Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Monday, June 30
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»மாநிலம்»தொழிலாளிக்கு இழப்பீடு வழங்காத ஓசூர் மாநகராட்சி: ஜப்தி நடவடிக்கை முன்னெடுப்பால் பரபரப்பு
    மாநிலம்

    தொழிலாளிக்கு இழப்பீடு வழங்காத ஓசூர் மாநகராட்சி: ஜப்தி நடவடிக்கை முன்னெடுப்பால் பரபரப்பு

    adminBy adminJune 4, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    தொழிலாளிக்கு இழப்பீடு வழங்காத ஓசூர் மாநகராட்சி: ஜப்தி நடவடிக்கை முன்னெடுப்பால் பரபரப்பு
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    ஓசூர்: ஒசூரில் கழிவுநீர் கால்வாயில் விழுந்த தொழிலாளிக்கு இழப்பீடு வழங்காத மாநகராட்சியின் அசையா சொத்துகளை நீதிமன்ற ஊழியர்கள் ஜப்தி செய்ய வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

    கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் ராஜீவ்காந்தி நகரை சேர்ந்த விவேகானந்தன் (55). இவர் தனியார் தொழிற்சாலையில் பணி செய்து வந்தார். இந்நிலையில், கடந்த 1996-ம் ஆண்டு ஓசூர் பேருந்து நிலையம் அருகே நகராட்சிக்கு சொந்தமன திறந்த நிலையில் இருந்த கழிவுநீர் கால்வாயில் தவறிவிழுந்தார். மேலும், கழிவுநீர் கால்வாயில் இருந்து வெளியான விஷ வாய்வு தாக்கி உயிரிழந்தார்.

    இதனையடுத்து உயிரிழந்த விவேகானந்தனின் மனைவி சாந்தி கணவர் உயிரிப்புக்கு நகராட்சியின் அலட்சியமே காரணம், எனவே ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என ஓசூர் சார்பு நீதிமன்றத்தில் 2001-ம் ஆண்டு வழக்கு தொடந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் கடந்த 2015-ம் ஆண்டு ரூ.6.65 லட்சம் இழப்பீடு வழங்க மாநகராட்சிக்கு உத்தரவிட்டது. இருப்பினும், நகராட்சி சார்பில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய இழப்பீடு வழங்கவில்லை என கூறப்படுகிறது.

    இதனிடையே, உயிரிழந்த விவேகானந்தன் மனைவி சாந்தி, மீண்டும் நீதிமன்றத்தை நாடினார். அப்போது 2 மாதங்களுக்குள் 9 சதவீதம் வட்டி உடன் சேர்த்து பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு இழப்பீடு வழங்க வேண்டும் என நகராட்சிக்கு மீண்டும் உத்தரவிட்டது. இருப்பினும், மாநகராட்சி சார்பில் இழப்பீடு வழங்காததையடுத்து சாந்தி நீதிமன்றத்தில் உத்தரவை நிறைவேற்ற மனு தாக்கல் செய்தார்.

    இதனையடுத்து இன்று சார்பு நீதிமன்ற நீதிபதி, மாநகராட்சியின் அசையா சொத்துகளை ஜப்தி செய்ய உத்தரவிட்டார். இதனையடுத்து பாதிக்கப்பட்ட சாந்தி, நீதிமன்ற ஊழியர்கள் மற்றும் போலீஸாருடன் ஓசூர் மாநகராட்சியின் அசையா சொத்துகளை ஜப்தி செய்ய சென்றனர். நீதிமன்றத்தின் ஜப்தி கடிதத்தை நீதிமன்ற ஊழியர் ஓசூர் மாநகராட்சி ஆணையர் மாரிசெல்வியிடம் வழங்கினார்.

    இதனையடுத்து பாதிக்கப்பட்ட சாந்தியிடம் ஆணையாளர் ஒரு வாரத்திற்குள் வட்டியுடன் சேர்த்து ரூ.20.85 லட்சம் வழங்குவதாக அவகாசம் வழங்கு கோரிக்கை விடுத்தார். பின்னர் பாதிக்கப்பட்டவர் சம்மதம் தெரிவித்தையடுத்து, நீதிமன்ற ஊழியர்கள் ஜப்தி நடவடிக்கையை கைவிட்டு திரும்பி சென்றனர். நீதிமன்ற ஊழியர்கள் ஜப்தி செய்ய மாநகராட்சி அலுவலகம் வந்த சம்பத்தால் ஓசூரில் பரபரப்பு ஏற்பட்டது.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    மாநிலம்

    “திராவிட மாடல் ஆட்சி என்பது வெறும் வார்த்தை ஜாலம் அல்ல” – உதயநிதி விவரிப்பு 

    June 30, 2025
    மாநிலம்

    இடம் தயார், பணமும் தயார்… தீயணைப்பு நிலையம் கட்டுவது எப்போது? – செய்யூர் மக்கள் எதிர்பார்ப்பு

    June 30, 2025
    மாநிலம்

    இதய சிகிச்சை நிபுணர் இல்லாத காஞ்சிபுரம் தலைமை மருத்துவமனை – 8 பேர் உயிரிழந்த பரிதாபம்

    June 30, 2025
    மாநிலம்

    “ரஹ்மானுடன் அரசியல் பேசவில்லை; பாஜகவுக்கு மீனா வந்தால்…” – எல்.முருகன் விவரிப்பு

    June 30, 2025
    மாநிலம்

    புதுச்சேரி மாநில பாஜக தலைவராக வி.பி.ராமலிங்கம் பதவியேற்பு

    June 30, 2025
    மாநிலம்

    அரசு மருத்துவர்களுக்கு அரசாணை 354-ன் படி ஊதிய மாற்றத்தை அமல்படுத்த வேண்டும்: பெ.சண்முகம்

    June 30, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • ‘என் ஊரில் ஆடுகளம் கூட இல்லை!’ – இந்திய கால்பந்து அணியில் அசத்தும் தமிழக வீராங்கனை பிரியதர்ஷினி
    • தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கம் Vs ஃபெப்சி: மத்தியஸ்தரை நியமிக்க ஐகோர்ட் முடிவு
    • “திராவிட மாடல் ஆட்சி என்பது வெறும் வார்த்தை ஜாலம் அல்ல” – உதயநிதி விவரிப்பு 
    • உயர் இரத்த அழுத்தம் மட்டுமல்ல, குறைந்த இரத்த அழுத்தமும் இதய பிரச்சினைகளை ஏற்படுத்தும், ஆனால் ஒரு பிடிப்பு இருக்கிறது .. | – டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • இடம் தயார், பணமும் தயார்… தீயணைப்பு நிலையம் கட்டுவது எப்போது? – செய்யூர் மக்கள் எதிர்பார்ப்பு

    Recent Comments

    No comments to show.

    Archives

    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.