Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Sunday, September 21
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»மாநிலம்»தூத்துக்குடியில் ரூ.30 ஆயிரம் கோடியில் கப்பல் கட்டும் தளங்கள்: தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா தகவல்
    மாநிலம்

    தூத்துக்குடியில் ரூ.30 ஆயிரம் கோடியில் கப்பல் கட்டும் தளங்கள்: தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா தகவல்

    adminBy adminSeptember 21, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    தூத்துக்குடியில் ரூ.30 ஆயிரம் கோடியில் கப்பல் கட்டும் தளங்கள்: தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா தகவல்
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    சென்னை: தூத்​துக்​குடி​யில் தலா ரூ.15 ஆயிரம் கோடி என ரூ.30 ஆயிரம் கோடி முதலீட்​டில், கப்​பல் கட்​டும் தளங்​கள் அமைக்க கொச்​சின் ஷிப்​யார்டு மற்​றும் மசகான் டாக் ஷிப் பில்​டர்ஸ் நிறு​வனங்​களு​டன் ஒப்​பந்​தம் செய்​யப்​பட்​டுள்​ள​தாக தொழில்​துறை அமைச்​சர் டி.ஆர்​.பி.​ராஜா தெரி​வித்​தார்.

    இதுகுறித்​து, சென்னை தலை​மைச் செயல​கத்​தில் செய்​தி​யாளர்​களிடம் அவர் கூறிய​தாவது: திமுக ஆட்​சி​யில் தொழில்​துறை வரலாறு காணாத வளர்​ச்சிகண்​டுள்​ளது. பல தொழில்​பிரிவு​கள், குறிப்​பாக எலெக்ட்​ரானிக்​ஸ், வாகன உதிரி​பாகங்​கள், காலணி தயாரிப்பு போன்ற தொழில் பிரிவு​களில் தமிழகம் முதலிடத்​தில் உள்​ளது.

    முதல்​வரை பொறுத்​தவரை, பாரம்​பரிய துறை​கள் மற்​றும் புதிய துறை​களில் நாம் கால்​ப​திக்க வேண்​டும், வளர்ச்சி காண வேண்​டும் என்று உத்​தர​விட்​டுள்​ளார். இதற்​கிணங்க வெளி​நாட்டு பயணங்​கள், இங்கு நடை​பெறும் முதலீட்​டாளர்​கள் மாநாடு​களில் செமிகண்​டக்​டர் போன்ற புதிய தொழில் பிரிவு​கள் மற்​றும் கப்​பல் கட்​டும் துறை​யில் அதி​ முக்​கி​யத்​து​வம் இருப்​பதை அறிந்​துள்​ளோம். நாம் கப்​பல் கட்​டும் துறை​யில் நீண்ட கால​மாக உள்​ளோம்.

    இதன் வாயி​லாக, தற்​போது தமிழ்​நாடு தொழில் வழி​காட்டி நிறு​வனம் மற்​றும் சிஎஸ்​எல் எனப்​படும் கொச்​சின் ஷிப்​யார்டு லிட் நிறு​வனம் இடை​யில் ரூ.15 ஆயிரம் கோடிக்​கான முதலீட்டு ஒப்​பந்​தம் கையெழுத்​தாகி​யுள்​ளது. அதே​போல், மசகான் டாக் ஷிப் பில்​டர்ஸ் நிறு​வனத்​துட​னும் ரூ.15 ஆயிரம் கோடிக்​கான ஒப்​பந்​தம் செய்​யப்​பட்​டுள்​ளது.

    தூத்​துக்​குடி​யில் அமை​யும் இந்த கப்​பல் கட்​டும் தளங்​களில் சிஎஸ்​எல் நிறு​வனத்​தில் 4 ஆயிரம் பேருக்கு நேரடி​யாக​வும், 6 ஆயிரம் பேருக்கு மறை​முக​மாக​வும் என 10 ஆயிரம் பேருக்​கும், மசகான் நிறு​வனத்​தில் 5 ஆயிரம் பேருக்கு நேரடி​யாக​வும், 40 ஆயிரம் பேருக்கு மறை​முக​மாக​வும் என 45 ஆயிரம் பேருக்​கு வேலை​வாய்ப்பு உரு​வாகும்.

    இதுத​விர, பல்​வேறு முக்​கிய​மான சர்​வ​தேச நிறு​வனங்​களின் அதி​காரி​கள் விரை​வில் தமிழகம் வர உள்​ளனர். அப்​போது கூடு​தல் தகவல்​கள் வெளி​யாகும். இந்த இரு முதலீட்டு திட்​டங்​களும் தூத்​துக்​குடி துறை​முகத்தை ஒட்​டியே அமைய உள்​ளன. இதுத​விர, மற்ற துறை​முகங்​கள் தொடர்​பான திட்​டங்​களுக்​கும் பேச்​சு​வார்த்தை நடத்தி வரு​கிறோம்.

