Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Tuesday, August 12
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»மாநிலம்»தூய்மைப் பணியை தனியாருக்கு தருவதை எதிர்த்து வழக்கு: மாநகராட்சி நிர்வாகம், தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு
    மாநிலம்

    தூய்மைப் பணியை தனியாருக்கு தருவதை எதிர்த்து வழக்கு: மாநகராட்சி நிர்வாகம், தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு

    adminBy adminAugust 12, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    தூய்மைப் பணியை தனியாருக்கு தருவதை எதிர்த்து வழக்கு: மாநகராட்சி நிர்வாகம், தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    சென்னை: சென்னை மாநக​ராட்​சி​யில், தூய்மை பணி​களை தனி​யாருக்கு வழங்​கு​வதை எதிர்த்து தொடரப்​பட்ட வழக்​கில், மாநக​ராட்சி நிர்​வாக​மும். தமிழக அரசும் இன்று பதிலளிக்க உயர் நீதி​மன்​றம் உத்​தர​வி்ட்​டுள்​ளது.

    சென்னை மாநக​ராட்​சி​யின், 5-வது மற்​றும் 6-வது மண்​டலங்​களில் தூய்​மைப் பணிக்​கான ரூ. 276 கோடிக்​கான ஒப்​பந்​தத்தை தனியாருக்கு வழங்​கியதை எதிர்த்​து, தூய்​மைப் பணி​யாளர்​கள் மாநக​ராட்சி அலு​வல​கம் முன்​பாக கடந்த 10 நாட்​களுக்​கும் மேலாக தொடர் போராட்​டத்​தில் ஈடு​பட்டு வரு​கின்​றனர்.

    இந்​நிலை​யில், மாநக​ராட்சி தூய்​மைப் பணி​களை தனி​யாருக்கு வழங்​கும் தீர்​மானத்தை ரத்து செய்​து, தூய்மை பணியாளர்களின் வாழ்​வா​தா​ரத்தை பாது​காக்​கக்​கோரி, உழைப்​போர் உரிமை இயக்​கம் சார்​பில், அதன் தலை​வ​ரான வழக்கறிஞர் கு.​பார​தி, சென்னை உயர் நீதி​மன்​றத்​தில் வழக்கு தொடர்ந்​திருந்​தார்.

    அதில், மாநக​ராட்சி நிர்​வாகத்​தின் இந்த நடவடிக்​கை​யால் இந்த இரு மண்​டலங்​களி​லும் 2 ஆயிரத்​துக்​கும் மேற்​பட்ட நிரந்தர துப்​புரவு பணி​யாளர்​கள், வேறு மண்டலங்களுக்கு மாற்​றப்​படு​வர். சுமார் 2 ஆயிரம் தற்​காலிக பணி​யாளர்​கள் வேலை​யிழக்​கும் அபா​யம் ஏற்​பட்​டுள்​ளது.

    இப்​பிரச்​சினை தொடர்​பாக ஏற்​க​னவே தொழிலா​ளர் நீதி​மன்​றத்​தில் வழக்கு நிலு​வை​யில் உள்​ளது. ஆனால், அதை மீறி தற்​போது தனி​யாருக்கு இந்த ஒப்​பந்​தம் வழங்​கப்​பட்​டுள்​ளது. எனவே மாநக​ராட்​சி​யின் தீர்​மானத்தை ரத்து செய்ய வேண்​டும் என கோரி​யிருந்​தார். இந்த வழக்கு நீதிபதி கே. சுரேந்​தர் முன்​பாக நேற்று விசா​ரணைக்குவந்​தது. அப்​போது அரசு தலைமை வழக்​கறிஞர் பி.எஸ்​.​ராமன் ஆஜராகி, ‘இந்த வழக்​கில் பதில்​மனு தாக்​கல் செய்ய அவகாசம் அளிக்க வேண்​டும்’ என்​றார்.

    அப்​போது மனு​தா​ரர் தரப்​பில், “சுமார் 2 ஆயிரம் பணியாளர்கள் மாநக​ராட்சி அலு​வல​கத்​தின் முன்பாக இரவும், பகலு​மாக கொட்​டும் மழை​யிலும் 10 நாட்​களுக்​கும் மேலாக போராடி வரு​கின்​றனர்.

    குப்​பையை அள்ளி சுத்​தம் செய்த அவர்​களை மாநக​ராட்சி நிர்​வாகம் குப்​பையைப் போல வீசி எறி்ந்​துள்​ளது. அவர்​களின் பணி​பாது​காப்​புக்கு உத்​தர​வாதம் அளிக்க வேண்​டும்” என, வாதிடப்​பட்​டது. இதையடுத்து நீதிப​தி, இந்த வழக்​கில் அரசு தரப்​பில் பதில் மனு தாக்​கல் செய்ய உத்​தரவி்ட்​டு, விசாரணையை இன்​றைக்கு (12-ம் தேதி) தள்ளி வைத்​தார்.

