Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Wednesday, December 3
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»மாநிலம்»திருவாரூர் டிஎஸ்பிக்கு எதிராக போராட்டம் நடத்த அனுமதி வழங்கக் கோரிய மனு தள்ளுபடி
    மாநிலம்

    திருவாரூர் டிஎஸ்பிக்கு எதிராக போராட்டம் நடத்த அனுமதி வழங்கக் கோரிய மனு தள்ளுபடி

    adminBy adminSeptember 10, 2025No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    திருவாரூர் டிஎஸ்பிக்கு எதிராக போராட்டம் நடத்த அனுமதி வழங்கக் கோரிய மனு தள்ளுபடி
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    சென்னை: விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தின்போது ஏற்பட்ட மோதலில், டிஎஸ்பி-க்கு எதிராக போராட்டம் நடத்த அனுமதி வழங்க கோரி இந்து முன்னணி நிர்வாகி தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

    இந்து முன்னணி அமைப்பின் சார்பில் திருவாரூர் நகர தலைவர் ஜி.செந்தில்குமார் என்பவர் தாக்கல் செய்துள்ள மனுவில், காவல்துறையின் வழிகாட்டுதல்களுடன் இந்து முன்னணி சார்பில் 36-ம் ஆண்டாக விநாயகர் சதுர்த்தி திருவிழா மற்றும் சாமி ஊர்வலம் ஆகஸ்ட் 29-ம் தேதி நடைபெற்றபோது, திருவாருர் டி.எஸ்.பி.மணிகண்டன் திட்டமிட்டு, ஊர்வலத்தினர், பக்தர்கள், சிறார்கள் உள்ளிட்ட அனைவரின் மீதும் தாக்குதல் நடத்தியதுடன், சாமி சிலை மற்றும் ஊர்வல தேரையும் சேதப்படுத்தியதாக குற்றம் சாட்டியுள்ளார்.

    எனவே டி.எஸ்.பி மணிகண்டன் மீது வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்கக் கோரிய மனுவை பரிசீலிக்காத காவல்துறையை கண்டித்தும், வழக்குப்பதிவு செய்ய வலியுறுத்தியும் திருவாரூர் ரயில் நிலையம் அருகே ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதி கோரிய விண்ணப்பத்தை நிராகரித்த உத்தரவை ரத்து செய்ய வேண்டுமென கோரிக்கை வைத்துள்ளார்.

    இந்த மனு நீதிபதி என்.சதீஷ்குமார் முன்பு விசாரணைக்கு வந்தபோது, காவல்துறை தரப்பில் அரசு வழக்கறிஞர் கே.எம்.டி.முகிலன் ஆஜராகி, விநாயகர் ஊர்வலத்திற்கு மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை அனுமதி வழங்கினாலும், இரவு 7:45 மணிக்கு தொடங்கிய ஊர்வலம் அதிகாலை 4:30 மணி வரை நீடித்ததாகவும் குறிப்பிட்டார்.

    ஊர்வலத்தை நடத்திய அனைவரும் குடிபோதையில் இருந்ததால் தகராறு ஏற்பட்டதால், அனைவரின் பாதுகாப்பையும் உறுதி செய்ய வேண்டியிருந்ததாகவும் தெரிவித்தார். சாமி சென்ற தேர் மற்றும் சிலையை காவல்துறையினர் சேதப்படுத்தியதாக கூறப்படும் குற்றச்சாட்டு முற்றிலும் தவறானது என்றும் வழக்கறிஞர் குமுதன் உறுதிபட தெரிவித்தார்.

    இதனை ஏற்றுக் கொண்ட நீதிபதி டிஎஸ்பி-க்கு எதிராக போராட்டம் நடத்த அனுமதி வழங்கக்கோரிய இந்து முன்னணி நிர்வாகி தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    மாநிலம்

    வானிலை முன்னறிவிப்பு: சென்னை உள்ளிட்ட 15 மாவட்டங்களில் நாளை கனமழைக்கு வாய்ப்பு

    December 3, 2025
    மாநிலம்

    மகிளா வங்கியை மூடிய பாஜக அரசு: ப.சிதம்பரம் குற்றச்சாட்டு

    December 3, 2025
    மாநிலம்

    “விருதுநகர் தொகுதியில் அதிமுகதான் போட்டி” – ராஜேந்திர பாலாஜி திட்டவட்டம்

    December 3, 2025
    மாநிலம்

    “பிஹார் தேர்தல் முடிவை விமர்சன கண்ணோட்டத்தோடு பார்க்க வேண்டும்” – கமல்ஹாசன் எம்.பி

    December 3, 2025
    மாநிலம்

    ‘புலி வருது, புலி வருது’ என்பது போல – ஆந்திராவுக்கு மடைமாறிய முதலீடு: நயினார் நாகேந்திரன் கிண்டல்!

    December 3, 2025
    மாநிலம்

    மேயர் இல்லாததால் மதுரை மாநகராட்சியில் திமுக – மார்க்சிஸ்ட் இடையே அதிகார மோதல்!

    December 3, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • மெலிதான வெங்காயத்தை தூக்கி எறிவதை நிறுத்துங்கள்: ஒரு எளிய தண்ணீர் தந்திரம் அவற்றை வாரக்கணக்கில் புதியதாகவும் மிருதுவாகவும் வைத்திருக்கும் | – டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • 51 மற்றும் பிரமிக்க வைக்கிறது: கஜோலின் கருப்பு புடவை தோற்றம் இணையத்தை மயக்குகிறது
    • உடல் பருமன் சிகிச்சைக்கான GLP-1 சிகிச்சைகள் குறித்த வழிகாட்டுதல்களை WHO வெளியிடுகிறது: தாக்கம், பாதுகாப்புக் கருத்தாய்வு மற்றும் யார் பயனடையலாம் என்பதைப் புரிந்துகொள்வது
    • வேலையில் நீங்கள் எப்போதும் ஊக்கமில்லாமல் இருப்பதற்கான 5 காரணங்கள் – தி டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினம் 2025: வலிமை, உரிமைகள் மற்றும் பின்னடைவைக் கொண்டாடுதல் – தி டைம்ஸ் ஆஃப் இந்தியா

    Recent Comments

    No comments to show.

    Archives

    • December 2025
    • November 2025
    • October 2025
    • September 2025
    • August 2025
    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.