Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Sunday, July 6
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»மாநிலம்»நம்மை காக்கும் 48 திட்டத்தின் 4 லட்சமாவது பயனாளி – நேரில் நலம் விசாரித்த மா. சுப்பிரமணியன்
    மாநிலம்

    நம்மை காக்கும் 48 திட்டத்தின் 4 லட்சமாவது பயனாளி – நேரில் நலம் விசாரித்த மா. சுப்பிரமணியன்

    adminBy adminJuly 6, 2025No Comments3 Mins Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    நம்மை காக்கும் 48 திட்டத்தின் 4 லட்சமாவது பயனாளி – நேரில் நலம் விசாரித்த மா. சுப்பிரமணியன்
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    சென்னை: நம்மைக் காக்கும் 48 திட்டத்தின் 4 லட்சமாவது பயனாளியை தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் நேரில் நலம் விசாரித்தார்.

    இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று (06.07.2025) ஏ.சி.எஸ் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில், ‘இன்னுயிர் காப்போம் நம்மைக்காக்கும் 48’ திட்டத்தில், 4 இலட்சமாவது பயனாளியை நேரில் சந்தித்து, நலம் விசாரித்து, அவருக்கு வழங்கப்படும் சிகிச்சை முறைகள் குறித்து கேட்டறிந்தார். பிறகு அமைச்சர் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது:- இன்னுயிர் காப்போம் நம்மைக் காக்கும் 48 திட்டத்தை தமிழ்நாடு முதல்வர் 2021 டிசம்பர் திங்கள் 18ஆம் தேதி தொடங்கி வைத்தார்.

    உலக அளவில் ஒரு புகழ் பெற்ற திட்டமாக இது பயன்பெற்று வருகிறது. சாலை விபத்துகளில் சிக்குபவர்களை உடனடியாக மீட்டு தமிழ்நாட்டில் உள்ள 250 அரசு மருத்துவமனைகள், 473 தனியார் மருத்துவமனைகள் என்று 723 மருத்துவமனைகளில் உடனடியாக சேர்த்து, சேர்க்கப்பட்ட முதல் 48 மணி நேரத்தில் ரூ.1 லட்சம் அரசின் சார்பில் தந்து அவர்களுடைய உயிரை காப்பாற்றுவது என்கின்ற வகையிலான ஒரு மிகச் சிறந்த திட்டம், இன்னுயிர் காப்போம் நம்மைக்காக்கும் 48 ஆகும். முதலமைச்சரால் தொடங்கப்பட்ட இந்த திட்டம் என்பது தமிழ்நாட்டில் ஏறத்தாழ 500க்கும் மேற்பட்ட அடிக்கடி விபத்துகள் நேர்கின்ற மருத்துவமனைகளாக தேர்ந்தெடுத்து இந்த திட்டம் தொடங்கப்பட்டது.

    இந்த திட்டத்தின்படி, விபத்து நேர்ந்தவுடன், 8 நிமிடங்களுக்குள் ஆம்புலன்ஸ் இந்த இடத்திற்கு சென்றடைந்து, அவசர மருத்துவ தொழில்நுட்பவியர்களின் உதவியுடன் காயமுற்றவர்களின் உயிர்களை காப்பதற்குரிய முதலுதவிகளை செய்து மருத்துவ உதவிகளை ஆம்புலன்ஸ் வழங்கி உடனடியாக மருத்துவமனைகளில் சேர்க்கின்ற இந்த மகத்தான திட்டம் தொடங்கப்பட்ட நாள் முதல் மக்களுக்கு மிகப் பெரிய அளவில் பயன்பெற்று வருகிறது.

    இந்த திட்டத்தின் இன்னொரு சிறப்பு, தமிழ்நாட்டை சேர்ந்தவர்கள் மட்டுமின்றி அண்டை மாநிலங்களை சேர்ந்தவர்களாக இருந்தாலும், வெளிநாடுகளை சேர்ந்தவர்களாக இருந்தாலும், ஏதாவது ஒரு சாலையில் விபத்துகள் நேர்ந்தால், விபத்து நேர்ந்தவரை உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்து வந்து, முதல் 48 மணி நேரத்தில் அவர்களுக்குரிய முதலுதவிகளை செய்து அரசின் சார்பில் ரூ.1 லட்சம் உதவியுடன் அவர்களது உயிரை காப்பது. அந்தவகையில் ரூ.1 லட்சம் நிதியுதவியோடு, இந்த திட்டம் 3 ஆண்டு காலம் சிறப்பாக வழங்கப்பட்டு வந்தது, 24.12.2024 முதல் தமிழ்நாடு முதலமைச்சரால் ரூ.1 லட்சம் என்பதை ரூ.2 லட்சமாக உயர்த்தி வழங்க உத்தரவிட்டார். அந்த வகையில் தற்போது ரூ.2 லட்சமாக வழங்கப்பட்டு வருகிறது.

