மேலும், ஏரிக்கரையை சுற்றிலும் நடைபயிற்சி மேற்கொள்ள நடைபாதையும், சிறுவர் பூங்காவும் அமைக்க வேண்டுமென, பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி வருகின்றனர். இதற்கு முன்பு, கடந்த 2020-ம் ஆண்டு ரூ.10 கோடியில் ஏரியை சீரமைக்கும் பணிகள் தொடங்கியும் முழுமையாக நடைபெறமால் கிடப்பில் போடப்பட்டது. சென்னை மாநகராட்சி, இந்த ஏரியை மழைநீர் சேகரிப்பு மையமாக மாற்ற வேண்டுமென, அப்பகுதி மக்களும், சமூக ஆர்வலர்களும் தொடந்து கோரிக்கை வைத்து வருகின்றனர்.
இதுகுறித்து, சமூக ஆர்வலர் பிரிட்டோ கூறியதாவது: பள்ளிக்கரணை அணை ஏரி பல ஆண்டுகளாக பராமரிக்கப்படாமல் உள்ளதால் மழைநீரை சேமிக்க முடியாத நிலையில், தரைமட்டத்திலேயே அதன் கொள்ளளவு காணப்படுகிறது. ஏரியின் அருகே கழிவுநீரை சுத்திகரிக்க, சுத்திகரிப்பு நிலையம் அமைக்க வேண்டுமென, தொடர்ந்து கோரிக்கை வைத்து வருகிறோம்.

