Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Monday, July 7
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»மாநிலம்»நடப்பு நிதியாண்டுக்குள் 15 அம்ரித் பாரத் ரயில்களை ஐசிஎஃப் ஆலையில் தயாரிக்க திட்டம்
    மாநிலம்

    நடப்பு நிதியாண்டுக்குள் 15 அம்ரித் பாரத் ரயில்களை ஐசிஎஃப் ஆலையில் தயாரிக்க திட்டம்

    adminBy adminJuly 7, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    நடப்பு நிதியாண்டுக்குள் 15 அம்ரித் பாரத் ரயில்களை ஐசிஎஃப் ஆலையில் தயாரிக்க திட்டம்
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    சென்னை: ஐசிஎஃப் ஆலை​யில் இந்த நிதி​யாண்​டுக்​குள் 15 அம்​ரித் பாரத் ரயில்​களை தயாரித்து முடிக்க திட்​ட​மிடப்​பட்​டுள்​ளது. இதுத​விர, ஏசி மின்​சார ரயில்​கள் தயாரிப்பு பணி​யும் தீவிர​மாக நடை​பெற்று வரு​கி​றது.

    சென்னை ஐசிஎஃப்​-ல் (இணைப்பு பெட்டி தொழிற்​சாலை) பல்​வேறு வகை​களில் 73 ஆயிரத்​துக்​கும் அதி​க​மான ரயில் பெட்​டிகள் தயாரித்து வழங்​கப்​பட்​டுள்​ளன. அதி​லும், தற்​போது வந்தே பாரத் ரயில்​கள் தயாரிப்​பில் அதிக கவனம் செலுத்​தப்​படு​கிறது. தற்​போது வரை 88 வந்தே பாரத் ரயில்​கள் தயாரித்து வழங்​கப்​பட்​டுள்​ளன. இந்த ரயில்​களுக்கு பயணி​கள் மத்​தி​யில் நல்ல வரவேற்பு கிடைத்​துள்​ளது.

    இதற்​கிடை​யில் அனைத்து தரப்பு மக்​களும் பயணிக்​கும் வகை​யில், அம்​ரித் பாரத் ரயில் (சா​தாரண வந்தே பாரத் ரயில்) தயாரிக்க முயற்சி எடுக்​கப்​பட்​டது. அதாவது நீண்ட தூர பயணத்​துக்கு பொது​வான வசதி​களு​டன் ஏசி அல்​லாத அம்​ரித் பாரத் ரயில் தயாரிக்க முடிவு செய்​யப்​பட்​டது. அதன்​படி 2 அம்​ரித் பாரத் ரயில்​கள் தயாரித்​து,கடந்த 2023-ம் ஆண்டு நவம்​பரில் ரயில்வே வாரி​யத்​திடம் ஒப்​படைக்​கப்​பட்​டன.

    22 பெட்​டிகளை கொண்ட இந்த ரயி​லில், ஏசி அல்​லாத இருக்கை வசதி பெட்​டிகள், தூங்​கும் வசதி கொண்ட பெட்​டிகள் ஆகியவை இணைக்​கப்​பட்​டுள்​ளன. மேலும் தனி​யாக இன்​ஜின்​கள் இரு​புற​மும் பொருத்​தப்​பட்​டுள்​ளன. பயணி​களுக்​கான 20 பெட்​டிகளும், சரக்கு எடுத்​துச்​செல்ல 2 பெட்​டிகளும் இணைக்​கப்​பட்​டுள்​ளன. தற்​போது நாடு முழு​வதும் 3 வழித்​தடங்​களில் இந்த ரயில்​கள் இயக்​கப்​படு​கின்​றன.

    இந்த ரயில்​களுக்கு பயணி​கள் மத்​தி​யில் கிடைத்த வரவேற்பை அடுத்​து, 200-க்​கும் மேற்​பட்ட அம்​ரித் பாரத் ரயில்​களை தயாரிக்க ரயில்வே நிர்​வாகம் முடிவு செய்​தது. முதல்​கட்​ட​மாக, 50 ரயில்​களை தயாரித்து வழங்க நடவடிக்கை எடுக்​கப்​பட்​டுள்​ளது. மேம்​படுத்​தப்​பட்ட பல்​வேறு வசதி​களு​டன் இந்த ரயில்​கள் தயாரிப்பு பணி வேக​மாக நடை​பெறுகி​றது. ஐசிஎஃப் ஆலை​யில் நடப்பு நிதி​யாண்​டுக்​குள் 15 அம்​ரித் பாரத் ரயில்​களை தயாரித்து முடிக்க திட்​ட​மிடப்​பட்​டுள்​ளது.

