Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Friday, September 19
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»மாநிலம்»தூய்மைப் பணியாளர்கள் போராட்டம்: ஒரு நபர் ஆணைய விசாரணைக்கு ஐகோர்ட் உத்தரவு
    மாநிலம்

    தூய்மைப் பணியாளர்கள் போராட்டம்: ஒரு நபர் ஆணைய விசாரணைக்கு ஐகோர்ட் உத்தரவு

    adminBy adminSeptember 19, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    தூய்மைப் பணியாளர்கள் போராட்டம்: ஒரு நபர் ஆணைய விசாரணைக்கு ஐகோர்ட் உத்தரவு
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    சென்னை: தூய்மைப் பணியாளர்கள் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்ததாக கைது செய்யப்பட்ட வழக்கறிஞர்கள் சட்டத்தை மீறி நடத்தப்பட்டதாக கூறப்படும் விவகாரத்தில் நியமிக்கப்பட்ட ஒரு நபர் ஆணையம் விசாரணையை தொடங்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

    தூய்மைப் பணியாளர்கள் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்த வழக்கறிஞர்கள் சட்ட விரோதமாக கைது செய்யப்பட்டதாக கூறி அவர்களை விடுவிக்க கோரி ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்யப்பட்டிருந்து. இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ் தலைமையிலான அமர்வு, இந்த விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய உயர் நீதிமன்றத்தின் ஓய்வு பெற்ற நீதிபதி வி.பார்த்திபனை நியமித்து உத்தரவிட்டிருந்தது.

    இந்த உத்தரவை ரத்து செய்யக்கோரி காவல்துறை சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரித்த நீதிபதி ஜெ.நிஷாபானு தலைமையிலான அமர்வு ஒரு நபர் ஆணைய விசாரணை உத்தரவை நிறுத்தி வைத்தது. இந்நிலையில், ஆட்கொணர்வு மனு இன்று தலைமை நீதிபதி அமர்வில் விசாரணைக்கு வந்தது.

    அப்போது ஆஜரான தமிழ்நாடு அரசின் கூடுதல் தலைமை வழக்கறிஞர் ஜெ.ரவீந்திரன், ஒரு நபர் ஆணையம் குறித்து எந்த கோரிக்கையும் வைக்கப்படாத நிலையில் அந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டதாகவும் மேலும் தங்கள் தரப்பு வாதம் கேட்கப்படவில்லை எனவும் கூறினார்.

    அப்போது குறிக்கிட்ட தலைமை நீதிபதி, இந்த விவகாரத்தில் இரு தரப்பும் குற்றச்சாட்டுகளை கூறும் நிலையில் ஒரு நபர் ஆணையம் நியமிக்கப்பட்டுள்ளது. இதற்கு ஏன் அரசு அச்சப்படுகிறது என கேள்வி எழுப்பினார். இதற்கு பதிலளித்த கூடுதல் தலைமை வழக்கறிஞர், நாங்கள் அச்சப்படவில்லை ஆனால் ஒரு நபர் ஆணையத்தை நியமித்த உத்தரவு நியாயமானது அல்ல எனக் கூறினார்.

    ஒருவேளை ஒரு நபர் ஆணைய உத்தரவை உறுதி செய்வதாக இருந்தால் புதிதாக ஒருவரை ஒரு நபர் ஆணையராக நியமிக்கலாம் என கோரிக்கை வைத்தார். இதனை ஏற்க மறுத்த நீதிபதிகள், ஓய்வு பெற்ற நீதிபதி வி.பார்த்திபன் தனது விசாரணையை தொடங்க உத்தரவிட்ட நீதிபதிகள் வழக்கை அக்டோபர் பத்தாம் தேதிக்கு தள்ளிவைத்தார். மேலும், காவல்துறை தங்களிடம் உள்ள ஆதாரங்களை ஒரு நபர் ஆணையத்திடம் சமர்பிக்கலாம் எனவும் நீதிபதிகள் தங்களது உத்தரவில் குறிப்பிட்டுள்ளனர்.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    மாநிலம்

    சொன்னதை கேட்கலையே அண்ணன்… வேட்பாளரை மாற்றாததால் திமுகவில் இணைந்த நாதக தம்பிகள்

    September 19, 2025
    மாநிலம்

    எம்.பி.க்கள் தொகுதி மேம்பாட்டு நிதியை ரூ.10 கோடியாக உயர்த்த முதல்வர் ஸ்டாலின் வலியுறுத்தல்

    September 19, 2025
    மாநிலம்

    கர்ப்பிணிகள், குழந்தைகள், மாற்றுத் திறனாளிகள் விஜய்யின் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சிக்கு நேரில் வர வேண்டாம்: தவெக

    September 19, 2025
    மாநிலம்

    தவெக தலைவர் விஜய் வீட்டின் மொட்டை மாடியில் பதுங்கியிருந்த இளைஞர் யார்; நடந்தது என்ன?

    September 19, 2025
    மாநிலம்

    54 பிறமொழிச் சொற்களுக்கான தமிழ் வார்த்தைகள் அறிவிப்பு

    September 19, 2025
    மாநிலம்

    ஜிஎஸ்டி அபராத நோட்டீஸை போர்ட்டலில் பதிவேற்றம் செய்வதோடு நிறுவனங்களுக்கும் அனுப்ப வேண்டும்: ஐகோர்ட்

    September 19, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • சொன்னதை கேட்கலையே அண்ணன்… வேட்பாளரை மாற்றாததால் திமுகவில் இணைந்த நாதக தம்பிகள்
    • அதிகப்படியான அலறல் மூளை செயலிழப்பு மற்றும் இதய அபாயத்தின் எச்சரிக்கை அறிகுறியாக இருக்கலாம்: நிர்வகிப்பதற்கான உதவிக்குறிப்புகள் மற்றும் மருத்துவரை எப்போது கலந்தாலோசிக்க வேண்டும் | – தி டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • உடற்கல்வி ஆசிரியர் பணியிடத்துக்கான கட்டுப்பாடு தேவையற்றது: உயர் நீதிமன்றம் கருத்து
    • நடிகர் ரோபோ சங்கரின் உடல் தகனம்: திரையுலகினர், ரசிகர்கள் இறுதி அஞ்சலி
    • எம்.பி.க்கள் தொகுதி மேம்பாட்டு நிதியை ரூ.10 கோடியாக உயர்த்த முதல்வர் ஸ்டாலின் வலியுறுத்தல்

    Recent Comments

    No comments to show.

    Archives

    • September 2025
    • August 2025
    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.