Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Thursday, September 11
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»மாநிலம்»தூய்மை பணியாளர்களின் அறச்சீற்றம் தேர்தலில் எதிரொலிக்கும்: தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்கம்
    மாநிலம்

    தூய்மை பணியாளர்களின் அறச்சீற்றம் தேர்தலில் எதிரொலிக்கும்: தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்கம்

    adminBy adminAugust 14, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    தூய்மை பணியாளர்களின் அறச்சீற்றம் தேர்தலில் எதிரொலிக்கும்: தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்கம்
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    மதுரை: “திமுக அரசால் கைதாகி பாதிக்கப்பட்டுள்ள தூய்மைப் பணியாளர்களின் அறச்சீற்றம், சட்டமன்றத் தேர்தலில் எதிரொலிக்கும். குண்டுக்கட்டாக தூக்கி கைது செய்துள்ள ஆட்சியாளர்களின் செயல் வன்மையான கண்டனத்துக்கு உரியது” என தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்கத்தின் மாநிலத் தலைவர் எஸ்.ரமேஷ் மற்றும் மாநில பொதுச் செயலாளர் இரா.பாலசுப்ரமணியன் ஆகியோர் தெரிவித்தனர்.

    இது குறித்து அவர்கள் கூட்டாக வெளியிட்ட அறிக்கையில், ”அகிம்சை வழியில் ஜனநாயக முறைப்படி, அரசியல் அமைப்புச் சட்டம் மக்களுக்கு அளித்திருக்கும் உரிமைகளின் அடிப்படையில் போராட்டம் நடத்தி வந்த தூய்மைப் பணியாளர்களை நீதிமன்ற உத்தரவு என்ற பெயரில் இரவோடு, இரவாக குண்டுக்கட்டாக தூக்கியெறிந்து, வலுக்கட்டாயமாக இழுத்துச் சென்று கைது செய்துள்ள ஆட்சியாளர்களின் செயல் வன்மையான கண்டனத்துக்குரியது.

    “அல்லற்பட்டு ஆற்றாது அழுத கண்ணீரன்றே, செல்வத்தைத் தேய்க்கும் படை”- (குறள் 555) என்ற குறளில், ஆட்சியாளர்களின் கொடுமை பொறுக்க முடியாமல் மக்கள் சிந்தும் கண்ணீர் ஆட்சியை அழிக்கும் படைக் கருவியாக மாறும் என்பதற்கேற்ப, பாதிக்கப்பட்டு நிற்கும் தூய்மைப் பணியாளர்களின் அறச்சீற்றம் 2026 சட்டமன்றத் தேர்தலில் எதிரொலிக்கும்.

    உங்களுடன் ஸ்டாலின், நலன் காக்கும் ஸ்டாலின், தாயுமானவன் என தலைப்புகளில் இருக்கும் நயமும், நளினமும் ஆளும் திமுக அரசின் நடவடிக்கையில் இல்லை என்பதை நினைக்கும்போது மனம் வேதனையுறுகிறது. தூய்மைப் பணியாளர்களுக்கு ஆதரவாக மாணவர்கள் களம் காணத் துவங்கியுள்ளனர். அடுத்தடுத்து தொழிலாளர் வர்க்கமும், பாட்டாளி வர்க்கமும் போராட்டக் களம் காணத் தயாராக உள்ளனர்.

    மத்திய அரசின் வேளாண்மைத் திருத்தச் சட்டத்திற்கு எதிராக ஓராண்டாக விவசாயிகள் போராடும்போது கூட மத்திய அரசு இதுபோன்ற வழக்குகளைத் தொடுத்து விவசாயிகளை ஒடுக்க முற்படவில்லை. ஆனால், தமிழகத்தில் அதிமுக, திமுக அரசு போராட்டங்கள் பெரிய அளவில் முன்னெடுக்கும் போதெல்லாம் தேன்மொழி, கனிமொழி, ரமேஷ் என சமூக செயல்பாட்டாளர் என்ற பெயரில் யாராவது ஒருவரை வைத்து பொது நல வழக்கென்ற போர்வையில் போராட்டங்களை ஒடுக்க ஆட்சியாளர்களே வழக்கு தொடுத்து, போராட்டங்களை நீர்த்துப் போகச் செய்யும் முயற்சியை மேற்கொள்வதை மக்கள் அறிந்துள்ளனர்.

    நேர்மையான வழியில் தங்களின் உரிமைக்காகப் போராடும் மக்களை, மாக்களாக நடத்த நினைக்கும் ஆட்சியர்களுக்கு பாதிக்கப்பட்டு நிற்கும் தூய்மைப் பணியாளர்களின் அறச்சீற்றம் ஆட்சிக்கு எதிரான மக்கள் மனோநிலையின் துவக்கப் புள்ளி, எச்சரிக்கை மணி என்பதை ஆட்சியாளர் கள் சற்றே கவனத்தில் கொண்டு செயல்பட்டால் நல்லது” என்று அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    மாநிலம்

    அதிமுக – பாஜக கூட்டணியில் பிளவு இல்லை: நயினார் நாகேந்திரன்

    September 11, 2025
    மாநிலம்

    பாமகவில் இருந்து அன்புமணி நீக்கம்: ராமதாஸ் அதிரடி நடவடிக்கை

    September 11, 2025
    மாநிலம்

    சட்டவிரோத பண பரிமாற்றம் தொடர்பாக சென்னையில் 5 இடங்களில் அமலாக்கத் துறை சோதனை

    September 11, 2025
    மாநிலம்

    திமுக ஆட்சிக்கு வந்து 4 ஆண்டுகள் ஆகியும் எங்களது கோரிக்கைகள் நிறைவேற்றப்படவில்லை: ஓய்வுபெற்ற சத்துணவு, அங்கன்வாடி ஊழியர்கள் குற்றச்சாட்டு

    September 11, 2025
    மாநிலம்

    அம்ரித் பாரத் நிலையம் திட்டம்: செங்கல்பட்டு ரயில் நிலைய மேம்பாட்டுப் பணியை பிப்ரவரிக்குள் முடிக்க திட்டம்

    September 11, 2025
    மாநிலம்

    பைக்கில் செல்பவர்கள் கீழே விழுந்து படுகாயம் அடைகின்றனர்: புழுதிவாக்கத்தில் மோசமான சாலையால் மக்கள் அவதி

    September 11, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • பயணம் முடிவடையவில்லை; இது ஒரு தொடக்கமே: விஷால் உருக்கம்
    • அதிமுக – பாஜக கூட்டணியில் பிளவு இல்லை: நயினார் நாகேந்திரன்
    • கேரளாவில் உள்ள முன்னார் அதை ‘ஆசியாவின் சிறந்த 8 கிராமப்புற தப்பிக்கும்’ பட்டியல்: 5 இந்த அழகிய மலை நிலையத்தில் கட்டாயம் பார்க்க வேண்டிய இடங்கள் | – தி டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • இண்டியா கூட்டணி எம்.பி.க்களுக்கு மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜூ நன்றி
    • சூரியகுமார் யாதவின் ‘பெருந்தன்மை’ பாகிஸ்தான் வீரருக்கு எதிராக வருமா – கிளம்பிய புதிய சர்ச்சை

    Recent Comments

    No comments to show.

    Archives

    • September 2025
    • August 2025
    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.