    வழக்​கறிஞர் முறை​யீடு…! – இதற்கிடையே, தலைமை நீதிபதி எம்​.எம்​.வஸ்​த​வா, நீதிபதி சுந்​தர் மோகன் ஆகியோர் அடங்​கிய அமர்​வில், வழக்​கறிஞர் வினோத் என்​பவர் ஆஜராகி, மாநக​ராட்சி துப்​புரவு தொழிலா​ளர்​கள் முன்​அறி​விப்பு இல்​லாமல் திடீர் போராட்​டத்​தில் ஈடு​பட்​டுள்​ளனர். இதனால், குப்​பைகள் அள்​ளப் ​ப​டா​மல் பொது​மக்​கள் பாதிப்​புக்​குள்​ளாகி வரு​கின்​றனர். எனவே, இந்த போராட்​டம் சட்​ட​விரோதம் என அறிவிக்க வேண்​டும் என, முறை​யீடு செய்​தார். இதையடுத்​து, நீதிப​தி​கள் இதுதொடர்​பாக மனு​தாக்​கல் செய்​தால் இன்று விசா​ரிக்​கப்​படும் என, தெரி​வித்​துள்​ளனர்​.

    கட்சித் தலைவர்கள் ஆதரவு: பணி நிரந்​தரம் கோரி 11-வது நாளாக ரிப்​பன் மாளிகை முன்பு தூய்​மைப் பணி​யாளர்​கள் தொடர் போராட்​டம் நடத்தி வரு​கின்​றனர். அவர்​களை தமிழ்​நாடு காங்​கிரஸ் தலை​வர் செல்​வப்​பெருந்​தகை, தேமு​திக பொதுச்​செயலாளர் பிரேமல​தா, நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்​கிணைப்​பாளர் சீமான் உள்​ளிட்​டோர் நேற்று நேரில் சந்​தித்து ஆதரவு தெரிவித்தனர். தவெக தலை​வர் விஜய் போராட்​டத்​தில் ஈடு​பட்​டு​வரும் தூய்​மைப் பணி​யாளர்​களை பனையூரில் உள்ள கட்சி அலு​வல​கத்​துக்கு வரவழைத்​து, அவர்​களது கோரிக்​கைகளை கேட்​டறிந்து அவர்​களுக்​கான தனது ஆதர​வை​யும் தெரிவித்​தார்.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    மாநிலம்

    குன்றத்தூர் அபிராமி மேல்முறையீடு: காவல்துறை பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு

    August 12, 2025
    மாநிலம்

    ஓட்டுநர் உரிமத்தை மீண்டும் வழங்க கோரி டிடிஎஃப் வாசன் தாக்கல் செய்த மனு தள்ளுபடி

    August 12, 2025
    மாநிலம்

    முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்த ‘தாயுமானவர்’ திட்டம் – சிறப்பு அம்சங்கள் என்னென்ன?

    August 12, 2025
    மாநிலம்

    ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதான நாகேந்திரனுக்கு மருத்துவ பரிசோதனை மேற்கொள்ள ஐகோர்ட் உத்தரவு

    August 12, 2025
    மாநிலம்

    முருகன் வரலாறா அல்லது மு.க.ஸ்டாலின் வரலாறா? – அன்புமணி சாடல்

    August 12, 2025
    மாநிலம்

    எய்ட்ஸ் தொற்றுள்ளவர்களின் குழந்தைகளுக்கு கல்வி உதவித் தொகை: புதுவை முதல்வர் அறிவிப்பு

    August 12, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • ஷோலே 50 ஆண்டுகள் | இதெல்லாம் ஒரு படமா?
    • குன்றத்தூர் அபிராமி மேல்முறையீடு: காவல்துறை பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு
    • 5 பெண்களை வலிமையாக்கும் அன்றாட பழக்கவழக்கங்கள் (மேலும் வயதானதை மெதுவாக்கும்)
    • இந்திய-ஆரிஜின் டாக்டர் வினய் பிரசாத் வெளியேறிய சில வாரங்களுக்குப் பிறகு எஃப்.டி.ஏ-க்கு திரும்புகிறார்; லாரா லூமர் இதை ‘மிகச்சிறந்த முடிவு’ என்று அழைக்கிறார் – டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • ‘ஒருவருக்கு ஒரு வாக்கு’ என்பதை உறுதிப்படுத்த தேர்தல் ஆணையம் தவறிவிட்டது: ராகுல் காந்தி

    Recent Comments

    No comments to show.

    Archives

    • August 2025
    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.