Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Thursday, August 14
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»மாநிலம்»தூய்மைப் பணியாளர்கள் வழக்கில் நடந்த வாதமும், உயர் நீதிமன்ற உத்தரவும் – ஒரு பார்வை
    மாநிலம்

    தூய்மைப் பணியாளர்கள் வழக்கில் நடந்த வாதமும், உயர் நீதிமன்ற உத்தரவும் – ஒரு பார்வை

    adminBy adminAugust 14, 2025No Comments3 Mins Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    தூய்மைப் பணியாளர்கள் வழக்கில் நடந்த வாதமும், உயர் நீதிமன்ற உத்தரவும் – ஒரு பார்வை
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    சென்னை: ​போ​ராட்​டம் என்ற பெயரில் நடை​பாதை, சாலையை மறித்து போராடு​வதை ஒரு​போதும் அனு​ம​திக்க முடி​யாது என தெரி​வித்​துள்ள உயர் நீதி​மன்ற தலைமை நீதிபதி அமர்​வு, ரிப்​பன் மாளிகை முன்​பாக போராட்​டம் நடத்தி வரும் தூய்​மைப் பணியாளர்​களை உடனடி​யாக அங்​கிருந்து அப்​புறப்​படுத்த போலீ​ஸாருக்கு உத்​தர​விட்​டுள்​ளது.

    சென்னை மாநக​ராட்​சி​யின் 5, 6-வது மண்​டலங்​களில் தூய்​மைப் பணிக்​காக ரூ.276 கோடிக்​கான ஒப்​பந்​தத்தை தனி​யாரிடம் ஒப்​படைப்​பதை எதிர்த்து தூய்​மைப் பணி​யாளர்​கள் மாநக​ராட்சி அலு​வல​கம் முன்​பாக கடந்த 13 நாட்​களுக்​கும் மேலாக தொடர் போராட்​டத்​தில் ஈடு​பட்டு வந்​தனர்.

    சென்னை மாநக​ராட்சி ரிப்​பன் மாளிகை முன்​பாக சட்​ட​விரோத​மாக நடை​பாதை மற்​றும் சாலையைமறித்து பொது​மக்​களுக்கு இடையூறு ஏற்​படுத்தி வரும் தூய்​மைப் பணி​யாளர்​களை அங்​கிருந்து அப்​புறப்​படுத்த கோரி தேன்​மொழி என்​பவர் உயர் நீதி​மன்​றத்​தில் பொதுநல வழக்கு தொடர்ந்​தார். தலைமை நீதிபதி எம்​.எம்​.ஸ்ரீவஸ்​த​வா, நீதிபதி சுந்​தர்​மோகன் அமர்​வில் இந்த வழக்கு நேற்று விசா​ரணைக்கு வந்​தது.

    அப்​போது நடந்த வாதம்: மனு​தா​ரர் தரப்​பில் மூத்த வழக்​கறிஞர் வி.​ராக​வாச்​சா​ரி: தூய்​மைப் பணி​யாளர்​கள் கடந்த 13 நாட்​களாக நடத்தி வரும் போராட்​டத்​தால் தேவையற்ற பிரச்​சினை​கள் ஏற்​பட்டு வரு​கின்​றன.

    அரசு தரப்​பில் ஆஜரான கூடு​தல் தலைமை வழக்​கறிஞர் ஜெ.ர​வீந்​திரன்: சட்​ட​விரோத போராட்​டத்தை கைவிட்டு நடை​பாதையை காலி செய்ய வேண்​டும் என போலீ​ஸார் தரப்​பில் கடந்த ஆக.7 அன்று நோட்​டீஸ் பிறப்​பிக்​கப்​பட்​டுள்​ளது.

    தூய்​மைப் பணி​யாளர்​கள் தரப்​பில் வழக்​கறிஞர் ஆர்​.சங்​கரசுப்​பு: மாநக​ராட்சி அலு​வல​கத்​தில் பணி​யாற்றி வந்த துப்​புரவு தொழிலா​ளர்​கள் தங்​களது கோரிக்​கையை வலி​யுறுத்தி மாநக​ராட்சி அலு​வல​கம் முன்​பாகத்​தான் போராட்​டம் நடத்த முடி​யும். இதை சட்​ட​விரோதம் என்று கூற முடி​யாது.

