Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Wednesday, September 3
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»மாநிலம்»தோற்றும் பாடம் படிக்காமல் இருக்கிறாரா கே.சி.வீரமணி? – ஆதங்க அலையில் திருப்பத்தூர் மாவட்ட அதிமுக!
    மாநிலம்

    தோற்றும் பாடம் படிக்காமல் இருக்கிறாரா கே.சி.வீரமணி? – ஆதங்க அலையில் திருப்பத்தூர் மாவட்ட அதிமுக!

    adminBy adminSeptember 3, 2025No Comments3 Mins Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    தோற்றும் பாடம் படிக்காமல் இருக்கிறாரா கே.சி.வீரமணி? – ஆதங்க அலையில் திருப்பத்தூர் மாவட்ட அதிமுக!
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    எந்த ஆட்சியாக இருந்தாலும் அரசியல் தெரிந்த அமைச்சர்கள் அடுத்த தேர்தலிலும் தாங்கள் ஜெயிப்பதற்கான அடித்தளத்தை அதிகாரத்தில் இருக்கும் போதே போட்டுவைப்பார்கள். ஆனால், விவரமாக அப்படி செயல்படாததால், 2021-ல் அமைச்சராக இருந்தும் தோற்றுப் போனார் கே.சி.வீரமணி. அப்படி அதிகாரத்தைத் தொலைத்தவர், பட்டும் திருந்தாமல் இருப்பதாக ஆதங்கப்படுகிறார்கள் திருப்பத்தூர் மாவட்ட அதிமுககாரர்கள்.

    அ​தி​முக ஆட்​சி​யில் பசை​யுள்ள பத்​திரப்​ப​திவுத் துறைக்கு அமைச்​ச​ராக இருந்​தவர் கே.சி.வீரமணி. பத்​தாண்டு காலம் அமைச்​ச​ராக இருந்த இவர், வேலூர், திருப்​பத்​தூர், ராணிப்​பேட்டை ஆகிய 3 மாவட்ட அதி​முக-வை தனது பிடிக்​குள் வைத்​திருந்​தவர். ஜெயலலிதா மறைவுக்​குப் பிறகு, கட்​சிக்​குள் தனது செல்​வாக்கை மேலும் வளர்த்​துக் கொண்ட வீரமணி, தனக்கு போட்​டி​யாக வரு​வார்​கள் என்று கரு​தி​ய​வர்​களை எல்​லாம் ‘கவன​மாக’ பார்த்​துக் கொண்​ட​தாக​வும் தகவல்​கள் உண்​டு. இதனால், முன்​னாள் அமைச்​சர்​களான பாண்​டுரங்​கன், வி.எஸ்​.​விஜய், நிலோபர் கபீல், எம்​.எஸ்​.சந்​திரசேகரன் உள்​ளிட்​ட​வர்​கள் அரசி​யலில் தங்​களுக்​கான இடத்​தைத் தொலைத்​தார்​கள்.

    இப்​போது திருப்​பத்​தூர் மாவட்​டச் செய​லா​ள​ராக இருக்​கும் வீரமணி, 2021-ல் ஜோலார்​பேட்டை தொகு​தி​யில் மீண்​டும் போட்​டி​யிட்​டார். “இந்த 3 மாவட்​டங்​களில் அதி​கப்​படி​யான வாக்​கு​கள் வித்​தி​யாசத்​தில் வெல்​லப் போகும் வேட்​பாளர் அண்​ண​னாகத்​தான் இருப்​பார்” என அப்​போது வீரமணி​யின் விசு​வாச வட்​டம் தம்​பட்​டம் போட்ட நிலை​யில், திமுக-​விடம் 1,091 வாக்​கு​கள் வித்​தி​யாசத்​தில் தோற்​றுப் போனார் வீரமணி.

    இப்​படி​யான அதிர்ச்​சித் தோல்​வியை எதிர்​பார்க்​காத வீரமணி இம்​முறை, விட்ட இடத்​தைப் பிடிக்க கணக்​குப்​போட்டு காய் நகர்த்தி வரு​கி​றார். அதேசம​யம், தேர்​தல் தோல்​வியை படிப்​பினை​யாகக் கொள்​ளாமல் இன்​ன​மும் தன்னை அமைச்​ச​ராகவே நினைத்​துக் கொண்டு பழைய மனநிலை​யிலேயே இருக்​கி​றார் வீரமணி என்று திருப்​பத்​தூர் மாவட்ட அதி​முக-​வினர் புலம்​பு​கி​றார்​கள்.

