Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Friday, September 12
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»மாநிலம்»துணைவேந்தர் நியமனம் சட்டங்களுக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்க கோரி உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு
    மாநிலம்

    துணைவேந்தர் நியமனம் சட்டங்களுக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்க கோரி உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு

    adminBy adminJune 4, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    துணைவேந்தர் நியமனம் சட்டங்களுக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்க கோரி உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    புதுடெல்லி: பல்கலைக்கழக துணைவேந்தர்கள் நியமன அதிகாரத்தை ஆளுநரிடமிருந்து அரசுக்கு வழங்கும் தமிழக அரசின் சட்டங்களுக்கு விதிக்கப்பட்ட இடைக்காலத் தடையை நீக்கக்கோரி தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது.

    தமிழகத்தில் உள்ள அனைத்து பல்கலைக்கழகங்களுக்கும் துணைவேந்தர்களை நியமிக்கும் ஆளுநரின் அதிகாரத்தை மாநில அரசுக்கு வழங்குவது தொடர்பாக தமிழக அரசின் 10 சட்ட மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்க மறுத்த நிலையில், உச்ச நீதிமன்றம் தனக்குரிய சிறப்பு அதிகாரத்தை பயன்படுத்தி அந்த 10 சட்ட மசோதாக்களுக்கும் ஒப்புதல் அளித்தது.

    அதையடுத்து, துணைவேந்தர் கள் நியமனம் தொடர்பாக தமிழக அரசுக்கு அதிகாரம் வழங்கும் சட்டங்களை தமிழக அரசு கடந்த ஏப். 11 அன்று அரசிதழில் வெளியிட்டது. இதை எதிர்த்து நெல்லையைச் சேர்ந்த வழக்கறிஞரான குட்டி என்ற வெங்கடாசலபதி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து இருந்தார். இந்த வழக்கு விசாரணை சென்னை உயர் நீதிமன்றத்தின் விடுமுறை கால அமர்வான நீதிபதிகள் ஜி.ஆர்.சுவாமிநாதன், வி.லட்சுமி நாராயணன் ஆகியோர் அடங்கிய அமர்வில் கடந்த மே 21-ம் தேதி நடந்தது.

    அப்போது மனுதாரர் தரப்பில் மூத்த வழக்கறிஞர் தாமா சேஷாத்ரி நாயுடுவும், யுஜிசி சார்பில் மத்திய அரசின் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ஏ.ஆர்.எல்.சுந்தரேசனும் ஆஜராகி வாதிட்டனர். தமிழக அரசு தரப்பில் அரசு தலைமை வழக்கறிஞர் பி.எஸ்.ராமனும், உயர் கல்வி துறை தரப்பில் மூத்த வழக்கறிஞர் பி.வில்சனும் ஆஜராகி வாதிட்டனர். இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், துணைவேந்தர்களை நியமிக்கும் ஆளுநரின் அதிகாரத்தை தமிழக அரசுக்கு வழங்கி நிறைவேற்றப்பட்ட சட்டங்களுக்கு இடைக்காலத் தடை விதித்து அன்றைய தினம் உத்தரவிட்டனர்.

    இந்நிலையில் இந்த தடையை நீக்கக் கோரி தமிழக அரசு தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது. அந்த மனுவில், பல்கலைக்கழக துணைவேந்தர்கள் நியமனம் தொடர்பாக உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவின் அடிப்படையில் தமிழக அரசு 10 சட்டமசோதாக்களையும் அரசிதழில் வெளியிட்டது.

    துணைவேந்தர்கள் நியமனம் தொடர்பான தமிழக அரசின் இந்த நடவடிக்கைகளை எதிர்த்து வழக்கு தொடர்ந்த அரசியல் கட்சி பிரமுகரான குட்டி என்ற வெங்கடாச்சல பதியின் மனுவை சென்னை உயர்நீதிமன்றம் அவசர கதியில் விசாரித்து, அதுவும் நீதிமன்ற நேரம் முடிந்த பின்னரும் மாலை 6.30 மணிவரை இடைவிடாது விசாரித்து இடைக்காலத் தடை விதித்துள்ளது.

    குட்டி என்ற வெங்கடாச்சலபதி தொடர்ந்துள்ள இந்த வழக்கு அரசியல் உள்நோக்கம் கொண்டது. அவசரம், அவசரமாக அதுவும் உயர்நீதிமன்ற விடுமுறைகால குறிப்பிட்ட அமர்வில் இந்த வழக்கு விசாரணைக்கு வரும் வகையில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கு விசாரணையை உச்ச நீதிமன்றத்துக்கு மாற்றக்கோரி தமிழக அரசு சார்பில் மனு தாக்கல் செய்திருக்கும் விவரத்தை சம்பந்தப்பட்ட அமர்வில் தெரிவித்த பின்னரும் இடைக்காலத்தடை விதித்திருப் பது ஒருதலைபட்சமானது.

