Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Friday, August 8
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»மாநிலம்»துணைவேந்தர் நியமன விவகாரம்: தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு; விசாரணை தள்ளிவைப்பு
    மாநிலம்

    துணைவேந்தர் நியமன விவகாரம்: தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு; விசாரணை தள்ளிவைப்பு

    adminBy adminAugust 8, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    துணைவேந்தர் நியமன விவகாரம்: தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு; விசாரணை தள்ளிவைப்பு
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    புதுடெல்லி: துணைவேந்தர்களை நியமிக்க அரசுக்கு அதிகாரம் வழங்கும் சட்டப்பிரிவுக்கு விதிக்கப்பட்ட இடைக்காலத் தடையை நீக்கக்கோரி தமிழக அரசு தொடர்ந்துள்ள மேல்முறையீட்டு வழக்கு விசாரணையை உச்ச நீதிமன்றம் தள்ளிவைத்துள்ளது.

    தமிழகத்தில் உள்ள பல்கலைக் கழகங்களின் வேந்தராக தமிழக முதல்வரை நியமிப்பது. துணை வேந்தர்களை நியமிக்கும் அதிகாரத்தை மாநில அரசுக்கு வழங்குவது உள்ளிட்ட 10 சட்ட மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல் வழங்காமல் நீண்டகாலமாக கிடப்பில் போட்டதை எதிர்த்து தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.

    அந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள், தங்களுக்குரிய அதிகாரத்தைப் பயன்படுத்தி அந்த 10 சட்ட மசோதாக்களுக்கும் ஒப்புதல் அளித்து உத்தரவிட்டனர். அதையடுத்து அந்த 10 சட்ட மசோதாக்களும் அரசிதழில் வெளியிடப்பட்டு அமலுக்கு கொண்டு வரப்பட்டன.

    இதன்மூலம் தமிழகத்தில் உள்ள பல்கலைக்கழகங்களில் துணை வேந்தர்களை நியமிப்பதற்கான நடவடிக்கைகளை தமிழக அரசு எடுத்து வருகிறது. இந்நிலையில், துணைவேந்தர்களை நியமிக்கும் அதிகாரத்தை தமிழக அரசுக்கு வழங்கும் சட்டப் பிரிவுகளை எதிர்த்து பாளையங்கோட்டையை சேர்ந்த பாஜக வழக்கறிஞரான கே.வெங்கடாச்சலபதி என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடர்ந்திருந்தார்.

    இடைக்கால தடை அந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்ற நீதிபதிகள் ஜி.ஆர். சுவாமிநாதன், வி.லட்சுமி நாராயணன் ஆகியோர் அடங்கிய அமர்வு, தமிழகத்தில் பல்கலைக்கழக துணைவேந்தர்களை நியமிக்க அரசுக்கு அதிகாரம் வழங்கும் சட்டப்பிரிவுக்கு கடந்த மே மாதம் இடைக்கால தடை விதித்தனர்.

    இந்த இடைக்காலத்தடையை எதிர்த்தும், சென்னை உயர் நீதிமன்றத்தில் நடைபெறும் வழக்கு விசாரணையை உச்ச நீதிமன்றத்துக்கு மாற்றக்கோரியும் தமிழகஅரசு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது.

    இந்த வழக்கு விசாரணை நீதிபதிகள் சூர்யகாந்த், உஜ்ஜல் புயான், என்.கோட்டீஸ்வர் சிங் ஆகியோர் அடங்கிய அமர்வில் நேற்று நடந்தது. அப்போது பல்கலைக்கழக மானியக்குழு தரப்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, இந்த வழக்கு விசார ணையை 2 வாரங்களுக்கு தள்ளி வைக்க வேண்டும், எனக் கோரினார்.

    அப்போது தமிழக அரசு தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர்கள் அபிஷேக் மனு சிங்வி, பி.வில்சன் ஆகியோர், துணை வேந்தர்கள் நியமனம் தொடர்பான 3 வழக்குகள் உச்ச நீதி மன்றத்தில் நிலுவையில் உள்ளதாகத் தெரிவித்தனர். அதையடுத்து நீதிபதிகள், தமிழக அரசின் இந்த மேல்முறையீட்டு மனு மீதான விசாரணையை ஆக.13-க்கு தள்ளிவைத்து உத்தரவிட்டுள்ளனர்.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    மாநிலம்

    பிரேமலதா, ஓபிஎஸ் உடனான சந்திப்பு: கூட்டணிக்குள் சேர்க்கவா… கூட்டணிக் கட்சிகளை அடக்கவா?

    August 8, 2025
    மாநிலம்

    ஊபர் செயலியில் மெட்ரோ பயணச்சீட்டு பெறும் வசதி அறிமுகம்: 2-ம் கட்ட மெட்ரோ ரயில்கள் டிசம்பரில் இயக்கம்

    August 8, 2025
    மாநிலம்

    சென்னையில் இருந்து போத்தனூர், செங்கோட்டை, நாகர்கோவிலுக்கு சிறப்பு ரயில்கள்

    August 8, 2025
    மாநிலம்

    அதிமுக கொள்கை வேறு, கூட்டணி வேறு: பழனிசாமி திட்டவட்டம்

    August 8, 2025
    மாநிலம்

    திருச்சி எஸ்ஆர்எம் ஓட்டல் வழக்கில் தனி நீதிபதி உத்தரவு ரத்து: உயர் நீதிமன்ற மதுரை அமர்வு தீர்ப்பு

    August 8, 2025
    மாநிலம்

    பாமகவை கைப்பற்றத் துடிக்கிறார் அன்புமணி: ராமதாஸ் பகிரங்க குற்றச்சாட்டு

    August 8, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • பிரேமலதா, ஓபிஎஸ் உடனான சந்திப்பு: கூட்டணிக்குள் சேர்க்கவா… கூட்டணிக் கட்சிகளை அடக்கவா?
    • மாதவிடாய் நின்ற பிறகு அடிக்கடி நிற்பது இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தக்கூடும் என்று ஆய்வு கண்டறிகிறது: மாதவிடாய் நின்ற பெண்களில் காணப்படும் நன்மைகள் | – டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • பிஹாரில் ட்ரம்​புக்கு இருப்​பிட சான்​றிதழ் கேட்டு விண்ணப்பித்ததால் வழக்குப் பதிவு
    • “சிக்கல்கள் தீரும் வரை இந்தியாவுடன் வர்த்தகப் பேச்சு இல்லை” – ட்ரம்ப் திட்டவட்டம்
    • ஊபர் செயலியில் மெட்ரோ பயணச்சீட்டு பெறும் வசதி அறிமுகம்: 2-ம் கட்ட மெட்ரோ ரயில்கள் டிசம்பரில் இயக்கம்

    Recent Comments

    No comments to show.

    Archives

    • August 2025
    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.