Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Sunday, September 14
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»மாநிலம்»தொகுதி மறுவரையறை நடந்தால் தமிழகத்துக்கு பிரதிநிதித்துவம் இல்லாமல் போகும்: செல்வப்பெருந்தகை
    மாநிலம்

    தொகுதி மறுவரையறை நடந்தால் தமிழகத்துக்கு பிரதிநிதித்துவம் இல்லாமல் போகும்: செல்வப்பெருந்தகை

    adminBy adminJune 8, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    தொகுதி மறுவரையறை நடந்தால் தமிழகத்துக்கு பிரதிநிதித்துவம் இல்லாமல் போகும்: செல்வப்பெருந்தகை
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    பா.ஜ.க திட்டமிட்டது போல நாடாளுமன்ற தொகுதி மறுசீரமைப்பு நடந்தால், தமிழகத்துக்கு பிரதிநிதித்துவம் இல்லாமல் போகும் என கோவையில் காங்கிரஸ் மாநில தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்தார்.

    தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை சென்னையில் இருந்து விமானம் மூலம் நேற்று கோவை வந்தார். கோவை விமான நிலையத்தில் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

    மத்திய அரசு தமிழ்நாட்டுக்கு கிடைக்க வேண்டிய நிதியை கொடுக்காமல், வேறு மாநிலங்களுக்கு நிதியை கொடுக்கின்றனர். இதற்கு மத்திய அமைச்சர் முருகன் பதில் தெரிவிக்க வேண்டும். தமிழக மக்களின் ரத்தம், வியர்வையை உறிஞ்சும் பாஜக அரசு பள்ளிக் கல்வி நிதி, பேரிடர் நிவாரண நிதி, தமிழக பங்களிப்பு நிதி போன்றவற்றை ஏன் கொடுக்கவில்லை? ஏன் மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் நடந்து கொள்கிறது.

    மக்களை பதற்றத்தோடும், அச்சத்தோடும் வைத்திருக்க வேண்டும் என ஆர்.எஸ்.எஸ், பா.ஜ.க நினைக்கிறது. இதற்காகத்தான் முருகன் மாநாட்டை நடத்துகின்றனர். முருகன் மாநாட்டை குஜராத், உத்தரபிரதேசம், மத்திய பிரதேசம் போன்ற இடங்களில் நடத்தி இந்து கடவுள்களை சமமாக வைத்திருப்பதை காட்ட வேண்டும். வடமாநிலங்களை போல், தென் மாநிலத்தில் கலவரத்தை தூண்ட முடியுமா என அவர்கள் காத்திருக்கின்றனர்.

    மறுசீரமைப்பு காரணமாக தென் மாநிலங்கள் பாதிக்கப்படும். பா.ஜ.க விரும்பியதை போல மறுசீரமைப்பு செய்யப்பட்டால், தென் மாநிலத்தின் வாக்குகளே தேவையில்லை. தென் மாநில நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையும் தேவை இல்லை என்ற நிலை ஏற்படும். இதற்காக திட்டமிட்டு சதி வேலையில் ஈடுபட்டு இருக்கின்றனர்.

    அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி வராததை வருவதாக, பூச்சாண்டி கட்டுவதாக, மறுசீரமைப்பு குறித்து பேசியிருக்கிறார். அப்படியானால் நாடாளுமன்றத்தில் எதற்காக ஆயிரம் இருக்கைகள் போடப்பட்டுள்ளன. இப்போது எம்.பி.கள் 10 நிமிடத்திற்கு மேல் பேச முடிவதில்லை. எம்.பி.களின் எண்ணிக்கை உயர்ந்தால் இரண்டு நிமிடம் கூட நேரம் கிடைக்காது. இதெல்லாம் எதிர்க்கட்சி தலைவர் பழனிசாமிக்கு புரிகின்றதா? இல்லையா? எனத் தெரியவில்லை.