    இந்த பிரச்​சினை தொடர்​பாக அமைச்​சர்​கள் பேச்​சு​வார்த்தை நடத்தி வரும் நிலை​யில் அவர்​களை அங்​கிருந்து அப்​புறப்​படுத்​தக்​ கூடாது என்றார். அனைத்து தரப்பு வாதங்​களை​யும் கேட்ட நீதிப​தி​கள் தமது உத்​தர​வில் கூறிய​தாவது: தூய்​மைப் பணி​யாளர்​கள் தங்​களது கோரிக்​கைகளுக்​காக போராட்​டம் நடத்த உரிமை உண்டு என்​றாலும், போராட்​டம் என்ற பெயரில் நடை​பாதை, சாலைகளை மறித்து பொது​மக்​களுக்கு இடையூறாக போராடு​வதை ஒரு​போதும் அனு​ம​திக்க முடி​யாது.

    எனவே, உரிய அனு​ம​தி​யின்றி நடை​பாதை​யில் போராட்​டம் நடத்தி வரும் அவர்​களை போலீ​ஸார் உடனடி​யாக அப்​புறப்​படுத்த வேண்​டும். அதே​நேரம் முறைப்​படி போராட்​டம் நடத்த அனு​மதி கோரி​னால் அதற்கு சட்​டப்​படி பரிசீலித்து போலீ​ஸார் அனு​மதி வழங்க வேண்​டும். இவ்​வாறு உத்​தர​விட்டு வழக்கை நீதிப​தி​கள் முடித்து வைத்​துள்​ளனர்.

    வாழ்​வா​தா​ரம் பாது​காக்க கோரி.. இந்த நிலை​யில், தூய்​மைப் பணி​களை தனி​யாருக்கு வழங்​கும் தீர்​மானத்தை ரத்து செய்​து, தூய்​மைப் பணி​யாளர்​களின் வாழ்​வா​தா​ரத்தை பாது​காக்க கோரி உழைப்​போர் உரிமை இயக்​கம் சார்​பில் அதன் தலை​வ​ரான வழக்​கறிஞர் கு.​பாரதி சென்னை உயர் நீதி​மன்​றத்​தில் வழக்கு தொடர்ந்​தார்.

    நீதிபதி கே.சுரேந்​தர் முன்பு இந்த வழக்கு நேற்று மீண்​டும் விசா​ரணைக்கு வந்​தது. அப்​போது, நடந்த வாதம்:

    மனு​தா​ரர் தரப்பு வழக்​கறிஞர் எஸ்​.கு​மாரசு​வாமி: சென்னை மாநக​ராட்​சி​யில் தூய்​மைப் பணி​களை தனி​யாரிடம் ஒப்​படைப்​பதை எதிர்த்​தும், இது​வரை பணி​யாற்றி வந்த தூய்​மைப் பணி​யாளர்​களை பணி நீக்​கம் செய்​வதை எதிர்த்​தும் சென்னை தொழிலா​ளர் நல தீர்ப்​பா​யத்​தில் வழக்கு தொடரப்​பட்டு நிலு​வை​யில் உள்​ளது. இந்த சூழலில் மாநக​ராட்சி தூய்​மைப் பணி​களை தனி​யாரிடம் ஒப்​படைத்து சென்னை மாநக​ராட்சி நிர்​வாகம் கடந்த ஜூன் மாதம் தீர்​மானம் நிறைவேற்​றி​யுள்​ளது.

    மாநக​ராட்சி நிர்​வாகத்​தின் இந்த நடவடிக்​கை​யால் தற்​போது 2 ஆயிரத்​துக்​கும் மேற்​பட்ட தொழிலா​ளர்​கள் வேலை இழக்​கும் அபா​யம் ஏற்​பட்​டுள்​ளது. இந்த பணி​களை தனி​யாரிடம் ஒப்​படைத்​தால் தற்​போது ரூ.750 ஊதி​யம் பெறும் ஊழியர்​களுக்கு ரூ.500 மட்​டும்​தான் கிடைக்​கும். பாதி பேருக்கு வேலை கிடைக்​காது. அதனால்​தான் தொழிலா​ளர்​கள் போராட்​டம் நடத்தி வரு​கின்​றனர்.

