Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Thursday, July 10
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»மாநிலம்»தெற்கு ரயில்வேயில் 276 கேட்களில் ‘இன்டர்லாக்கிங்’ வசதி இல்லை: முழுமையாக ஏற்படுத்த பயணிகள் கோரிக்கை
    மாநிலம்

    தெற்கு ரயில்வேயில் 276 கேட்களில் ‘இன்டர்லாக்கிங்’ வசதி இல்லை: முழுமையாக ஏற்படுத்த பயணிகள் கோரிக்கை

    adminBy adminJuly 10, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    தெற்கு ரயில்வேயில் 276 கேட்களில் ‘இன்டர்லாக்கிங்’ வசதி இல்லை: முழுமையாக ஏற்படுத்த பயணிகள் கோரிக்கை
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    சென்னை: தெற்கு ரயில்வேயில் 276 லெவல் கிராசிங்குகளில் ‘இன்டர்லாக்கிங்’ வசதி இல்லாதது தெரியவந்துள்ளது. இந்த கேட்களிலும் ‘இன்டர்லாக்கிங்’ வசதியை ஏற்படுத்த வேண்டும் என்று ரயில் பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    கடலூர் மாவட்டம் செம்மங்குப்பத்தில் உள்ள ரயில்வே கேட்டை கடக்க முயன்ற பள்ளி வாகனம் மீது விழுப்புரம் – மயிலாடுதுறை பாசஞ்சர் ரயில் மோதியதில் 3 மாணவர்கள் உயிரிழந்தனர். இந்த விபத்துக்கு கேட் கீப்பரின் அலட்சியம் முக்கிய காரணமாக கூறப்பட்டாலும், இந்த கேட்டில் இன்டர்லாக்கிங் வசதி இல்லாதது மற்றொரு முக்கிய காரணமாக கூறப்படுகிறது. இது அதிக போக்குவரத்து இல்லாத ‘சி’ பிரிவு கேட் ஆகும். ஒருவேளை, இங்கு இன்டர்லாக்கிங் வசதி இருந்திருந்தால், ரயில் ஓட்டுநருக்கு சிக்னல் கிடைத்து ரயிலை நிறுத்தியிருக்கக்கூடும் என்று முன்னாள் ரயில்வே அதிகாரி ஒருவர் தெரிவிக்கிறார்.

    பெரும்பாலான ரயில் விபத்துகளுக்கு ஆளில்லாத லெவல் கிராசிங் முக்கிய காரணமாக இருந்ததால், ஆளில்லாத லெவல் கிராசிங்குகள் முற்றிலும் நீக்கப்பட்டதாக கடந்த 2019-ல் அப்போதைய ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயல் மக்களைவையில் தெரிவித்தார். கடந்த ஜனவரி வரை கேட் கீப்பருடன் கூடிய 497 லெவல் கிராசிங்குகள் நீக்கப்பட்டுள்ளதாக ரயில்வே அமைச்சகம் தெரிவித்துள்ளது. அதன்படி, தற்போதைய நிலவரப்படி நாடு முழுவதும் கேட் கீப்பருடன் கூடிய 16,586 லெவல் கிராசிங்குகள் உள்ளன.

    இந்த நிலையில், தெற்கு ரயில்வேயில் 276 லெவல் கிராசிங்குகளில் இன்டர்லாக்கிங் வசதி இல்லை என்பது தெரியவந்துள்ளது. இதுகுறித்து ரயில்வே அதிகாரிகள் கூறியதாவது:

    தெற்கு ரயில்வேயில் ஆளில்லாத ரயில்வே கேட்கள் இல்லை. கடந்த 2019 செப்டம்பரில் அவை முழுவதுமாக நீக்கப்பட்டன. தெற்கு ரயில்வேயில் மொத்தம் 1,643 லெவல் கிராசிங் கேட்கள் உள்ளன. அதில் 1,367 கேட்களில் இன்டர்லாக்கிங் வசதி உள்ளன. எஞ்சிய 276 லெவல் கிராசிங் கேட் களில் இன்டர்லாக்கிங் வசதி ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சென்னை கோட்டத்தில் உள்ள 153 லெவல் கிராசிங் கேட்களும் இன்டர்லாக்கிங் வசதி செய்யப்பட்டு விட்டன. இவ்வாறு அவர்கள் கூறினர்.

