Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Monday, September 15
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»மாநிலம்»‘தோட்டத்து வீடுகளில் தொடரும் கொலை, கொள்ளை சம்பவங்கள்’ – அரசுக்கு இபிஎஸ் கேள்வி
    மாநிலம்

    ‘தோட்டத்து வீடுகளில் தொடரும் கொலை, கொள்ளை சம்பவங்கள்’ – அரசுக்கு இபிஎஸ் கேள்வி

    adminBy adminJune 9, 2025No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    ‘தோட்டத்து வீடுகளில் தொடரும் கொலை, கொள்ளை சம்பவங்கள்’ – அரசுக்கு இபிஎஸ் கேள்வி
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    சென்னை: “தமிழகத்தின் மேற்கு மாவட்டங்களில், தோட்டத்து வீடுகளில் உள்ள விவசாயிகளை குறிவைத்து நடத்தப்படும் கொலை – கொள்ளை சம்பவங்களை தடுக்க இந்த திமுக அரசு என்ன நடவடிக்கை எடுத்தது?” என அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பியுள்ளார்.

    இது குறித்து அவர் தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவில், “நாமக்கல் மாவட்டம் சித்தம்பூண்டி கிராமத்தைச் சேர்ந்த சாமியாத்தாள் என்ற மூதாட்டி, தனது தோட்டத்து வீட்டில் மர்மக் கொள்ளையர்களால் படுகொலை செய்யப்பட்ட செய்தி கேட்டு அதிர்ச்சி அடைந்தேன். மறைந்த சாமியாத்தாள் அவர்களின் குடும்பத்தாருக்கு அதிமுக சார்பில் எனது ஆழ்ந்த இரங்கலையும் வருத்தங்களையும் தெரிவித்துக்கொள்கிறேன்

    சாமியாத்தாள் வெட்டப்பட்டு, கோவை KMCH மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும், அவருக்கு ரத்தம் தேவைப் படுவதாகவும் நேற்று காலை தகவல் வந்ததும், நம் அதிமுக ஐடி விங்க்கை சார்ந்த இளைஞர்கள் அதற்கான ஏற்பாடுகளை துரிதமாக மேற்கொண்டும், அதற்குள் சிகிச்சைப் பலனின்றி சாமியாத்தாள் உயிரிழந்துவிட்டார் என்பது மிகவும் வேதனைக்குரியது .

    மாநிலத்தையே உலுக்கிய பல்லடம் மூவர் கொலை, சிவகிரி இரட்டைக் கொலை சம்பவங்களுக்குப் பிறகும் இந்த திமுக அரசு இன்னும் திருந்தவில்லை. தமிழகத்தின் மேற்கு மாவட்டங்களில், தோட்டத்து வீடுகளில் உள்ள விவசாயிகளை குறிவைத்து நடத்தப்படும் இந்த கொலை – கொள்ளை சம்பவங்களை தடுக்க இந்த திமுக அரசு என்ன நடவடிக்கை எடுத்தது?

    பல்லடம், சிவகிரி வழக்குகளில் கைது செய்யப்பட்ட குற்றவாளிகள் மட்டுமே இந்த குற்றங்களை செய்தவர்களா என்ற சந்தேகம் மக்களிடையே ஏற்கெனவே உள்ள நிலையில், இச்சம்பவம் அச்சந்தேகத்தை வலுப்பெறவே செய்துள்ளது. தமிழ்நாட்டு மக்கள் ஒவ்வொரு நாளும் பாதுகாப்பாக கடப்பதையே ஓர் அக்னிப் பரீட்சையாக மாற்றிய ஸ்டாலின் மாடல் திமுக அரசுக்கு எனது கடும் கண்டனம்.

    சித்தம்பூண்டி சாமியாத்தாள் கொலை வழக்கில் உண்மையான குற்றவாளிகளைக் கைது செய்து சட்ட நடவடிக்கை எடுப்பதுடன், தொடரும் சட்டம் – ஒழுங்கு சீர்கேடுகளை இனியேனும் அடக்க முயலுமாறு முதலமைச்சரை வலியுறுத்துகிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    மாநிலம்

    “நடிகர் அஜித் வந்தாலும் கூட்டம் வரத்தான் செய்யும்” – விஜய் பிரச்சாரம் குறித்து சீமான் விமர்சனம்

    September 15, 2025
    மாநிலம்

    “விஜய் வருகையால் அனைத்து கட்சிகளின் வாக்குகள் சிதறும்” – கார்த்தி சிதம்பரம் எம்.பி கருத்து

    September 15, 2025
    மாநிலம்

    வக்பு சட்டம் | ஆட்சியர் அதிகாரம் உள்ளிட்ட சில விதிகளுக்கு உச்ச நீதிமன்றம் தடை: முதல்வர் ஸ்டாலின் வரவேற்பு

    September 15, 2025
    மாநிலம்

    அதிமுகவின் சட்ட விதிகளுக்கு இன்று ஊறு ஏற்பட்டுள்ளது – ஓபிஎஸ் குற்றச்சாட்டு

    September 15, 2025
    மாநிலம்

    அண்ணாவின் 117வது பிறந்த நாள்: இபிஎஸ் தலைமையில் அதிமுகவினர் மரியாதை

    September 15, 2025
    மாநிலம்

    “எம்ஜிஆரின் செல்வாக்கை திருடப் பார்க்கிறார்கள்” – விஜய்யை மறைமுகமாக சாடிய ராஜேந்திர பாலாஜி

    September 15, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • “நடிகர் அஜித் வந்தாலும் கூட்டம் வரத்தான் செய்யும்” – விஜய் பிரச்சாரம் குறித்து சீமான் விமர்சனம்
    • கூகிள் ஜெமினி ஐ நானோ வாழை AI படங்கள்: உங்கள் சொந்த ரெட்ரோ சேலை படங்களை உருவாக்க படி வழிகாட்டியின் படி
    • உச்ச நீதிமன்றம் நிறுத்திவைத்துள்ள வக்பு சட்ட விதிகள் குறித்து அரசு ஆராயும்: கிரண் ரிஜிஜு
    • “விஜய் வருகையால் அனைத்து கட்சிகளின் வாக்குகள் சிதறும்” – கார்த்தி சிதம்பரம் எம்.பி கருத்து
    • உங்கள் பற்களை சேதப்படுத்திய பிறகு கழுவுகிறதா? ஆராய்ச்சி வெளிப்படுத்துகிறது | – தி டைம்ஸ் ஆஃப் இந்தியா

    Recent Comments

    No comments to show.

    Archives

    • September 2025
    • August 2025
    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.