    மாநக​ராட்சி நிர்​வாகம் தரப்​பில் அரசு தலைமை வழக்​கறிஞர் பி.எஸ்​.​ராமன்: தூய்மைப் பணி​யாளர்​கள் யாரும் வேலையை விட்டு வெளி​யேற்​றப்பட மாட்​டார்​கள். அவர்​களுக்கு ஒப்​பந்​த​தா​ரர் மூல​மாக பணி வழங்​கப்​படும். சென்னை மாநக​ராட்​சி​யில் மொத்​தம் உள்ள 15 மண்​டலங்​களில் 11 மண்​டலங்​களில் தூய்​மைப் பணி ஏற்​கெனவே தனி​யாருக்கு ஒப்​படைக்​கப்​பட்டு பணி​கள் நடந்து வரு​கின்​றன.

    தற்​போது 5, 6-வது மண்​டலங்​களின் தூய்​மைப் பணி தனி​யாரிடம் ஒப்​படைக்​கப்​பட்​டுள்​ளது. ஒப்​பந்த அடிப்​படை​யில் பணி​யாற்​றும் 2 ஆயிரம் தூய்​மைப் பணி​யாளர்​களுக்​கும் ஒப்​பந்த நிறு​வனம் ஊதி​யத்​துடன், வருங்​கால வைப்பு நிதி, இன்​சூரன்ஸ் உள்​ளிட்ட சலுகைகளு​டன் பணிப் பாது​காப்பு வழங்​கப்​படும்.

    தனி​யார் ஒப்​பந்த நிறு​வனம் தரப்​பில் ஆஜரான மூத்த வழக்​கறிஞர் விஜய் நாராயண்: தூய்​மைப் பணி​களை தனி​யாருக்கு வழங்​கு​வது என்​பது அரசின் கொள்கை முடிவு. இதில் விதி​மீறல்​கள் இருந்​தால் மட்​டுமே நீதி​மன்​றம் தலை​யிட முடி​யும். மொத்​தம் 1,900 தொழிலா​ளர்​கள் தேவை என்ற நிலை​யில் பணி​யில் சேரு​வதற்​கான தேதி ஆக.31 வரை நீட்​டிக்​கப்​படும். இவ்​வாறு வாதம் நடந்​தது. அனைத்து தரப்பு வாதங்​களை​யும்​ கேட்​ட நீதிப​தி கே.சுரேந்​தர்​ வழக்​கின்​ தீர்ப்​பை தேதி குறிப்​பி​டாமல்​ தள்​ளிவைத்​தார்​.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    மாநிலம்

    தூய்மைப் பணியாளர்கள் என்ன தேச விரோதிகளா? – அரசை சரமாரியாக சாடிய விஜய்

    August 14, 2025
    மாநிலம்

    தாம்பரத்தில் பட்டா கேட்டு மார்க்சிஸ்ட் போராட்டம்: மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் பங்கேற்பு

    August 14, 2025
    மாநிலம்

    செங்கல்பட்டு, காஞ்சிபுரம் உட்பட 7 மாவட்டங்களுக்கு விரிவாக்கம்: 27.63 லட்சம் குழந்தைகளுக்கு மூளைக் காய்ச்சல் தடுப்பூசி

    August 14, 2025
    மாநிலம்

    விளையாட்டு வீரர்களுக்கு ரூ.23.40 லட்சம் நிதியுதவி: துணை முதல்வர் உதயநிதி வழங்கினார்

    August 14, 2025
    மாநிலம்

    சென்னை | மின்சார ரயில் சேவை 3 நாட்களுக்கு மாற்றம்

    August 14, 2025
    மாநிலம்

    விழுப்புரத்தில் தனியார் பள்ளியில் பரிதாபம்: பிளஸ் 1 மாணவர் திடீரென மயங்கி விழுந்து உயிரிழப்பு

    August 14, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • தூய்மைப் பணியாளர்கள் என்ன தேச விரோதிகளா? – அரசை சரமாரியாக சாடிய விஜய்
    • கடந்த 100 ஐ வாழும் மக்களுக்கு பொதுவான ஒன்று உள்ளது, ஆய்வு | – டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • ‘டி ஷர்ட்’டில் எனது படம், பெயரை பயன்படுத்த பிரியங்கா, ராகுலுக்கு அதிகாரம் கொடுத்தது யார்? – வாக்காளர் மின்டா தேவி எதிர்ப்பு
    • சென்னை கிராண்ட் மாஸ்டர்ஸ் செஸ் போட்டி: சாம்பியன் பட்டத்தை நெருங்குகிறார் வின்சென்ட் கீமர்
    • ஆணவக் கொலை பின்னணியில் ‘நெல்லை பாய்ஸ்’

    Recent Comments

    No comments to show.

    Archives

    • August 2025
    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.