    இதுகுறித்து நம்​மிடம் பேசிய அவர்​கள், “தேர்​தல் தோல்வி என்​பது அரசி​யலில் சகஜம். ஆனால், ஒரு​முறை தோற்​றால் அதி​லிருந்து பாடம் படித்​துக்​கொள்ள வேண்​டும். ஆனால், வீரமணி அப்​படி படித்​துக் கொண்​ட​தாகத் தெரிய​வில்​லை. அதனால் தான் இன்​ன​மும் கட்​சிக்​காக உழைக்​கும் உண்​மை​யான விசு​வாசிகளை ஒதுக்​கி​வைத்​து​விட்டு தனக்கு வேண்​டப்​பட்ட சிலரை மட்​டும் உடன் வைத்​துக் கொண்டு அரசி​யல் நடத்​துகி​றார். இப்​படி இருந்​த​தால் தான் கடந்​த ​முறை தோற்​றுப் போனோம் என்​பதை இன்​ன​மும் அவர் உணர​வில்​லை.

    இப்​படி​யான செயல்​பாடு​களால் தான் கடந்த முறை இந்த மாவட்​டத்​தில் உள்ள நான்கு தொகு​தி​களில் மூன்றை திமுக கைப்​பற்​றியது. வாணி​யம்​பாடி​யிலும் முஸ்​லிம் லீக் வேட்​பாளர் உதயசூரியன் சின்​னத்​தில் போட்​டி​யிட்டு இருந்​தால் அங்​கே​யும் அதி​முக தோற்​றுப் போயிருக்​கும். இதெல்​லாம் தெரிந்​திருந்​தும் வீரமணி தரப்​பினர் திருந்​தி​ய​பாடில்​லை.

    கடந்த நான்​கரை ஆண்​டு​களில் மாவட்​டச் செய​லா​ளர் பதவியைத் தவிர வேறெந்த பதவி​யும் இல்​லாமல் இருக்​கும் வீரமணி, அதனால் பட்​ட​பாடு கொஞ்​சம் நஞ்​சமல்ல. அதனால் தான் இம்​முறை எப்​படி​யா​வது ஜெயித்​தாக வேண்​டும் என்​ப​தற்​காக கட்சி நிர்​வாகி​களை தேடிச்​சென்று குசலம் விசா​ரிக்​கி​றார். ஆனால், கடந்த நாலரை ஆண்​டு​களில் வீரமணி​யின் செயல்​பாடு​கள் எப்​படி இருந்​தது என்​பதை நாங்​கள் யாரும் இன்​னும் மறக்​க​வில்​லை.

    மருத்​து​வர் பசுபதி அரசுப் பணியை ராஜி​னாமா செய்​து​விட்டு 2024 மக்​கள​வைத் தேர்​தலில் அதி​முக வேட்​பாள​ராக வேலூரில் போட்​டி​யிட்​டார். கட்​சிக்​காக சொத்தை எல்​லாம் அடமானம் வைத்து செல​வழித்த அவர், எம்பி தேர்​தலில் தோற்​றுப் போனாலும் எம்​எல்ஏ தேர்​தலில் தனக்கு கட்சி வாய்ப்​பளிக்​கும் என நம்​பிக் கொண்​டிருக்​கி​றார். ஆனால், அவரை கட்​சிக்​குள் முன்​வரிசைக்கு வரவி​டாத​படிக்கு முட்​டுக்​கட்டை போடு​கி​றார்​கள். களநில​வரத்​தைப் புரிந்து கொள்​ளாமல் இப்​படி அனை​வரை​யும் ஓரங்​கட்டி உட்​கார​வைக்​கும் அரசி​யலை இன்​ன​மும் செய்து கொண்​டிருந்​தால் இந்த மாவட்​டத்​தில் அதி​முக வெற்றி என்​பது கேள்விக்​குறி​யாகி விடும் என்​பதை தலை​மை​யும் புரிந்து கொள்ள வேண்​டும்” என்​ற​னர்.

