Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Wednesday, August 20
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»மாநிலம்»தேவாலயத்தில் நடந்த சுதந்திர தின விழாவில் தேசிய கீதம் மெட்டில் கிறிஸ்தவ பாடல் ஒலிபரப்பு? – குமரி போலீஸார் தீவிர விசாரணை
    மாநிலம்

    தேவாலயத்தில் நடந்த சுதந்திர தின விழாவில் தேசிய கீதம் மெட்டில் கிறிஸ்தவ பாடல் ஒலிபரப்பு? – குமரி போலீஸார் தீவிர விசாரணை

    adminBy adminAugust 20, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    தேவாலயத்தில் நடந்த சுதந்திர தின விழாவில் தேசிய கீதம் மெட்டில் கிறிஸ்தவ பாடல் ஒலிபரப்பு? – குமரி போலீஸார் தீவிர விசாரணை
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    நாகர்கோவில்: தேசிய கீதம் மெட்​டில் கிறிஸ்தவ மதப் பிரச்​சாரப் பாடல் ஒலிபரப்​பானதாக வெளியான வீடியோ தொடர்பாக அதன் உண்மைத் தன்மை குறித்து குமரி போலீ​ஸார் விசா​ரித்து வரு​கின்​றனர்.

    நெல்​லை, தென்​காசி, கன்​னி​யாகுமரி, தூத்​துக்​குடி உள்​ளிட்ட மாவட்​டங்​களில் உள்ள கிறிஸ்தவ ஆலயங்​களில் சுதந்​திரதினம், குடியரசு தினத்​தன்று தேசி​யக் கொடி ஏற்​று​வது வழக்கம். அவற்​றில் சிஎஸ்ஐ உட்பட சில பிரிவு ஆலயங்​களில் தேசியகீதத்​துக்​குப் பதிலாக, அதே மெட்​டில் கிறிஸ்​தவப் பாடலை பாடு​வது, ஒலிபரப்​புவதாகக் கூறப்படுகிறது.

    அண்​மை​யில் நடை​பெற்ற சுதந்​திர தினவிழா​வில், கிறிஸ்தவ ஆலயம் ஒன்​றில் தேசி​யக் கொடியேற்​றிய பின்​னர், தேசிய கீதம் மெட்​டுடன் கிறிஸ்​தவப் பிரச்​சார பாடல்பாடப்​படும் வீடியோ கடந்த இரு நாட்​களாக சமூக வலை​தளங்​களில் பரவி வரு​கிறது. அந்த நிகழ்வு நடந்த இடம் நாகர்​கோ​வில் என வீடியோ​வில் குறிப்​பிடப்​பட்​டுள்​ளது. இதுகுறித்​து, கன்​னி​யாகுமரி மாவட்ட போலீஸார் மற்​றும் உளவுத் துறை​யினர் விசா​ரணை மேற்​கொண்​டனர்.

    இதுகுறித்து போலீ​ஸார் கூறும்​போது, “நாகர்​கோ​விலில் நடந்​தது​போல பரவி வரும் வீடியோ​வில், கிறிஸ்தவ பாதிரி​யார் மற்​றும் பொது​மக்​கள் தேசிய கீத மெட்​டுடன் கிறிஸ்​தவப் பாடலை பாடி கொடியேற்​று​வது பதி​வாகி​யுள்​ளது. இதுகுறித்து விசா​ரித்து வருகிறோம். வீடியோ​வில் பாடல் எடிட்செய்​யப்​பட்​டதா எனவும் ஆய்வு செய்து வரு​கிறோம்.

    உண்மைத் தன்மை குறித்து சைபர் கிரைம் போலீ​ஸாரும் விசா​ரித்து வரு​கின்​றனர்” என்​றனர். இந்​நிலை​யில், பாடல் ஒளிபரப்பப்பட்ட வீடியோ​வில் இந்து அமைப்பு பெயரிலான ‘லோகோ’ அச்​சிடப்​பட்​டுள்​ளது. இந்த வீடியோவை சுதந்​திர தினத்தன்று இரவே முகநூலிலும் வெளி​யிட்​டுள்​ளனர். வீடியோ வெளி​யிட்​ட​வரை கண்​டறிந்​து, உண்மை நிலையை அறிய போலீஸார் திட்​ட​மிட்​டுள்​ளனர்.

