Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Monday, August 18
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»மாநிலம்»தேஜஸ், மன்னை, குருவாயூர் உட்பட 5 விரைவு ரயில்கள் தாம்பரத்தில் இருந்து இயக்கம்
    மாநிலம்

    தேஜஸ், மன்னை, குருவாயூர் உட்பட 5 விரைவு ரயில்கள் தாம்பரத்தில் இருந்து இயக்கம்

    adminBy adminJune 13, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    தேஜஸ், மன்னை, குருவாயூர் உட்பட 5 விரைவு ரயில்கள் தாம்பரத்தில் இருந்து இயக்கம்
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    சென்னை: எழும்பூர் ரயில் நிலையத்தில் மறுசீரமைப் பணியால், தேஜஸ், மன்னை, குருவாயூர் விரைவு ரயில் உள்பட 5 ரயில்கள் தாம்பரத்தில் இருந்து இயக்கப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளளது.

    தமிழகத்தில் முக்கிய ரயில் நிலையங்களில் ஒன்றான எழும்பூர் ரயில் நிலையத்தில் ரூ.734.91 கோடி மதிப்பில் மறுசீரமைப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. தற்போது, நடைமேம்பாலம் அமைக்க ஆரம்பக்கட்ட பணிகள் தொடங்கியுள்ளன.

    இதனால், எழும்பூர் – புதுச்சேரி இடையே இயக்கப்படும் புதுச்சேரி மெமு பாசஞ்சர் ரயில் கடற்கரை ரயில் நிலையத்தில் இருந்து புறப்பட்டு, வந்தடையும் என்றும், புதுடெல்லி – எழும்பூர் இடையே இயக்கப்பட்ட கிராண்ட் டிரங்க் ரயில் சென்ட்ரலில் இருந்து இயக்கப்படும் என்றும் ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்தது.

    இதன் தொடர்ச்சியாக, எழும்பூர் – மதுரை தேஜஸ் விரைவு ரயில் உள்பட 6 விரைவு ரயில்கள் புறப்படும் இடம் மாற்றம் செய்யப்பட உள்ளன. இவற்றில் 5 விரைவு ரயில்கள் தாம்பரத்தில் இருந்து இயக்கப்பட உள்ளன.

    அதன்படி, சென்னை எழும்பூர் – மதுரை இடையே இயக்கப்படும் தேஜஸ் விரைவு ரயில் (22671-22672) ஜூன் 20 முதல் ஆக.18-ம் தேதி வரை தாம்பரத்தில் இருந்து காலை 6.22 மணிக்கு புறப்படும். அதேபோல், இரவு 9.25 மணிக்கு வந்தடையும்.

    எழும்பூர் – மன்னார்குடி இடையே இயக்கப்படும் மன்னை விரைவு ரயில் (16179-16180) ஜூன் 20 முதல் ஆக.18-ம் தேதி வரை தாம்பரத்தில் இரவு 11.22 மணிக்கு புறப்படும். மன்னார்குடியில் இருந்து தாம்பரத்துக்கு அதிகாலை 5 மணிக்கு வந்தடையும்.

    எழும்பூர் – திருச்செந்தூர் இடையே இயக்கப்படும் செந்தூர் விரைவு ரயில் (20605-20606) ஜூன் 20 முதல் ஆக.18-ம் தேதி வரை தாம்பரத்தில் இருந்து மாலை 4.27 மணிக்கு புறப்படும். காலை 10 மணிக்கு தாம்பரத்தை வந்தடையும்.

    எழும்பூர் – குருவாயூர் இடையே இயக்கப்படும் விரைவு ரயில் (16127-16128) ஜூன் 20 முதல் ஆக.19-ம் தேதி வரை தாம்பரத்தில் இருந்து காலை 10.47 மணிக்கு புறப்படும். இதுபோல, குருவாயூரில் இருந்து புறப்பட்டு இரவு 7.45 மணிக்கு தாம்பரம் வந்தடையும்.

