Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Sunday, September 14
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»மாநிலம்»திருவாரூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் இதயம், மூளை நரம்பியல் சிகிச்சை கிடைக்காமல் அவதி!
    மாநிலம்

    திருவாரூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் இதயம், மூளை நரம்பியல் சிகிச்சை கிடைக்காமல் அவதி!

    adminBy adminJuly 10, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    திருவாரூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் இதயம், மூளை நரம்பியல் சிகிச்சை கிடைக்காமல் அவதி!
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    திருவாரூர்: திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் இதயம் மற்றும் மூளை நரம்பியல் பிரிவுகளில் தலா ஒரு மருத்துவர் மட்டுமே பணியாற்றுவதால், நோயாளிகள் சிகிச்சை கிடைக்காமல் திண்டாடி வருகின்றனர்.

    திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையை முன்னாள் முதல்வர் கருணாநிதி 2010-ம் ஆண்டு ஏப்.1-ம் தேதி தொடங்கிவைத்தார். 500 படுக்கை வசதிகளுடன் தொடங்கப்பட்ட இந்த மருத்துவமனையில் தற்போது, 850 படுக்கை வசதிகள் உள்ளன. இதில், திருவாரூர், நாகை மாவட்டங்களைச் சேர்ந்த 1,500-க்கும் மேற்பட்ட புறநோயாளிகள் சிகிச்சை பெற்று செல்கின்றனர்.

    இந்நிலையில், இந்த மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் இதய நோய் மற்றும் மூளை நரம்பியல் பிரிவில் மருத்துவம் மற்றும் அறுவை சிகிச்சை பிரிவுகள் இயங்கி வருகின்றன. ஆனால், இதய நோய்க்கு அறுவை சிகிச்சை மருத்துவர் இல்லை. ஒரு இதய மருத்துவ சிகிச்சை நிபுணர் மட்டுமே உள்ளார். மூளை நரம்பியலில் அறுவை சிகிச்சை மருத்துவர் உள்ளார். சிகிச்சை அளிக்க மருத்துவர் இல்லை. சிறுநீரக நோய் பிரிவில் மருத்துவம் மற்றும் அறுவை சிகிச்சை பிரிவில் தலா ஒரு மருத்துவர் மட்டுமே உள்ளனர்.

    இதனால், இதயம் மற்றும் மூளை நரம்பியல் பிரிவில் முழுமையான சிகிச்சை நோயாளிகளுக்கு கிடைக்காததால், தஞ்சை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பரிந்துரை செய்யும் நிலை உள்ளது. குறிப்பாக, இதய நோய்க்கு அவசர சிகிச்சை அளிக்கப்பட வேண்டிய நிலையில், பணியில் உள்ள மருத்துவர்களை கொண்டு நோயாளிகளுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு, தஞ்சாவூருக்கு ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பிவைக்கப்படுகின்றனர். இதனால், ஏற்படும் காலதாமதத்தால் பல்வேறு உயிரிழப்புகள் நிகழ்கின்றன.

    எனவே, இந்த பிரிவுகளில் கூடுதல் மருத்துவர்களை நியமிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும், மன்னார்குடி, திருத்துறைப்பூண்டி அரசு மருத்துவமனைகளில் வாரம் ஒருமுறை இதய நோய், மூளை நரம்பியல், சிறுநீரகப் பிரிவு மருத்துவர்களை அனுப்பிவைத்து மருத்துவ ஆலோசனைகள், மாத்திரைகள் கிடைக்க செய்ய வேண்டும் எனவும் எதிர்பார்த்துள்ளனர்.

    இதுகுறித்து திருவாரூர் மாவட்ட இந்தியன் ரெட்கிராஸ் சொசைட்டி மாவட்டச் செயலாளர் வரதராஜன் கூறியதாவது: திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரியில் உயர் சிறப்பு மருத்துவத்துக்கான(சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவம்) முதுநிலை மருத்துவப் படிப்பு தொடங்கப்படவில்லை.

    இதனால், மூளை நரம்பியல் மற்றும் சிறுநீரகம் தொடர்பாக சிகிச்சை அளிக்க தலா ஒரு மருத்துவர் மட்டுமே நியமிக்கப்பட்டுள்ளனர். எனவே, திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரியில் அனைத்து உயர் சிறப்பு மருத்துவத்துக்கான முதுநிலை படிப்புகளையும் தொடங்க வேண்டும்.

    அவ்வாறு தொடங்கினால், பேராசிரியர்கள் மற்றும் உதவிப் பேராசிரியர்கள், முதுநிலை மாணவர்கள் என கூடுதல் மருத்துவர்கள் கிடைப்பார்கள். முதல்வர் ஸ்டாலின் இன்று திருவாரூரில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில், கூடுதல் மருத்துவர் நியமனம் தொடர்பான அறிவிப்பை வெளியிடுவார் என நம்புகிறோம். இல்லாவிட்டாலும், இந்த கோரிக்கை குறித்து ஆய்வு செய்து விரைவாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    மாநிலம்

    இளைஞருக்கு விதிக்கப்பட்ட 20 ஆண்டு சிறை தண்டனை ரத்து – போக்சோ வழக்கில் நடந்தது என்ன?

    September 14, 2025
    மாநிலம்

    ‘அன்புக் கரங்கள் திட்டம்’ : நாளை தொடங்கி வைக்கிறார் முதல்வர் ஸ்டாலின்!

    September 14, 2025
    மாநிலம்

    உயர்கல்வித்துறையை சீரழித்தது தான் திமுக அரசின் சாதனை – அன்புமணி கடும் தாக்கு

    September 14, 2025
    மாநிலம்

    பெரம்பலூர் வர இயலாததற்கு வருந்துகிறேன் – விஜய்

    September 14, 2025
    மாநிலம்

    அண்ணா பிறந்தநாள்: திருவுருவச் சிலைக்கு மாலை அணிவிக்கிறார் முதல்வர் ஸ்டாலின்!

    September 14, 2025
    மாநிலம்

    இலங்கை தமிழர்கள் இன்னும் அகதிகளாக இருப்பதை எவ்வகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாது! – இலங்கை அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் நேர்காணல்

    September 14, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • இளைஞருக்கு விதிக்கப்பட்ட 20 ஆண்டு சிறை தண்டனை ரத்து – போக்சோ வழக்கில் நடந்தது என்ன?
    • இந்திய ரூபாய் குறிப்புகளை கவனிக்க நீங்கள் தவறவிட்ட 6 யுனெஸ்கோ நினைவுச்சின்னங்கள்; சிவப்பு கோட்டை, எல்லோரா குகைகள் மற்றும் பல
    • ”நயன்தாரா வந்தால் இதைவிட இரண்டு மடங்கு கூட்டம் வரும்” – விஜய்யை சீண்டிய சீமான்
    • முறிந்த எலும்புகளை மூன்றே நிமிடத்தில் ஒட்ட வைக்கும் பசை: சீன விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு
    • ‘அன்புக் கரங்கள் திட்டம்’ : நாளை தொடங்கி வைக்கிறார் முதல்வர் ஸ்டாலின்!

    Recent Comments

    No comments to show.

    Archives

    • September 2025
    • August 2025
    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.