    4 லட்சமாவது பயனாளி: இந்த அரசு பொறுப்பேற்றபிறகு இதுவரை 3,99,999 என்கின்ற வகையில் ஏறத்தாழ 4 லட்சமாவது பயனாளி ஏசிஎஸ் மருத்துவக்கல்லூரியில் சேர்க்கப்பட்டிருக்கிறார். அவர் பாரிவாக்கத்தைச் சேர்ந்த 33 வயது மணிகண்டன் என்கின்ற இளைஞர். தனியார் இருசக்கர வாகன விபத்தில் சிக்கி கால்கள் முறிந்த நிலையில் இந்த மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார். அவரை நேரில் சந்தித்து நலம் விசாரித்து, அவருக்கான மருத்துவ செலவை இந்த அரசு ஏற்றுக் கொள்கிறது என்கின்ற செய்தியினை சொல்லியிருக்கிறோம்.

    மேலும் 4,00,001, 4,00,002, 4,00,003 என்கின்ற பயனாளிகள் இந்த மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்கள். மதுரவயால் பகுதியைச் சார்ந்த 50 வயது மதியழகன், புரசைவாக்கம் பகுதியைச் சார்ந்த 28 வயது சரண்யா, கோலப்பஞ்சேரி பகுதியைச் சார்ந்த 33 வயது விஸ்வநாதன் ஆகியோரும் வெவ்வேறு சாலை விபத்துகளில் குறிப்பாக இருசக்கர வாகன விபத்து, ஆட்டோ விபத்து என்று சிகிச்சை பெற்று வருகிறார்கள். அவர்கள் 4 பேரையும் தனித்தனியாக சந்தித்து அவர்களிடம் நலம் விசாரிக்கப்பட்டது.

    இந்த திட்டத்தின்படி 101 சிகிச்சைகள் வழங்கப்பட்டு வருகிறது. அந்தவகையில் இந்த திட்டம் தொடங்கி வைக்கப்பட்ட பிறகு 05.07.2025 வரை 3,99,952 பயனடைந்து இருக்கிறார்கள். அதற்காக இந்த அரசு ஒட்டு மொத்தமாக செலவிட்டிருக்கும் தொகை ரூ.365.02 கோடி ஆகும். அரசு மருத்துவமனைகளைப் பொறுத்தவரை 3,69,785 பயனாளிகளுக்காக ரூ.313.06 கோடி செலவிடப்பட்டிருக்கிறது. தனியார் மருத்துவமனைகளைப் பொறுத்தவரை 30,167 பயனாளிகள் ரூ.51.95 கோடி செலவில் பயனடைந்திருக்கிறார்கள். அந்தவகையில் இந்த திட்டம் மிகச்சிறப்பாக சென்று கொண்டிருக்கிறது.

    காப்பீட்டுத் தொகை ரூ.1 லட்சமாக இருந்தபோது, 3,26,246 பயனாளிகள் ரூ.285.13 கோடி செலவில் பயனடைந்தார்கள். தமிழ்நாடு முதலமைச்சர் அதனை ரூ.2லட்சமாக உயர்த்திய பிறகு, 73,706 பயனாளிகள் ரூ.79.89 கோடி செலவில் பயனடைந்திருக்கிறார்கள். அந்தவகையில் இந்த திட்டத்தில் 4 லட்சமாவது பயனாளியை இன்று ஏசிஎஸ் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் நேரில் சந்தித்து நலம் விசாரிக்கப்பட்டது.

