாநிலம்

    மதிமுக கூட்டத்தில் ஊடகத்தினர் மீது தாக்குதல்: கேமராவை பிடுங்கி உடையுங்கள் என வைகோ ஆவேசம் – கட்சித் தலைவர்கள் கண்டனம்

    July 11, 2025
    மாநிலம்

    உயர் நீதிமன்றத்தில் நேரில் ஆஜர்: சென்னை மாநகராட்சி ஆணையருக்கு விதிக்கப்பட்ட ரூ.1 லட்சம் அபராதம் ரத்து

    July 11, 2025
    மாநிலம்

    “பாஜகவின் ஒரிஜினல் வாய்ஸாகவே இபிஎஸ் மாறிவிட்டார்” – முதல்வர் ஸ்டாலின் விமர்சனம்

    July 11, 2025
    மாநிலம்

    “என் பேச்சை கேட்காத அன்புமணி இனி என் பெயரை பயன்படுத்தக் கூடாது” – ராமதாஸ் ஆவேச பேச்சு

    July 11, 2025
    மாநிலம்

    திறந்தநிலை பல்கலை. பேராசிரியர்கள் இடமாற்ற முடிவை கைவிட தினகரன் வலியுறுத்தல்

    July 11, 2025
    மாநிலம்

    இஸ்லாமிய கைதிகளின் குடும்பத்தினரை சந்தித்த சீமானை கைது செய்க: இந்து மக்கள் கட்சி

    July 11, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • 7 குடலுக்கு நல்லது என்று அன்றாட உணவுகள், ஒரு சிறந்த அமெரிக்க காஸ்ட்ரோஎன்டாலஜிஸ்ட் | – டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • நடிகர் கிங் காங் மகள் திருமண வரவேற்பில் கலந்து கொண்டு வாழ்த்திய முதல்வர் ஸ்டாலின்
    • மதிமுக கூட்டத்தில் ஊடகத்தினர் மீது தாக்குதல்: கேமராவை பிடுங்கி உடையுங்கள் என வைகோ ஆவேசம் – கட்சித் தலைவர்கள் கண்டனம்
    • உயர் நீதிமன்றத்தில் நேரில் ஆஜர்: சென்னை மாநகராட்சி ஆணையருக்கு விதிக்கப்பட்ட ரூ.1 லட்சம் அபராதம் ரத்து
    • “பாஜகவின் ஒரிஜினல் வாய்ஸாகவே இபிஎஸ் மாறிவிட்டார்” – முதல்வர் ஸ்டாலின் விமர்சனம்

    Recent Comments

    No comments to show.

    Archives

    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.