Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Friday, August 1
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»மாநிலம்»தூத்துக்குடியில் இருந்து நிலக்கரி ஏற்றி வந்த சரக்கு ரயிலில் தீ விபத்து
    மாநிலம்

    தூத்துக்குடியில் இருந்து நிலக்கரி ஏற்றி வந்த சரக்கு ரயிலில் தீ விபத்து

    adminBy adminJune 17, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    தூத்துக்குடியில் இருந்து நிலக்கரி ஏற்றி வந்த சரக்கு ரயிலில் தீ விபத்து
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    Last Updated : 17 Jun, 2025 01:56 PM

    Published : 17 Jun 2025 01:56 PM
    Last Updated : 17 Jun 2025 01:56 PM

    தூத்துக்குடியில் இருந்து நிலக்கரி ஏற்றி வந்த சரக்கு ரயிலில் தீ விபத்து
    தூத்துக்குடி துறைமுகத்தில் இருந்து நிலக்கரி ஏற்றி வந்த சரக்கு ரயிலில் ஏற்பட்ட தீயை தீயணைப்பு மற்றும் மீட்பு படையினர் அணைத்தனர்

    கோவில்பட்டி: தூத்துக்குடி துறைமுகத்தில் இருந்து நிலக்கரி ஏற்றி வந்த சரக்கு ரயிலில் தீ விபத்து ஏற்பட்டதை தொடர்ந்து, கோவில்பட்டி ரயில் நிலையத்தில் சரக்கு ரயில் நிறுத்தப்பட்டு, சுமார் ஒரு மணி நேர போராட்டத்துக்குப் பின்னர் தீ அணைக்கப்பட்டது.

    தூத்துக்குடி துறைமுகத்திலிருந்து 59 பெட்டிகளில் நிலக்கரி ஏற்றிக்கொண்டு கரூர் மாவட்டம் புகளூர் காகித தொழிற்சாலைக்கு இன்று (ஜூன் 17) காலை 9 மணி அளவில் சரக்கு ரயில் சென்று கொண்டிருந்தது. கடம்பூர் – கோவில்பட்டி இடையே சரக்கு ரயில் சென்றபோது சரக்கு ரயில் பெட்டியில் இருந்து நிலக்கரி தீப்பற்றி எரிந்து சிதறி கீழே விழுந்தது. இதனால் இருப்பு பாதையை ஒட்டியுள்ள பகுதிகளில் இருந்த காய்ந்த புற்களில் தீப்பிடித்து எரிந்துள்ளது.

    அப்போது அந்த பகுதியில் தண்டவாள பராமரிப்பு பணியில் ஈடுபட்டிருந்த ரயில்வே இருப்புப் பாதை பராமரிப்பாளர் வேலுச்சாமி உள்ளிட்ட ஊழியர்கள், ரயில் பெட்டியில் இருந்து நிலக்கரி விழுந்து புற்களில் தீப்பற்றி எரிவதை பார்த்து கடம்பூர் ரயில் நிலையத்துக்கு தகவல் தெரிவித்துள்ளனர். கடம்பூர் ரயில்வே ஊழியர்கள் சரக்கு ரயிலில் இருந்த கார்டுக்கு உடனடியாக தகவல் தெரிவித்தனர். இதையடுத்து கோவில்பட்டி ரயில் நிலையத்தில் சரக்கு ரயில் உடனே நிறுத்தப்பட்டது.

    மேலும் பெட்டிகளை ஆய்வு செய்ததில் 17-வது பெட்டியில் இருந்த நிலக்கரியில் தீப்பிடித்து புகை வெளிவருவது தெரியவந்தது. தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு கோவில்பட்டி மற்றும் கழுகுமலை உள்ளிட்ட இடங்களில் இருந்து தீயணைப்பு வாகனங்கள் வரவழைக்கப்பட்டன. ரயில்வே மின் பொறியாளர்கள் மற்றும் ஊழியர்கள் விரைந்து வந்து ரயில்வே இருப்புப் பாதையில் உயர் அழுத்த மின் பாதையில் சென்ற மின்சாரத்தை நிறுத்தினர். அதைத் தொடர்ந்து சரக்கு ரயில் பெட்டியில் ஏறி தீயணைப்பு வீரர்கள் தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர்.

    இதன் காரணமாக கோவில்பட்டி வழியாக செல்லும் திருச்சி – திருவனந்தபுரம் இன்டர்சிட்டி விரைவு ரயில், நள்ளி ரயில் நிலையத்திலும், சென்னை – நாகர்கோவில் வந்தே பாரத், விருதுநகர் ரயில் நிலையத்திலும் நிறுத்தப்பட்டன. சுமார் ஒரு மணி நேரத்துக்கு மேல் தீயணைப்பு பணி நடந்தது. தீ முழுமையாக கட்டுப்படுத்தப்பட்ட பின்னர் இருப்பு பாதை உயிர் அழுத்த மின் இணைப்பு கொடுக்கப்பட்டது. அதன்பின்னர் கோவில்பட்டி ரயில் நிலையத்தை கடந்து ரயில்கள் இயக்கப்பட்டன.

    லேட்டஸ்ட் அப்டேட்களுக்கு இந்து தமிழ்திசை வாட்ஸ்அப் சேனலை Follow செய்யுங்கள்…
    Follow

    FOLLOW US

    Google News

    தவறவிடாதீர்!




    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    மாநிலம்

    உங்களுடன் ஸ்டாலின்… எங்களுடன் எடப்பாடியார்..! – ஏட்டிக்குப் போட்டி செய்கிறதா அதிமுக?

    August 1, 2025
    மாநிலம்

    பாதுகாப்பு, வாழ்வாதார மேம்பாட்டுக்கான திருநங்கையர் நல கொள்கை வெளியீடு

    August 1, 2025
    மாநிலம்

    பாஜக கூட்டணியில் இருந்து விலகியதாக அறிவித்த பிறகு முதல்வர் ஸ்டாலினை சந்தித்தார் ஓபிஎஸ்

    August 1, 2025
    மாநிலம்

    ரிதன்யாவின் செல்போன் தடயவியல் சோதனை அறிக்கையை தாக்கல் செய்ய ஐகோர்ட் உத்தரவு

    August 1, 2025
    மாநிலம்

    தமிழகத்தில் ஆகஸ்ட் 2-ம் தேதி முதல் 7 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு

    August 1, 2025
    மாநிலம்

    ஓசூரில் கடந்த 3 மாதங்களில் தெரு நாய்கள் கடித்து 446 பேர் பாதிப்பு!

    August 1, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • உங்களுடன் ஸ்டாலின்… எங்களுடன் எடப்பாடியார்..! – ஏட்டிக்குப் போட்டி செய்கிறதா அதிமுக?
    • பாதுகாப்பு, வாழ்வாதார மேம்பாட்டுக்கான திருநங்கையர் நல கொள்கை வெளியீடு
    • பாஜக கூட்டணியில் இருந்து விலகியதாக அறிவித்த பிறகு முதல்வர் ஸ்டாலினை சந்தித்தார் ஓபிஎஸ்
    • ரிதன்யாவின் செல்போன் தடயவியல் சோதனை அறிக்கையை தாக்கல் செய்ய ஐகோர்ட் உத்தரவு
    • தமிழகத்தில் ஆகஸ்ட் 2-ம் தேதி முதல் 7 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு

    Recent Comments

    No comments to show.

    Archives

    • August 2025
    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.