    இந்த திட்டத்தின் சிறப்புகளை அறிந்த ஒன்றிய அரசு இதே போன்று ஒரு திட்டமான விபத்து நேர்ந்த 7 நாட்களுக்குள் ரூ.1.5 லட்சம் உதவித் தொகையாக வழங்கப்படும் என்று அறிவித்திருக்கிறார்கள். அதோடு மட்டுமல்லாமல் இந்த திட்டத்தின் சிறப்பு இன்று இந்தியா முழுமைக்கும் ரூ.1.5 லட்சம் பெற்று பயன்பெறுவதற்கு உறுதுணையாக இருந்த திட்டம் தமிழக முதல்வரால் தொடங்கப்பட்ட இன்னுயிர் காப்போம் நம்மைக்காக்கும் 48 எனும் திட்டம் ஆகும்.

    தமிழ்நாட்டில் விபத்து நேர்ந்திருக்கிறது என்பதை உறுதி செய்த பிறகு அவர்களுக்கு உதவி செய்கிறோம். ஒன்றிய அரசு அறிவித்த திட்டத்தின்படி, காவல்துறை விசாரணை முடிந்து பிறகுதான் அவர்களுக்கு உதவித் தொகை என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது. தமிழ்நாட்டில் எந்தவித கட்டுப்பாடும் இல்லாமல் இத்திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது” என்று மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

    இந்நிகழ்வில் மதுரவாயல் சட்டமன்ற உறுப்பினர் காரப்பாக்கம் கணபதி, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அரசு முதன்மைச் செயலாளர் முனைவர் ப.செந்தில்குமார், இ.ஆ.ப., தமிழ்நாடு சுகாதார அமைப்பு திட்ட இயக்குநர் மரு.வினீத், இ.ஆ.ப., ஏ.சி.எஸ் மருத்துவக்கல்லூரி மருத்துவமனை சிறப்பு அலுவலர் மரு.தனவேல், இ.ஆ.ப. (ஓய்வு), முதல்வர் மரு.சீனிவாசாராஜ், இணை இயக்குநர் மரு.ரவிபாபு மற்றும் அலுவலர்கள் உடனிருந்தனர்.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    மாநிலம்

    பட்டாசு ஆலை வெடிவிபத்தில் உயிரிழந்தவர் குடும்பத்துக்கு ரூ. 4 லட்சம் நிவாரணம் – முதல்வர் அறிவிப்பு

    July 6, 2025
    மாநிலம்

    கீழடி விவகாரத்தில் மத்திய அரசின் மாற்றாந்தாய் மனப்பான்மை: சகாயம் விமர்சனம்

    July 6, 2025
    மாநிலம்

    ”ரத்தத்தின் ரத்தமே வா! மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம்!” – தொண்டர்களுக்கு இபிஎஸ் கடிதம்

    July 6, 2025
    மாநிலம்

    ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம் – வீடுதோறும் விண்ணப்பங்கள் வழங்கும் பணி சென்னையில் நாளை தொடக்கம்

    July 6, 2025
    மாநிலம்

    கீழதாயில்பட்டி பட்டாசு ஆலை வெடிவிபத்து – உரிய இழப்பீடு வழங்க தேமுதிக வலியுறுத்தல்

    July 6, 2025
    மாநிலம்

    ஜூலை 9ம் தேதி அகில இந்திய வேலை நிறுத்தம்: தமிழ்நாடு அரசு கல்லூரி ஆசிரியர் கழகம் பங்கேற்பு

    July 6, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • பட்டாசு ஆலை வெடிவிபத்தில் உயிரிழந்தவர் குடும்பத்துக்கு ரூ. 4 லட்சம் நிவாரணம் – முதல்வர் அறிவிப்பு
    • மீண்டும் மீண்டும் வரும் யுடிஐக்கள் என்ன: அவற்றை வளைகுடாவில் வைத்திருக்க 5 எளிய வழிகள்
    • “ஏன் முடியாது?!” – அஜித்தின் ‘ரேஸ்’ பட விருப்பம்   
    • கீழடி விவகாரத்தில் மத்திய அரசின் மாற்றாந்தாய் மனப்பான்மை: சகாயம் விமர்சனம்
    • ”ரத்தத்தின் ரத்தமே வா! மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம்!” – தொண்டர்களுக்கு இபிஎஸ் கடிதம்

    Recent Comments

    No comments to show.

    Archives

    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.