Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Tuesday, October 7
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»மாநிலம்»தீர்ப்பு குறித்து சமூக வலைதளங்களில் விமர்சனம்: ‘எதையும் சிரித்துக்கொண்டே கடக்க வேண்டும்’ – நீதிபதி செந்தில்குமார் ஆதங்கம்
    மாநிலம்

    தீர்ப்பு குறித்து சமூக வலைதளங்களில் விமர்சனம்: ‘எதையும் சிரித்துக்கொண்டே கடக்க வேண்டும்’ – நீதிபதி செந்தில்குமார் ஆதங்கம்

    adminBy adminOctober 7, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    தீர்ப்பு குறித்து சமூக வலைதளங்களில் விமர்சனம்: ‘எதையும் சிரித்துக்கொண்டே கடக்க வேண்டும்’ – நீதிபதி செந்தில்குமார் ஆதங்கம்
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    சென்னை: ‘வழக்கை விசா​ரித்து தீர்ப்​பளித்​தால் நீதிப​தி​கள், அவர்களின் குடும்​பத்​தினரின் பின்​புலத்தை சமூக வலை​தளங்​களில் கடுமை​யாக விமர்​சிக்​கின்​றனர், எதை​யும் சிரித்​துக்​கொண்டே கடந்​து​விட வேண்​டும்’ என சென்னை உயர் நீதி​மன்ற நீதிபதி என்​. செந்​தில்​கு​மார் ஆதங்​கம் தெரி​வித்​துள்​ளார்.

    பிரபல சமையல் கலைஞ​ரான மாதம்​பட்டி ரங்​க​ராஜ் தன்னை திரு​மணம் செய்து கொள்​வ​தாகக் கூறி ஏமாற்​றி​விட்​ட​தாக, கர்ப்பிணி​யான ஆடை வடிவ​மைப்​பாளர் ஜாய் கிரிசில்டா போலீ​ஸில் புகார் அளித்​துள்​ளார். மாதம்​பட்டி ரங்​க​ராஜைக் கடுமையாக விமர்​சித்து சமூக வலை​தளங்​களி​லும் அவர் பதி​விட்டு இருந்​தார்.

    இந்​நிலை​யில் தன்​னைப் பற்றி சமூக வலை​தளங்​களி்ல் பதி​விட, பேட்​டியளிக்க தடை விதிக்​கக் கோரி​யும், ஏற்​கெனவே வெளியிடப்​பட்​டுள்ள வீடியோக்​களை அகற்​றக் கோரி​யும் மாதம்​பட்டி ரங்​க​ராஜ், சென்னை உயர் நீதி​மன்​றத்​தில் வழக்கு தொடர்ந்திருந்​தார். இந்த வழக்கு நீதிபதி என்​. செந்​தில்​கு​மார் முன்​பு நேற்று விசா​ரணைக்கு வந்​தது.

    அப்​போது மாதம்​பட்டி ரங்​க​ராஜ் தரப்​பில் ஆஜரான வழக்​கறிஞர் விஜயன் சுப்​பிரமணி​யன், “மாதம்​பட்டி ரங்​க​ராஜுக்கு கடந்த 2013-ம் ஆண்டு ஸ்ருதி என்​பவருடன் திரு​மண​மாகி 2 மகன்​கள் உள்​ளனர். ஆடை வடிவ​மைப்​பாள​ரான ஜாய் கிரிசில்​டாவுக்கு இந்த உண்​மை​கள் அனைத்​தும் தெரி​யும்.

    தெரிந்​து​தான் ரங்​க​ராஜுடன் அவர் பழகி வந்​துள்​ளார். இப்​போது தொழில்​ ரீ​தி​யாக பிரச்​சினை ஏற்​பட்​டதும் ரங்​க​ராஜ் தன்னை ஏமாற்றி விட்​ட​தாகக்​கூறி 100-க்​கும் மேற்​பட்ட யூடியூப் சேனல்​களுக்கு பேட்​டியளித்து அவதூறு பரப்பி வரு​கிறார். இதனால் மாதம்​பட்டி ரங்​க​ராஜின் தனிமனித ஆளுமை உரிமை​கள் பாதிக்​கப்​பட்​டு, நற்​பெயருக்​கும் களங்​கம் ஏற்​பட்​டுள்​ளது” என்​றார்.