    தமிழக அரசின் சட்டங்களுக்கு தடை கோரும் இந்த வழக்கில் தமிழக அரசு தரப்பில் பதிலளிக்க போதுமான கால அவகாசம் தராமல் விடுமுறை கால அமர்வில் அவசரகதியில் விசாரிக்க வேண்டிய அவசியமே இல்லாதபோது இடைக்காலத்தடை விதித்து இருப்பதுஅநீதியாகும்.

    இந்த வழக்கைத் தொடர்ந்த குட்டி என்ற வெங்கடாச்சலபதி ஏப்ரல் 11 முதல் மே 9-ம் தேதி வரை எந்த அவசரமும் காட்டவில்லை. ஆனால் மே இரண்டாவது வாரத்தில் விசாரணைக்கு வரும் வகையில் அவசர வழக்கு எனக்கூறி தாக்கல் செய்கிறார். அதை நீதிமன்றமும் ஏற்றுக்கொண்டு விசாரித்து உத்தரவு பிறப்பி்த்து இருப்பது புரியாத புதிராக உள்ளது.

    இந்த வழக்கு விசாரணையை தள்ளி வைக்கக்கோரி தமிழக அரசு தரப்பில் எவ்வளவோ போராடியும் அந்த அமர்வு எங்கள் தரப்பு வாதத்தை ஏற்றுக்கொள்ளவில்லை. தமிழக அரசின் சட்டங்களை விட பல்கலைக்கழக மானியக் குழுவின் விதி மேலானது எனக்கூறி இடைக்காலத் தடை விதித்து இருப்பது சட்ட விரோதமானது. கடந்த 2 ஆண்டுகளாக தமிழக பல்கலைக்கழகங்களில் துணைவேந்தர் நியமனம் தள்ளிப்போகும் சூழலில் சென்னை உயர் நீதிமன்ற விடுமுறை காலஅமர்வு பிறப்பித்துள்ளஇடைக்கால தடையை நீக்கி உத்தரவிட வேண்டும் என அதில் கோரப்பட்டுள்ளது.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    மாநிலம்

    ஓசூர் முதலீட்டாளர்கள் மாநாட்டில் முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் ரூ.24,307 கோடி முதலீடுக்கு ஒப்பந்தங்கள்

    September 12, 2025
    மாநிலம்

    16 குற்றச்சாட்டுகளுக்கு விளக்கம் அளிக்க தவறியதால் பாமகவில் இருந்து அன்புமணி நீக்கம்: கட்சியின் நிறுவனர் ராமதாஸ் அறிவிப்பு

    September 12, 2025
    மாநிலம்

    மதுரை மேயர் இந்திராணியை ஓரங்கட்டும் அமைச்சர் பழனிவேல் தியாகராஜன்!

    September 12, 2025
    மாநிலம்

    இமானுவேல் சேகரன் மணிமண்டபம் இன்னும் 2 மாதங்களில் திறக்கப்படும்: உதயநிதி ஸ்டாலின்

    September 12, 2025
    மாநிலம்

    பழனிசாமியிடம் முறையீடு: திமுக ஆட்சி மீது திண்டுக்கல் வர்த்தகர்கள் அதிருப்தி ஏன்?

    September 12, 2025
    மாநிலம்

    திமுக முப்பெரும் விழா தேர்தல் திருப்புமுனையாக இருக்கும்: அமைச்சர் கே.என்.நேரு

    September 12, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • ஓசூர் முதலீட்டாளர்கள் மாநாட்டில் முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் ரூ.24,307 கோடி முதலீடுக்கு ஒப்பந்தங்கள்
    • மாரடைப்பு ஆபத்து: ஜிம்மைத் தொடங்கவா? இளைஞர்களிடையே மாரடைப்பு அபாயத்தைக் குறைக்க இருதயநோய் நிபுணர் ஐந்து சோதனைகளை பரிந்துரைக்கிறார்
    • 16 குற்றச்சாட்டுகளுக்கு விளக்கம் அளிக்க தவறியதால் பாமகவில் இருந்து அன்புமணி நீக்கம்: கட்சியின் நிறுவனர் ராமதாஸ் அறிவிப்பு
    • இதய நோய் அபாயத்தை உயர்த்தும் மற்றும் உங்கள் ஆரோக்கியத்திற்கு ஆபத்தானதாக இருக்கும் எண்ணெய்கள் | – தி டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • மதுரை மேயர் இந்திராணியை ஓரங்கட்டும் அமைச்சர் பழனிவேல் தியாகராஜன்!

    Recent Comments

    No comments to show.

    Archives

    • September 2025
    • August 2025
    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.