Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Friday, July 18
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»மாநிலம்»தூய்மை தரவரிசைப் பட்டியல் வெளியீடு: மாநில அளவில் கோவை மாநகராட்சி முதலிடம்
    மாநிலம்

    தூய்மை தரவரிசைப் பட்டியல் வெளியீடு: மாநில அளவில் கோவை மாநகராட்சி முதலிடம்

    adminBy adminJuly 18, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    தூய்மை தரவரிசைப் பட்டியல் வெளியீடு: மாநில அளவில் கோவை மாநகராட்சி முதலிடம்
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    கோவை: ‘சுவெச் சர்வெக்‌ஷான்’ தரவரிசைப் பட்டியல் மத்திய அரசால் வெளியிடப்பட்டது. இதில், தேசிய அளவில் 28-வது இடத்தையும், மாநில அளவில் முதலிடத்தையும் கோவை மாநகராட்சி பிடித்துள்ளது.

    மத்திய அரசின் வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சகத்தின் சார்பில், கடந்த 2014-ம் ஆண்டு ‘தூய்மை பாரதம்’ திட்டம் தொடங்கப்பட்டது. இத்திட்டத்தின் மூலம் ஒவ்வொரு ஆண்டும் உள்ளாட்சிப் பகுதிகளில் தூய்மைப் பணிகள், திடக்கழிவு மேலாண்மைப் பணிகள் குறித்த கணக்கெடுப்பு நடத்தப்பட்டு, அது தொடர்பான தரவரிசைப் பட்டியல் வெளியிடப்பட்டு வருகிறது.

    அதன்படி, மத்திய அரசின் சார்பில் ‘சுவெச் சர்வெக்‌ஷான்’ 2024-25-ம் ஆண்டுக்கான தூய்மை கணக்கெடுப்புப் பணிகள் குறித்த சர்வே நாடு முழுவதும் எடுக்கப்பட்டது. தொடர்ந்து அதன் முடிவுகள் இன்று (ஜூலை 17) வெளியிடப்பட்டன. சுவெச் சர்வெக்‌ஷான் 2024-25 தேசிய தூய்மை தரவரிசைப் பட்டியலில் 10 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் தொகையுள்ள நகரங்களுக்கான பிரிவில், கோவை மாநகராட்சி தேசிய அளவில் 28-வது இடத்தையும், தமிழக அளவில் முதலிடமும் பிடித்துள்ளது. மொத்தம் உள்ள 12,500 மதிப்பெண் புள்ளிகளில் கோவை மாநகராட்சி 8,347 புள்ளிகள் பெற்றுள்ளது.

    அதைத் தொடர்ந்து 6,822 புள்ளிகள் பெற்று சென்னை தேசிய அளவில் 38-வது இடத்தையும், தமிழகத்தில் 2-வது இடத்தையும் பிடித்துள்ளது. மதுரை மாநகராட்சி 4,823 புள்ளிகள் பெற்று தேசிய அளவில் 40-வது இடத்தையும், மாநில அளவில் 3-வது இடத்தையும் பிடித்து உள்ளது. தூய்மை நகரங்கள் பட்டியலில் மாநில அளவில் கோவை மாநகராட்சி முதலிடம் பெற்றிருப்பது இது 2-வது முறையாகும். கடந்த 2020-ம் ஆண்டு மாநில அளவில் முதலிடம் பிடித்தது குறிப்பிடத்தக்கது.

    இதுகுறித்து கோவை மாநகராட்சி ஆணையாளர் சிவகுரு பிரபாகரன் கூறும்போது, “கடந்தாண்டை விட நடப்பாண்டு தேசிய அளவில் கோவை மாநகராட்சி நல்ல நிலையை பெறுவதற்கு வீடு வீடாகச் சென்று குப்பை சேகரித்தல், தரம் பிரித்து குப்பை சேகரித்தல், பொது இடங்களில் குப்பை கொட்டாமல் இருத்தல், குடியிருப்புப் பகுதிகளின் தூய்மைத் தன்மை, மார்க்கெட் பகுதிகளில் தூய்மைத் தன்மை, மாநகராட்சிக்குட்பட்ட குளங்களின் தூய்மைத் தன்மை, பொதுமக்களிடம் தரம் பிரித்து குப்பை ஒப்படைப்பு குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்துதல் போன்ற பல தர நிலைகளின் அடிப்படையில் மதிப்பீடு செய்யப்பட்டு தரம் வழங்கப்பட்டுள்ளது” என்றார்.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    மாநிலம்

    தமிழக எம்.பி, எம்எல்ஏ-க்கள் மீதான ஊழல் வழக்கு: தவெக மனு மீது 12 வாரங்களில் முடிவெடுக்க உத்தரவு

    July 18, 2025
    மாநிலம்

    பாடத்திட்டங்களில் சிறுபான்மையினருக்கு எதிரான வெறுப்பை வளர்ப்பதா? – முத்தரசன் கண்டனம்

    July 18, 2025
    மாநிலம்

    முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணிக்கு எதிரான தேர்தல் வழக்கை ரத்து செய்ய ஐகோர்ட் மறுப்பு

    July 18, 2025
    மாநிலம்

    கொடைக்கானலில் திடீர் வெள்ளம்: அருவி நீரில் அடித்து செல்லப்பட்ட இளைஞர் உயிரிழப்பு

    July 18, 2025
    மாநிலம்

    மணப்பாட்டில் சிறு துறைமுகம் அமைக்க எதிர்ப்பு: போராட்டத்துக்கு தயாராகும் மீனவர்கள்!

    July 18, 2025
    மாநிலம்

    ‘தமிழ்நாடு நாள் – தமிழ்கூறு நல்லுலகின் வரலாற்றில் தனிப்பெரும் நாள்’ – முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்

    July 18, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • நாட்டின் தூய்மையான நகரங்கள் பட்டியல்: 8-வது முறையாக இந்தூர் முதலிடம்
    • தமிழக எம்.பி, எம்எல்ஏ-க்கள் மீதான ஊழல் வழக்கு: தவெக மனு மீது 12 வாரங்களில் முடிவெடுக்க உத்தரவு
    • ஹால்டி விழாவிற்கு திருமண உட்டானை எப்படி செய்வது
    • இதய ஸ்கேன்களுக்கு இரத்த மாதிரிகள்: மனித ஆராய்ச்சி மூலம் விண்வெளி வீரர் ஆரோக்கியத்தை நாசா எவ்வாறு கண்காணிக்கிறது | – தி டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • பிஹாரில் மின்னல் தாக்குதலால் கடந்த இரண்டு நாட்களில் 33 பேர் பலி

    Recent Comments

    No comments to show.

    Archives

    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.