    எழும்பூர் – கொல்லம் இடையே இயக்கப்படும் விரைவு ரயில் (16101-16102), ஜூன் 20 முதல் ஆக.18-ம் தேதி வரை தாம்பரத்தில் இருந்து மாலை 5.27 மணிக்கு புறப்படும். தாம்பரத்துக்கு அதிகாலை 2.45 மணிக்கு வந்தடையும்.

    கடற்கரையில் இருந்து இயக்கம்: தாம்பரம் – ஹைதராபாத் இடையே இயக்கப்படும் விரைவு ரயில் (12759, 12760), ஜூன் 20 முதல் ஆக.18-ம் தேதி வரை சென்னை கடற்கரையில் இருந்து இயக்கப்படும்.

    மதுரை – ராஜஸ்தான் மாநிலம் பிகானிர் வாராந்திர விரைவு ரயில் (22631) ஜூன் 26 முதல் ஆக.14-ம் தேதி வரையும், மன்னார்குடி – ராஜஸ்தான் ஜோத்பூர் வாராந்திர விரைவு ரயில் ஜூன் 23 முதல் ஆக.18-ம் தேதி வரை எழும்பூருக்குப் பதிலாக கடற்கரை ரயில் நிலையத்தில் நின்றுசெல்லும்.

    இத்தகவல் தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    மாநிலம்

    மதுரை தவெக மாநாடுக்கு இருசக்கர வாகனங்களில் வருவதை தவிர்க்க வேண்டும்: காவல் துறை

    August 18, 2025
    மாநிலம்

    3 ஆண்டுகளுக்கும் மேலான நிலுவை வழக்குகள்: சென்னை உயர் நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரணை!

    August 18, 2025
    மாநிலம்

    தீபாவளி முன்பதிவு: தென் மாவட்ட முக்கிய ரயில்களில் மூன்றரை நிமிடங்களில் விற்றுத் தீர்ந்த டிக்கெட்

    August 18, 2025
    மாநிலம்

    தமிழகத்தில் ஆகஸ்ட் 19-ம் தேதி முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு

    August 18, 2025
    மாநிலம்

    இல.கணேசனுக்கு புகழஞ்சலி: முதல்வர் உள்பட அரசியல் கட்சித் தலைவர்களுக்கு பாஜக நேரில் அழைப்பு

    August 18, 2025
    மாநிலம்

    சொத்து வரி முறைகேடு விவகாரத்தில் அதிமுக அடக்கி வாசிக்கிறதா? – சந்தேகம் வலுப்பதன் பின்னணி

    August 18, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • மதுரை தவெக மாநாடுக்கு இருசக்கர வாகனங்களில் வருவதை தவிர்க்க வேண்டும்: காவல் துறை
    • ஆப்டிகல் மாயை: உங்களுக்கு உளவு பார்வை இருப்பதாக நினைக்கிறீர்களா? இந்த 7-வினாடி ஈமோஜி சோதனையுடன் அதை நிரூபிக்கவும்! | – டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • 3 ஆண்டுகளுக்கும் மேலான நிலுவை வழக்குகள்: சென்னை உயர் நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரணை!
    • உங்கள் வொர்க்அவுட் தேர்வுகளுக்குப் பின்னால் உள்ள அறிவியல்: உங்கள் ஆளுமை எவ்வாறு உடற்பயிற்சி தேர்வுகள் | – டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • செவ்வாய் உருவகப்படுத்துதல் உயிர்வாழ்வை சோதிக்க நாசா ஒரு வருடம் அவற்றைப் பூட்டினார் -அவர்கள் ஒரு பிஎஸ் 4 உடன் என்ன செய்தார்கள் என்பது உங்களைத் திகைக்க வைக்கும் | – தி டைம்ஸ் ஆஃப் இந்தியா

    Recent Comments

    No comments to show.

    Archives

    • August 2025
    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.