    இதுகுறித்து சென்னை ஐ.சி.எஃப் அதி​காரி​கள் கூறிய​தாவது: இந்த ஆண்டு இது​வரை 4 அம்​ரித் பாரத் ரயில்​களை தயாரித்​துள்​ளோம். நடப்பு நிதி​யாண்​டுக்​குள் 15 ரயில்​களை தயாரித்து வழங்க திட்​ட​மிட்டு இருக்​கிறோம். இந்த ரயி​லில் அவசர பிரேக்​கிங் அமைப்பு உட்பட 12 முக்​கிய வசதி​களை மேம்​படுத்த நடவடிக்கை எடுக்​கப்​பட்​டது. அதன்​படி, மேம்​படுத்​தப்​பட்ட இருக்கை மற்​றும் பெர்த்​கள், மாற்​றுத் திற​னாளி​களுக்​கான கழிப்​பறை வசதி, மொபைல் சார்​ஜிங் வசதி, அவசர நிலை​யில் வெளியே அவசர விளக்கு வசதி உட்​பட பல்​வேறு வசதி​கள்​ ஏற்​படுத்​தப்​பட்​டுள்​ளன.இவ்​வாறு அவர்​கள்​ கூறினர்​.

    ஏசி மின்சார ரயில் தயாரிப்பு பணி தீவிரம்: சென்னை ஐசிஎஃப் ஆலையில் கடந்த ஆண்டு ஏப்ரல் முதல் இந்த ஆண்டு ஜூன் வரை தலா 12 பெட்டிகளை கொண்ட 6 ஏசி மின்சார ரயில்கள் தயாரித்து, பல்வேறு ரயில்வே மண்டலங்களுக்கு வழங்கப்பட்டுள்ளன. 2025-26-ம் நிதியாண்டுக்கு மேலும் 8 ஏசி மின்சார ரயில்களை தயாரித்து வழங்க திட்டமிடப்பட்டுள்ளதாக ஐசிஎஃப் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    மாநிலம்

    சென்னை – சாலிமர் இடையே சிறப்பு ரயில் சேவை நீட்டிப்பு

    July 7, 2025
    மாநிலம்

    அஜித்குமார் விசாரணை அறிக்கை உயர் நீதிமன்றத்தில் நாளை தாக்கல்: பல உண்மைகள் வெளியாகும் என எதிர்பார்ப்பு

    July 7, 2025
    மாநிலம்

    பழனிசாமி பிரச்சார பயணம் ஆட்சி மாற்றத்துக்கான அடித்தளம்: ஜி.கே.வாசன் நம்பிக்கை

    July 7, 2025
    மாநிலம்

    ‘மக்களை ​காப்போம்​, தமிழகத்தை மீட்போம்​’ பிரச்சாரம்​: மேட்டுப்பாளையத்தில்​ இன்று பழனிசாமி தொடக்கம்​

    July 7, 2025
    மாநிலம்

    பாமக நிர்வாக குழுவில் இருந்து அன்புமணி நீக்கம் – பின்னணி என்ன?

    July 7, 2025
    மாநிலம்

    சாத்தூர் பட்டாசு ஆலையில் பயங்கர விபத்து: ஒருவர் உயிரிழப்பு – நடந்தது என்ன?

    July 7, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • சென்னை – சாலிமர் இடையே சிறப்பு ரயில் சேவை நீட்டிப்பு
    • பக்கவாதம்: இந்த இரத்த வகை உள்ளவர்கள் ஆரம்பகால பக்கவாதம் அதிக ஆபத்தை எதிர்கொள்கின்றனர் | – டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • புரி ஜெகந்நாதருக்கு 208 கிலோ தங்க நகை அலங்காரம்
    • உலக குத்துச்சண்டை போட்டி: தங்கம் வென்றார் சாக்‌ஷி!
    • குழந்தைகளுக்கு அமைதியாக தீங்கு விளைவிக்கும் 5 பொதுவான உணவுகள்

    Recent Comments

    No comments to show.

    Archives

    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.