    பதி​லுக்கு ஜாய் கிரிசில்டா தரப்​பில் ஆஜரான மூத்த வழக்​கறிஞர் எஸ்​.பிர​பாகரன், இந்த வழக்​கில் தனக்​காக நியா​யம் கேட்டு ஜாய் கிரிசில்டா சட்​டப்​போ​ராட்​டம் நடத்தி வரு​வ​தாக​வும், இதில் பதில்​மனு தாக்​கல் செய்​வ​தாக​வும் கூறினார். அப்​போது நீதிப​தி, “ஒரு வழக்கை விசா​ரித்து தீர்ப்​பளித்​தால் நீதிப​தி​கள் மற்​றும் அவர்​களின் குடும்​பத்​தினரின் பின்​புலத்தை சமூக வலை​தளங்களில் கடுமை​யாக விமர்​சிக்​கின்​றனர்.

    இஷ்டம்​போல எதிர்​மறை​யான விஷ​யங்​களை​யும், பழைய சம்​பவங்​களை​யும் தேடிப்​பிடித்து கலர்​சா​யம் பூசி சமூக வலைதளங்களில் பதி​விடு​கின்​றனர். எதை​யும் கண்​டு ​கொள்​ளாமல் சிரித்​துக்​கொண்டே கடக்க வேண்​டும். சமூகத்​தில் யார் மீதும் குற்றம்​ சாட்​டு​வது இயல்​பாகி விட்​டது” என ஆதங்​கம் தெரி​வித்​தார். பின்​னர் மாதம்​பட்டி ரங்​க​ராஜ் தொடர்​பான வழக்​கில் எதிர்​மனு​தா​ரர் தரப்​பில் பதிலளிக்க உத்​தர​விட்டு விசா​ரணையை அக்​.22-க்கு தள்ளிவைத்​துள்​ளார்.

    அப்​போது நீதி​மன்​றத்​தில் இருந்த மூத்த வழக்​கறிஞர்​களான ஸ்ரீநாத் ஸ்ரீதேவன், எஸ்​.பிர​பாகரன் மற்​றும் வழக்​கறிஞரும், காங்​கிரஸ் எம்​.பி.​யு​மானசுதா ஆகியோர், உங்​களுக்கு நாங்​கள் துணை​யாக இருப்​போம் என நீதிப​திக்கு ஆதரவு தெரி​வித்​தனர். நீதிபதி என்​.செந்​தில்​கு​மார் கடந்த சில தினங்​களுக்கு முன்​பு, கரூர் சம்​பவம் தொடர்​பான வழக்கு விசா​ரணை​யின்​போது தவெக தலை​வர் விஜய்யை கடுமை​யாக விமர்​சித்து கருத்து தெரி​வித்​திருந்​தார் என்​பது குறிப்​பிடத்​தக்​கது.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    மாநிலம்

    தேங்கிக் கிடக்கும் நெல் மூட்டைகளை உடனடியாக கொள்முதல் செய்ய வேண்டும் – அன்புமணி

    October 7, 2025
    மாநிலம்

    திமுகவில் அன்னவாசல் ஒன்றியம் 4 ஆக பிரிப்பு: விராலிமலை தொகுதியை கைப்பற்ற வியூகம்

    October 7, 2025
    மாநிலம்

    ஜெட் வேகத்தில் மாவட்டப் புள்ளியின் பதவி பறிக்கப்பட்ட கதை | உள்குத்து உளவாளி

    October 7, 2025
    மாநிலம்

    பிரேமலதா விஜயகாந்தின் தாயார் மறைவு: முதல்வர் ஸ்டாலின் இரங்கல்

    October 7, 2025
    மாநிலம்

    விவசாயிகள் தற்கொலை குறித்து ஆய்வு செய்ய தனி குழு அமைக்க வேண்டும்: விவசாயிகள் சங்கம் வலியுறுத்தல்

    October 7, 2025
    மாநிலம்

    பல்கலைக்கழகங்களில் துணைவேந்தர்களை நியமிக்க நடவடிக்கை: முதல்வருக்கு முன்னாள் துணைவேந்தர் பாலகுருசாமி கடிதம்

    October 7, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • தேங்கிக் கிடக்கும் நெல் மூட்டைகளை உடனடியாக கொள்முதல் செய்ய வேண்டும் – அன்புமணி
    • முடி வளர்ச்சியில் சந்திரனின் செல்வாக்கு: கட்டுக்கதை அல்லது மந்திரம்?
    • இருமல் மருந்து விஷமாக மாறி 16 குழந்தைகள் உயிரைப் பறித்த கொடூரம்
    • திமுகவில் அன்னவாசல் ஒன்றியம் 4 ஆக பிரிப்பு: விராலிமலை தொகுதியை கைப்பற்ற வியூகம்
    • ‘ஆரோக்கியமற்றது’ என்று தோன்றும் 6 ஆச்சரியமான உணவுகள் ஆனால் உண்மையில் சத்தானவை | – தி டைம்ஸ் ஆஃப் இந்தியா

    Recent Comments

    No comments to show.

    Archives

    • October 2025
    • September 2025
    • August 2025
    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.