Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Tuesday, July 1
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»மாநிலம்»நகைக் கடன் விதிகளை முழுமையாக திரும்பப் பெற சு.வெங்கடேசன் எம்.பி வலியுறுத்தல்
    மாநிலம்

    நகைக் கடன் விதிகளை முழுமையாக திரும்பப் பெற சு.வெங்கடேசன் எம்.பி வலியுறுத்தல்

    adminBy adminMay 31, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    நகைக் கடன் விதிகளை முழுமையாக திரும்பப் பெற சு.வெங்கடேசன் எம்.பி வலியுறுத்தல்
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    மதுரை: நகைக் கடனுக்கான ரிசர்வ் வங்கியின் புதிய அறிவிப்பை முழுமையாகத் திரும்பபெற வேண்டும் என மதுரை எம்.பி. சு.வெங்கடேசன் வலியுறுத்தியுள்ளார்.

    மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினரும், மதுரை நாடாளுமன்ற உறுப்பினருமான சு. வெங்கடேசன் இன்று (மே 30) மதுரையில் செய்தியாளர்களிடம் கூறியது: “ரிசர்வ் வங்கி தங்க நகைக் கடன் சார்ந்து ஒரு வழிகாட்டு நெறிமுறைகளை ஏப்ரல் 9-ம் தேதி வெளியிட்டுள்ளது. இது மிக மோசமான நடைமுறை. பிரிவு 11 -ல் நகைக் கடன் பெறுவோர் நகை வைத்திருப்பதற்கான ஆவணங்களை செலுத்த வேண்டும் என்பதும் மோசமான ஓர் அறிவிப்பு.

    மதுரை மாவட்டத்திலுள்ள வங்கிகள் இன்றைக்கு 65 சதவீதம் கடன் என்பதை நகைக் கடன்களாக தான் வழங்கியுள்ளனர். எந்த ஒரு ஆபத்தும் இல்லை. திருப்பி செலுத்துவதற்கான ஆவணத்தை தாக்கல் செய்ய வேண்டும் என சொல்வது எந்த வகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாது. மேலும், நகைக் கடன் பெறும் காரணத்தை உறுதிப்படுத்த வேண்டும் என சொல்லப்படுகிறது. ஒருவர் தன்னுடைய பிள்ளையின் கல்வி அல்லது விவசாயத்துக்கு கடன் வாங்க முயற்சி செய்வாரா அல்லது கடன் பெறுவதற்கு உரிய ஆவணங்களைக் கேட்டு அரசு அலுவலகங்களுக்கு செல்வாரா?

    பெரும்பாலும் நகைகளை யாரும் அழிக்க மாட்டார்கள். பல தலைமுறைகள் மாறி, மாறி வரும். இதற்கெல்லாம் ரசீது, ஆவணம் கேட்டால் எப்படி கொடுப்பது? ரிசர்வ் வங்கியின் புதிய அறிவிப்புக்கு தீர்வு காணவேண்டும் என ஏற்கெனவே டெல்லியில் செய்தியாளர்களிடம் வலியுறுத்தினோம். இதன்படி, ரிசர்வ் வங்கி ஏற்கெனவே அறிவித்த அறிவிப்புக்கான அறிக்கையை நிறுத்தி வைக்கப்பட்டிருப்பது முதல் வெற்றி.

    ரூ.2 லட்சம் வரை நகை கடன் பெறுபவர்களுக்கு எந்த விதி முறையும் இல்லை என்றும், எளிய, நடுத்தர மக்களை பாதிக்கும் புதிய நடைமுறை குறித்து அனைவரின் கருத்தையும் கேட்டு ஆய்வு செய்த பின் அடுத்த ஆண்டு ஜனவரி 1-ம் தேதிக்குப் பிறகே நடைமுறைப்படுத்தப்படும் என அறிவித்திருக்கிறது. இருப்பினும், நகைக் கடனுக்கான ரிசர்வ் வங்கியின் புதிய அறிவிப்பை முழுமையாக திரும்ப பெற வேண்டும்,” என்று அவர் கூறினார். இந்த சந்திப்பின்போது, மாநில செயற்குழு உறுப்பினர் மதுக்கூர் ராமலிங்கம் மாநகர் மாவட்ட செயலாளர் மா. கணேசன் உடனிருந்தனர்.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    மாநிலம்

    ‘அஜித்குமார் மரணத்துக்கு காரணமானோரை கைது செய்யாதது ஏன்?’ – தமிழக பாஜக சரமாரி கேள்வி

    July 1, 2025
    மாநிலம்

    பூவை ஜெகன்மூர்த்திக்கு முன்ஜாமீன் வழங்கி உச்ச நீதிமன்றம் உத்தரவு!

    June 30, 2025
    மாநிலம்

    செல்லாத பழைய ரூபாய் நோட்டுகளை மாற்றித் தர கோரி கோவை ஆட்சியர் அலுவலகம் வந்த மூதாட்டி!

    June 30, 2025
    மாநிலம்

    சிறு வணிகர்களுக்கான மின் கட்டண சலுகைகள் என்னென்ன? – தமிழக அரசு அறிவிப்பு

    June 30, 2025
    மாநிலம்

    “தமிழகத்தில் திமுக, அதிமுகவுக்கு அடுத்து விசிக தான் வலுவான கட்சி!” – திருமாவளவன்

    June 30, 2025
    மாநிலம்

    காவலாளி அஜித்குமார் மரணம்: மடப்புரத்தில் குற்றவியல் நடுவர் விசாரணை – நடந்தது என்ன?

    June 30, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • ஜப்பானின் ‘தற்கொலை காடு’ பலவீனமான இதயமுள்ளவர்களுக்கு அல்ல-5 முதுகெலும்பு குளிர்ச்சியான உண்மைகள்
    • ‘அஜித்குமார் மரணத்துக்கு காரணமானோரை கைது செய்யாதது ஏன்?’ – தமிழக பாஜக சரமாரி கேள்வி
    • ரயில் கட்டண உயர்வு, தட்கல் டிக்கெட், ஆதார் – பான் இணைப்பு: ஜூலை 1 முதல் வரப்போகும் மாற்றங்கள் என்ன?
    • கூர்மையான மூளை முதல் எடை இழப்பு வரை: சர்க்கரையை விட்டு வெளியேறுவதன் 5 அற்புதமான நன்மைகள் | – டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • பூவை ஜெகன்மூர்த்திக்கு முன்ஜாமீன் வழங்கி உச்ச நீதிமன்றம் உத்தரவு!

    Recent Comments

    No comments to show.

    Archives

    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.