    தூத்​துக்​குடி​யில் நடை​பெற்ற நிகழ்​வில் முதல்​வர் மு.க.ஸ்​டா​லின் பேசும்​போது, கடல்​சார் போக்​கு​வரத்​து, உற்​பத்தி கொள்கை உரு​வாக்​கப்​படும் என்​றும் அறி​வித்​திருந்​தார். அந்த கொள்கை தொடர்​பாக, நாங்​கள் தற்​போது பல்​வேறு நிறு​வனங்​களு​டன் பேசி வரு​கிறோம். தமிழகத்​தில் ஒரு முதலீடுதிட்​டத்​துக்கு ஒப்​பந்​தம் போட்​டதும், தலை​மைச்​செயலர் தலை​மையி​லான கமிட்டி ஆய்வு செய்​கிறது. திட்​டத்​துக்​கான ஒப்​புதல் எளிமைப்​படுத்​தப் பட்​டுள்​ள​தால்​தான், உலகள​வில் தொழில் செய்​வ​தில் தமிழகம் முதலிடத்​தில் உள்​ளது.

    தேசிய நலன் என்று வரும்​போது முதல்​வர் எப்​போதும் அரசி​யல் செய்ய விரும்ப மாட்​டார். மத்​திய அரசுக்கு தேவை​யான ஒத்​துழைப்பு அளிப்​போம். கப்​பல் கட்​டு​தல் என்​பது இந்​தி​யா​வுக்கு மிக​வும் முக்​கி​யம். இன்​னும் பல கப்​பல் கட்​டும் நிறு​வனங்​கள் வர உள்​ளன. உலக முதலீட்​டாளர்​கள் மா​நாட்டை இந்​தாண்​டில் நடத்​து​வது குறித்​து ஆலோ​சித்​து வரு​கிறோம்​. இவ்​வாறு அவர்​ தெரிவி்த்​தார்​.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    மாநிலம்

    அரசியல் கட்சிகளின் பதிவு ரத்து: ஜவாஹிருல்லா கண்டனம்

    September 21, 2025
    மாநிலம்

    புனைவு வரலாற்றை தொல்லியல் ஆதாரங்களால் முறியடிக்க வேண்டும்: மத்திய தொல்லியல் துறை இயக்குநர் கருத்து

    September 21, 2025
    மாநிலம்

    சுரண்டை அருகே குளத்தில் தண்ணீர் எடுக்கும் விவகாரம்: அதிமுக எம்எல்ஏ தலைமையில் பொதுமக்கள் சாலை மறியல்

    September 21, 2025
    மாநிலம்

    கடந்த 6 ஆண்டுகளாக வேட்பாளர்களை நிறுத்தாத காரணத்தால் மமக, கொமதேக உள்ளிட்ட 42 கட்சிகளின் பதிவு ரத்து

    September 21, 2025
    மாநிலம்

    “நான் மக்கள் சக்தியின் பிரதிநிதி, மாபெரும் கட்சியின் தலைவன்” – திமுகவுக்கு விஜய் பகிரங்க சவால்

    September 21, 2025
    மாநிலம்

    அக்.1 முதல் நயினார் நாகேந்திரன் யாத்திரை: பாஜக மாநில பொதுச் செயலாளர் கருப்பு முருகானந்தம் தலைமையில் குழு

    September 20, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • அரசியல் கட்சிகளின் பதிவு ரத்து: ஜவாஹிருல்லா கண்டனம்
    • சபரிமலை கோயில் ரூ.1,033 கோடியில் சீரமைப்பு: கேரள முதல்வர் பின​ராயி விஜயன் அறிவிப்பு
    • நவராத்திரி விழா: சுவாமி விக்ரகங்கள் திருவனந்தபுரத்துக்கு புறப்பாடு – கேரள ஆளுநர் இன்று எல்லையில் வரவேற்கிறார்
    • புனைவு வரலாற்றை தொல்லியல் ஆதாரங்களால் முறியடிக்க வேண்டும்: மத்திய தொல்லியல் துறை இயக்குநர் கருத்து
    • பார்வையற்ற யாசகரால் மனைவிக்கு ஜீவனாம்சம் வழங்க முடியாது: கேரள உயர் நீதிமன்றம் தீர்ப்பு

    Recent Comments

    No comments to show.

    Archives

    • September 2025
    • August 2025
    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.