    மறுசீரமைப்பு பா.ஜ.க திட்டமிட்டது போல நடந்தால், தமிழகத்துக்கு பிரதிநிதித்துவம் இல்லாமல் போகும். தென்னிந்திய பிரதிநிதித்துவம் குறைந்து போகும். வடமாநில பிரதிநிதித்துவம் உயரும். வட மாநில பிரதிநிதிகளே அனைத்தையும் முடிவு செய்து கொள்வார்கள். மக்கள் தொகை கணக்கெடுப்பை உடனடியாக நடத்த வேண்டும். புள்ளியியல் துறை மத்திய அரசிடம் தான் இருக்கிறது. மத்திய அமைச்சர் அமித்ஷா வருகை மூலம் தமிழகத்தில் ஏதாவது குழப்பம் செய்யலாமா? கால் ஊன்றலாமா ? என பா.ஜ.கவினர் முயற்சி செய்து பார்க்கின்றனர். அவர்களின் எந்த திட்டமும் நிறைவேறாது. பா.ஜ.க.வுக்கும், ஆர்.எஸ்.எஸ் அமைப்பிற்கும் தமிழ் மண்ணில் இடமில்லை. இவ்வாறு அவர் கூறினார்.

    முன்​ன​தாக, சென்னை விமான நிலை​யத்​தில் செய்​தி​யாளர்​களிடம் செல்​வப்​பெருந்​தகை கூறும்​போது, “சாதி வாரி கணக்​கெடுப்பை 2027-ம் ஆண்​டுக்கு மத்​திய பாஜக அரசு தள்​ளிப் போட்​ட​தில், அரசி​யல் சூழ்ச்சி உள்​ளது” என்​றார்.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    மாநிலம்

    ”மத்திய அரசு கொடுத்த நிதிக்கு தமிழக அரசு கணக்கு கொடுக்கவில்லை” – வானதி குற்றச்சாட்டு

    September 14, 2025
    மாநிலம்

    நாளையுடன் முடிவடையும் கெடு – செங்கோட்டையன் நல்ல செய்தி சொல்வார் என ஓபிஎஸ் பேட்டி

    September 14, 2025
    மாநிலம்

    கிருஷ்ணகிரி மாவட்டத்தின் 11வது ஒன்றியமாக ‘அஞ்செட்டி’ உதயம்: முதல்வர் அறிவிப்பு

    September 14, 2025
    மாநிலம்

    ”விஜய் தலைமையில் ஒரு கூட்டணி அமைவது நிச்சயம், ஆனால்…” – தினகரன் கருத்து

    September 14, 2025
    மாநிலம்

    கூட்டணி ஆட்சி எனும் விஜய்யின் கருத்தை புதிய தமிழகம் கட்சி வரவேற்கிறது: கிருஷ்ணசாமி

    September 14, 2025
    மாநிலம்

    இந்து சமய அறநிலையத்துறை சார்பில் 32 இணைகளுக்கு திருமணம் – உதயநிதி நேரில் வாழ்த்து

    September 14, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • ”மத்திய அரசு கொடுத்த நிதிக்கு தமிழக அரசு கணக்கு கொடுக்கவில்லை” – வானதி குற்றச்சாட்டு
    • உங்கள் கல்லீரலுக்காக எழுந்து நிற்க: குறைவாக உட்கார்ந்து கல்லீரல் நோய் அபாயத்தைக் குறைக்கும் | – தி டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • எல்லையில் மக்கள்தொகையை மாற்றும் சதியை முறியடிக்க விரைவில் நடவடிக்கை – பிரதமர் மோடி
    • நாளையுடன் முடிவடையும் கெடு – செங்கோட்டையன் நல்ல செய்தி சொல்வார் என ஓபிஎஸ் பேட்டி
    • இயற்கையின் ஓசெம்பிக்: மருந்தைப் பிரதிபலிக்கும் 4 பிரதான இந்திய உணவுகள், மற்றும் இரத்த சர்க்கரையை ஒழுங்குபடுத்த உதவுகின்றன, எடை இழப்பு

    Recent Comments

    No comments to show.

    Archives

    • September 2025
    • August 2025
    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.