    இதுகுறித்து மருத்​து​வர் பசுப​தி​யிடம் பேசி​ய​போது, “கட்​சிக்​குள் நான் புறக்​கணிக்கப்​படு​வ​தாக யாரோ வேண்​டுமென்றே தவறான தகவலை பரப்பி வரு​கி​றார்​கள். மக்​கள​வைத் தேர்​தலில் நிறைய செல​வாகி​விட்​ட​தால் கொஞ்​சம் பொருளீட்ட வேண்டி இருக்​கிறது. அதனால் பாதி நேரம் மருத்​து​வத் தொழில், மீதி நேரம் அரசி​யல் என ஓடிக்​கொண்​டிருக்​கிறேன். எடப்​பாடி​யார் பிரச்​சா​ரப் பயணம் வந்​த​போது கூட அவர் கூடவே தான் இருந்​தேன். கே.சி.வீரமணி எங்​கள் தொகு​திக்கு வரும்​போது அவரை​யும் சந்​தித்​துப் பேசி வரு​கிறேன். 2026-ல் அதி​முக வெற்​றிக்​காக நாங்​கள் அனை​வ​ரும் ஒன்​றாக உழைக்​கத் தயா​ராகவே இருக்​கி​றோம்” என்​றார்.

    கே.சி.வீரமணி​யிட​மும் பேசினோம். “திருப்​பத்​தூர் மாவட்​டம் மட்​டும் அல்​ல… தமி​ழ​கம் முழுக்​கவே இம்​முறை அதி​முக தான் வெற்​றிப்​பெறும். அதற்​கான வேலை​களை நாங்​கள் தொடங்கி விட்​டோம். தற்​போது நிகழ்ச்சி ஒன்​றில் இருப்​ப​தால் இதற்கு மேல் எது​வும் சொல்​வதற்கு இல்​லை” என்று மட்​டும் சொன்​னார் அவர்.

    தனது மாவட்​டத்​தில் தன்​னைப் போல் செல்​வாக்​கான ஒரு​வர் ஜெயித்​து​விட்​டால் அடுத்த கட்ட அரசி​யல் வளர்ச்சி அவரை நோக்​கிப் போய்​விடுமே எனப் பதறு​பவர்​கள், கட்சி தோற்​றுப் போனால் ஆட்சி அதி​காரமே கைக்கு வராதே என்று ஒரு கணம் சிந்தித்தால் எந்தக் கட்சியிலுமே செல்வாக்கான மனிதர்களை செல்லாக்காசாக்க துணிய மாட்டார்கள்!



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    மாநிலம்

    பத்திரிகையாளர்களுக்கு சமூக அக்கறை மிகவும் அவசியம்: மூத்த பத்திரிகையாளர் அறிவுரை

    September 3, 2025
    மாநிலம்

    108 ஆம்புலன்ஸ் ஓட்டுநர்களுக்கு பாதுகாப்பு கோரிய வழக்கு: டிஜிபி பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு

    September 3, 2025
    மாநிலம்

    திருச்சி வந்தடைந்தார் குடியரசுத் தலைவர் முர்மு: ஆளுநர், அமைச்சர்கள் வரவேற்பு

    September 3, 2025
    மாநிலம்

    “கழுதைகள் எங்கே என்று யாராவது கவலைப்படுகிறார்களா?” – தெருநாய்கள் குறித்த கேள்விக்கு கமல்ஹாசன் பதில்

    September 3, 2025
    மாநிலம்

    மயிலாப்பூர் சாய்பாபா கோயில் சமாஜ் நிர்வாகம் கலைப்பு: இடைக்கால நிர்வாகிகளாக ஓய்வுபெற்ற 2 நீதிபதிகள் நியமனம்

    September 3, 2025
    மாநிலம்

    மின்வாரிய ஊழியர்களுக்கு பண்டிகை கால முன்பணம் ரூ.20 ஆயிரமாக உயர்வு

    September 3, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • பத்திரிகையாளர்களுக்கு சமூக அக்கறை மிகவும் அவசியம்: மூத்த பத்திரிகையாளர் அறிவுரை
    • ஆறு மாதங்களுக்கு தாய்ப்பால் கொடுப்பது நீண்டகால மூளை வளர்ச்சி மற்றும் உயர் IQ: ஆய்வு | – தி டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • ​காங்கிரஸ், ஆர்ஜேடி நிகழ்ச்சியில் என் தாய் பற்றி அவதூறாக பேசியது எனக்கு மட்டுமல்ல, அனைத்து தாய்மாருக்கும் அவமானம்: பிரதமர் மோடி
    • இந்தியாவுடனான நல்லுறவை ட்ரம்ப்பின் ஈகோ அழிக்க அனுமதிக்க முடியாது: அமெரிக்க எம்.பி ரோ கன்னா
    • விஜய் ஆண்டனி தயாரிக்கும் ‘பூக்கி’ ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு

    Recent Comments

    No comments to show.

    Archives

    • September 2025
    • August 2025
    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.