    கடலூர் செம்மங்குப்பத்தில் நிகழ்ந்தது போல, மீண்டும் ஒரு அசம்பாவிதம் நடைபெறாமல் தடுக்க, எஞ்சிய அனைத்து லெவல் கிராசிங்கிலும் இன்டர் லாக்கிங் வசதியை ஏற்படுத்த வேண்டும் என்பதே பொதுமக்கள், பயணிகளின் கோரிக்கையாக உள்ளது.

    ‘இன்டர்லாக்கிங்’ என்பது என்ன? – ‘இன்டர்லாக்கிங்’ என்பது ரயில்வே கேட் மற்றும் சிக்னல்களை ஒருங்கிணைக்கும் சிக்னல் கட்டுப்பாட்டு முறை. முறையாக ரயில்வே கேட் மூடப்பட்டிருந்தால் மட்டுமே, அந்த ரயில்வே கேட்டுக்கான பிரத்யேக சிக்னலில் பச்சை விளக்கு ஒளிரும். ரயில்வே கேட் முழுமையாக மூடப்படாவிட்டால், சிக்னலில் சிவப்பு விளக்கு ஒளிரும். திறந்திருக்கும் ரயில்வே கேட்டை ரயில்கள் கடந்து செல்ல அனுமதி கிடைக்காது. ரயில்வே கேட் மூடப்பட்டால் மட்டுமே ரயில் அதை கடந்து செல்ல முடியும்.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    மாநிலம்

    சட்டவிரோத பணப்பரிவர்த்தனை புகார்: நடிகை அருணா வீட்டில் அமலாக்கத் துறை அதிகாரிகள் சோதனை

    July 10, 2025
    மாநிலம்

    புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து கோரி சுயேச்சை எம்எல்ஏ நேரு ராஜினாமா!

    July 10, 2025
    மாநிலம்

    ரூ.500-க்கு புதிய செட்-ஆப் பாக்ஸ் பொருத்த நிர்பந்தம்: அரசு கேபிள் டிவி ஆபரேட்டர்கள் குற்றச்சாட்டு

    July 10, 2025
    மாநிலம்

    “காவல் மரணங்களை மூடி மறைக்க பேரம் பேசும் திமுகவினர்” – திருப்புவனத்தில் சீமான் காட்டம்

    July 10, 2025
    மாநிலம்

    வெப்பநிலை இன்று 7 டிகிரி உயர வாய்ப்பு!

    July 10, 2025
    மாநிலம்

    வாகனம், கணினி வாங்குவதற்கு ஆசிரியர்களுக்கு கடனுதவி: பள்ளிக் கல்வித் துறை உத்தரவு

    July 10, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • சட்டவிரோத பணப்பரிவர்த்தனை புகார்: நடிகை அருணா வீட்டில் அமலாக்கத் துறை அதிகாரிகள் சோதனை
    • எலும்புகள், தசைகள் மற்றும் இரத்த நாளங்களை பாதிக்கும் சர்கோமா புற்றுநோயின் ஆரம்ப அறிகுறிகள்
    • நமீபியா கலைஞர்களுடன் இசைக்கருவியை வாசித்து மகிழ்ந்த பிரதமர் நரேந்திர மோடி
    • புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து கோரி சுயேச்சை எம்எல்ஏ நேரு ராஜினாமா!
    • ரூ.500-க்கு புதிய செட்-ஆப் பாக்ஸ் பொருத்த நிர்பந்தம்: அரசு கேபிள் டிவி ஆபரேட்டர்கள் குற்றச்சாட்டு

    Recent Comments

    No comments to show.

    Archives

    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.