    இதுகுறித்​து, திருநெல்​வேலி வழக்​கறிஞர் அ.பிரம்மா கூறும்​போது, “தேசி​யக் கொடியை ஏற்​றி​வைத்​து, தேசிய கீதம் பாடா​மல், மரியாதை மட்​டுமே செலுத்​து​வது சட்​டப்​படி ஏற்​றுக் கொள்​ளப்​படும். ஆனால், தேசிய கீதம் பாடலின் இசையை மத நோக்​கில் பயன்​படுத்​துதல், அதை தேசி​யக்​கொடி ஏற்​றும் சமயத்​தில் பாடு​தல் ஆகிய​வை, அதி​காரப்​பூர்வ தேசிய கீதத்தை மாற்​றிப் பயன்​படுத்​தல் என்ற வகை​யில் அவம​திப்​பாக கருதப்​படும்.

    தேசி​யக்​கொடி ஏற்​றும்​போது அரசு அங்​கீகரித்த தேசிய கீதம் மட்​டுமே பாட வேண்​டும். அதை தவிர்த்​து, வேறு எந்​தப் பாடலும் பாடக்​கூ​டாது. தேசிய கீதத்தை புதிய மெட்​டில் பாடி​னாலும், அது தேசி​யக்கொடிக்​கான மரி​யாதை விதி​முறையை மீறு​வ​தாகக் கருதப்​படும்’’ என்றார்.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    மாநிலம்

    மதிமுகவில் இருந்து மல்லை சத்யா தற்காலிக நீக்கம்

    August 20, 2025
    மாநிலம்

    துணை ஜனாதிபதி வேட்பாளராக சிபிஆர்… திமுகவுக்கு அக்னிப் பரீட்சை வைத்த பாஜக!

    August 20, 2025
    மாநிலம்

    வேளாண்மை, பொதுப்பணி, நெடுஞ்சாலைத் துறையில் 412 பேருக்கு பணி நியமன ஆணை: முதல்வர் வழங்கினார்

    August 20, 2025
    மாநிலம்

    மதுரையில் நாளை தவெக 2-வது மாநில மாநாடு

    August 20, 2025
    மாநிலம்

    குற்றச்சாட்டுகளுக்கு விளக்கம் கேட்டு அன்புமணிக்கு நோட்டீஸ் அனுப்பிய ராமதாஸ்: ஆக.31-ம் தேதிக்குள் பதில் அளிக்க வேண்டும்

    August 20, 2025
    மாநிலம்

    பிரச்சார கூட்டங்களில் ஆளில்லாத ஆம்புலன்ஸ் வந்தால் ஓட்டுநர் நோயாளியாக அனுப்பப்படுவார்: இபிஎஸ் எச்சரிக்கை 

    August 20, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • விமானங்களை போல ரயில்களிலும் பயணிகளின் சுமைகளுக்கு கட்டுப்பாடு
    • ஆதிதிராவிடர், பழங்குடியின இளைஞர்களுக்கு ட்ரோன் தயாரிப்பு, சென்சார் சோதனை பயிற்சி: தாட்கோ நிறுவனம் அறிவிப்பு
    • மதிமுகவில் இருந்து மல்லை சத்யா தற்காலிக நீக்கம்
    • மன அதிர்ச்சி: மறைக்கப்பட்ட அதிர்ச்சி ஏன் ஆபத்தானது என்பதை சிறந்த உளவியலாளர் விளக்குகிறார் | – டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • ஏழுமலையான் தரிசனத்துக்கு இடைத்தரகரை அணுக வேண்டாம்: திருப்பதி தேவஸ்தானம் வேண்டுகோள்

    Recent Comments

    No comments to show.

    Archives

    • August 2025
    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.