Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Friday, September 12
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»மாநிலம்»தூய்மைப் பணியாளர்கள் பிரச்சினையில் மனித உரிமை மீறல்: அரசுக்கு சமம் குடிமக்கள் இயக்கம் கண்டனம்
    மாநிலம்

    தூய்மைப் பணியாளர்கள் பிரச்சினையில் மனித உரிமை மீறல்: அரசுக்கு சமம் குடிமக்கள் இயக்கம் கண்டனம்

    adminBy adminAugust 15, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    தூய்மைப் பணியாளர்கள் பிரச்சினையில் மனித உரிமை மீறல்: அரசுக்கு சமம் குடிமக்கள் இயக்கம் கண்டனம்
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    மதுரை: தூய்மைப் பணியாளர்கள் பிரச்சினையில் அரசின் மவுனமும், காவல் துறையினரைக் கொண்டு போராட்டத்தை நசுக்குவதும் மிகப் பெரிய மனித உரிமை மீறல் என சமம் குடிமக்கள் இயக்கத்தின் மாநிலத் தலைவர் வழக்கறிஞர் சி.ஜே.ராஜன் கூறியுள்ளார்.

    இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “சென்னை மாநகராட்சியின் 15 மண்டலங்களில் 11 மண்டலங்களில் தனியார் நிறுவனங்கள் மூலம் தூய்மைப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதர நான்கு மண்டலங்களில் மாநகராட்சியின் ஒப்பந்த தொழிலாளர்களாக சுமார் 2000-க்கும் மேற்பட்டோர் வேலை பார்த்து வருகின்றனர். இவர்களுக்கு தேசிய நகர்ப்புற வாழ்வாதார திட்டத்தின்கீழ் மாதம் ரூ.22,950 ஊதியமாக வழங்கப்பட்டுள்ளது.

    தனியார்வசம் தூய்மைப் பணிகளை ஒப்படைத்துள்ளதால் மாதம் ரூ.16,950 மட்டுமே சம்பளம் வழங்கப்படுகிறது. இதனால் தூய்மைப் பணியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தூய்மைப் பணியாளர்கள் தங்களுக்கு நிரந்தர வேலை, சம்பள உயர்வு மற்றும் தங்கள் நலத்திட்ட கோரிக்கைகளுக்காக கடந்த 13 நாட்களாக சென்னை ரிப்பன் பில்டிங்கில் அமைதியான முறையில் போராடி வந்தனர்.

    போராட்டம் நடத்தி வந்த தூய்மைப் பணியாளர்களிடம் அரசு முறையான பேச்சு வார்த்தை நடத்தி நல்ல முடிவுக்கு கொண்டு வராமல், நீதிமன்ற உத்தரவினை காண்பித்து காவல் துறையினர் மூலம் போராட்டத்தை நசுக்கி இருப்பது அராஜக நடவடிக்கை ஆகும். இதனை சமம் குடிமக்கள் இயக்கம் வன்மையாக கண்டிக்கிறது. நியாயமான போராட்டம் நடத்திய பணியாளர்களின் பிரச்சினையை சரி செய்யாமல், தனியார் நிறுவனங்களுடன் ஒப்பந்தம் செய்து, தூய்மைப் பணியாளர்களின் குரலை காவல் துறையினரைக் கொண்டு அடக்கியிருப்பது மிகப் பெரிய ஜனநாயக விரோத செயலாகும். இது மிகப் பெரிய மனித உரிமை மீறலாகும்.

    தமிழக அரசானது சென்னை மாநகராட்சி தூய்மைப் பணியாளர்களை நிரந்தரம் செய்யாமல் தனியார் நிறுவனத்திடம் ஒப்பந்தம் போட்டுள்ள செயலானது மிகவும் கண்டிக்கத்தக்கது. தனியார்மயத்திற்கு எதிராக, தங்களுடைய உரிமைகளுக்காக போராடும் மக்களை நள்ளிரவில் கைது செய்ததோடு அந்தப் போராட்டத்திற்கு ஆதரவு அளித்த பல சமூக செயல்பாட்டாளர்களை எல்லாம் கைது செய்துள்ளது காவல் துறை. கைது செய்யப்பட்டோரை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும். அவர்கள் மீது பதிவு செய்யப்பட்ட வழக்குகளை திரும்பப்பெற வேண்டும்.

    இனிமேலாவது அரசு உடனடியாக தூய்மைப் பணியாளர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி தனது தனியார்மய கொள்கையையினை கைவிடவேண்டும். தூய்மைப் பணிகளை முழுமையாக மாநகராட்சியின் நேரடி நிர்வாகத்தின் கீழ் கொண்டுவந்து பணியாளர்களை நிரந்தர பணியாளராக அமர்த்த வேண்டும். அதுதான் அரசின் நியாயமான செயலாக இருக்க முடியும். தமிழக முதல்வர் நேரடியாக இந்தப் பிரச்சினையில் தலையிட்டு, போராட்ட உரிமைக்கு மதிப்புக் கொடுத்து முறையான பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு காண அனைத்து வழிமுறைகளையும் மேற்கொள்ள வேண்டும்” என்று அவர் கூறியுள்ளார்.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    மாநிலம்

    அன்று அண்ணாமலை… இன்று நயினார் நாகேந்திரன்..! – பழனிசாமி ‘ஸ்டைலில்’ பழிபோடும் தினகரன்!

    September 12, 2025
    மாநிலம்

    போலீஸார் மீதான தாக்குதல்: நயினார் நாகேந்திரன் கண்டனம்

    September 12, 2025
    மாநிலம்

    மருத்துவத் துறையில் இந்தியாவுக்கு தமிழகம்தான் வழிகாட்டி: அமைச்சர் மா.சுப்பிரமணியன் பெருமிதம்

    September 12, 2025
    மாநிலம்

    திருவாரூர்: ஆற்றில் சிக்கி தத்தளித்த 2 சிறுவர்களை உயிரை பணயம் வைத்து காப்பாற்றிய பெண்!

    September 12, 2025
    மாநிலம்

    மருத்துவமனை இடமாற்றத்துக்கு சீமான் எதிர்ப்பு

    September 12, 2025
    மாநிலம்

    பட்டியலின ஊழியரை காலில் விழவைத்ததாக வெடித்த சர்ச்சை! – ஆளும் கட்சியினர் என்பதால் அடக்கிவாசிக்கிறதா போலீஸ்?

    September 12, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • நாளை மணிப்பூர் செல்கிறார் பிரதமர் மோடி
    • அன்று அண்ணாமலை… இன்று நயினார் நாகேந்திரன்..! – பழனிசாமி ‘ஸ்டைலில்’ பழிபோடும் தினகரன்!
    • ராயல் குடும்ப ஊழல்: பிரின்ஸ் ரகசிய மகனை ஒப்புக்கொள்கிறார் – கிங்கின் மறைக்கப்பட்ட மகள் அதிர்ச்சிக்கு 5 ஆண்டுகளுக்குப் பிறகு – இந்தியாவின் டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • இந்தியா – மொரீஷியஸ் இடையே 10 ஒப்பந்தம்: பிரதமர்கள் மோடி, நவீன் முன்னிலையில் கையெழுத்து
    • அமெரிக்காவில் இந்திய வம்சாவளி நபர் தலை துண்டிக்கப்பட்டு கொலை: குடும்பத்தினர் கண்முன்னே நிகழ்ந்த கொடூரம்!

    Recent Comments

    No comments to show.

    Archives

    • September 2025
    • August 2025
    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.