Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Wednesday, September 17
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»மாநிலம்»திருவாரூர் அருகே பள்ளி குடிநீர் தொட்டியில் மலத்தை கலந்து அட்டூழியம்: போலீஸ் தீவிர விசாரணை
    மாநிலம்

    திருவாரூர் அருகே பள்ளி குடிநீர் தொட்டியில் மலத்தை கலந்து அட்டூழியம்: போலீஸ் தீவிர விசாரணை

    adminBy adminJuly 14, 2025No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    திருவாரூர் அருகே பள்ளி குடிநீர் தொட்டியில் மலத்தை கலந்து அட்டூழியம்: போலீஸ் தீவிர விசாரணை
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    திருவாரூர்: திருவாரூர் அருகே பள்ளி குடிநீர் தொட்டியில் மலம் கலந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும், சமையலறையில் இருந்த பொருட்களும் உடைத்து சேதமடைந்துள்ளது.

    திருவாரூர் அருகே, காரியாங்குடி கிராமத்தில் அரசு தொடக்கப்பள்ளி இயங்கி வருகிறது. இதில் காரியங்குடி, நெம்மேலி, இளங்கச்சேரி பகுதிகளை சேர்ந்த 60-க்கும் மேற்பட்ட மாணவ,மாணவிகள் பயின்று வருகின்றனர். இந்த நிலையில், இப்பள்ளியில் காலை உணவு திட்டத்தின் கீழ் சமைப்பதற்காக, சமையலர்கள் காலை வந்து பார்த்தபோது, சமையலறையில் இருந்த பொருட்கள் உடைத்து நொறுக்கப்பட்டிருந்தன.

    மேலும் பள்ளியில் உள்ள மாணவர்கள் குடிநீர் அருந்தும் பிளாஸ்டிக் குடிநீர் தொட்டியின் மேல் தட்டை உடைத்து, அதில் மலத்தை கொட்டி வைத்துள்ளனர். குடிநீர் குழாயை உடைத்துள்ளனர். மேலும் பள்ளி வளாகத்தில் இருந்த வாழை மரங்கள் சேதப்படுத்தப்பட்டுள்ளன. தென்னை மரங்களில் இருந்த தேங்காய்கள் பறிக்கப்பட்டுள்ளன. இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த ஊழியர்கள், உடனடியாக பள்ளி தலைமையாசிரியருக்கு தகவல் கொடுத்ததோடு, ஊர் மக்களுக்கும் தெரியப்படுத்தினர்.

    இதனால் பள்ளி முன்பு திரண்ட பெற்றோர்கள், பொதுமக்கள் குற்றவாளிகளை உடனடியாக பிடிக்க வேண்டுமென, போலீஸாருக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர். இது குறித்து திருவாரூர் தாலுக்கா காவல் நிலைய போலீஸார் வழக்கு பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இந்தப்பள்ளியில் அனைத்து சமூகத்தை சேர்ந்த மாணவர்களும் படித்து வருவதால், இதில் சாதிய பிரச்சினை ஏதுமில்லை, குடிபோதை ஆசாமிகள்தான், இதனை செய்துள்ளார்கள் என்பதை போலீஸார் முதல்கட்ட தகவலாக தெரிவித்துள்ளனர்.மேலும் 3 பேரை பிடித்து விசாரித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த சம்பவம் திருவாரூர் மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    மாநிலம்

    ‘இந்து தமிழ் திசை’ நாளிதழ் 13-ம் ஆண்டு தொடக்கம்: முதல்வர், அரசியல் கட்சித் தலைவர்கள் வாழ்த்து

    September 17, 2025
    மாநிலம்

    தேர்தலில் மாற்றுத் திறனாளிகள் எளிதாக வாக்களிக்க பிரத்யேக வசதி: சட்டரீதியாக உறுதி செய்ய உயர் நீதிமன்றம் உத்தரவு

    September 17, 2025
    மாநிலம்

    இந்திய குடியரசு கட்சி மாநிலத் தலைவர் பி.வி.கரியமால் காலமானார்

    September 17, 2025
    மாநிலம்

    என்எஸ்எஸ் சிறப்பு முகாமுக்கு வழிகாட்டு விதிகள்: பள்ளிக்கல்வித் துறை வெளியீடு

    September 17, 2025
    மாநிலம்

    திருமண மண்டபம் கட்ட பக்தர்கள் நன்கொடை தரவில்லை: தமிழக அரசின் மேல்முறையீட்டு வழக்கில் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் கருத்து

    September 17, 2025
    மாநிலம்

    தெற்​காசி​யா​விலேயே தமிழகம் முன்​னேறிய மாநில​மாகும்: கிருஷ்ணகிரி அரசு விழா​வில் முதல்​வர் ஸ்டா​லின் உறுதி

    September 17, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • இந்திய வம்சாவளியைச் சேர்ந்த படக் யூனிலீவரின் நிதித் தலைவர் – தி டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • பிஹார் தேர்தலை முன்னிட்டு மாணவர்களுக்கு கல்வி கடன் வட்டி தள்ளுபடி: முதல்வர் நிதிஷ் குமார் அறிவிப்பு
    • சீனா மாஸ்டர்ஸ் பாட்மிண்டன்: முதல் சுற்றில் பி.வி.சிந்து வெற்றி
    • ‘ரூ.1.65 கோடி தருவதாகச் சொன்னார்கள்’ – பிக் பாஸை மறுத்த தனுஸ்ரீ தத்தா
    • ‘இந்து தமிழ் திசை’ நாளிதழ் 13-ம் ஆண்டு தொடக்கம்: முதல்வர், அரசியல் கட்சித் தலைவர்கள் வாழ்த்து

    Recent Comments

    No comments to show.

    Archives

    • September 2025
    • August 2025
    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.