Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Tuesday, July 15
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»மாநிலம்»திருவள்ளூர் ரயில் விபத்து: 4 பாதைகளிலும் இயல்பு நிலைக்குத் திரும்பிய ரயில் சேவை
    மாநிலம்

    திருவள்ளூர் ரயில் விபத்து: 4 பாதைகளிலும் இயல்பு நிலைக்குத் திரும்பிய ரயில் சேவை

    adminBy adminJuly 15, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    திருவள்ளூர் ரயில் விபத்து: 4 பாதைகளிலும் இயல்பு நிலைக்குத் திரும்பிய ரயில் சேவை
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    திருவள்ளூர்: திருவள்ளூர் ரயில் நிலையம் அருகே சரக்கு ரயிலில் தீ விபத்து ஏற்பட்ட பகுதியில் 4 ரயில் பாதைகளிலும் சீரமைப்பு பணிகள் நிறைவு பெற்றுள்ளன. இதனால், ரயில் சேவை இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளது.

    சென்னை துறைமுகத்தில் இருந்து, 50 டேங்கர்களில் பெட்ரோல், டீசல் நிரப்பிக் கொண்டு நேற்று முன் தினம் அதிகாலை சென்று கொண்டிருந்த சரக்கு ரயில், திருவள்ளூர் ரயில் நிலையம் அருகே தடம்புரண்டு விபத்துக்குள்ளானது. இதனால், பயங்கர தீ விபத்து ஏற்பட்டு 18 டேங்கர்கள் எரிந்து நாசமாயின.

    இதனால், சென்னை சென்ட்ரல்-அரக்கோணம் இடையே ரயில்களின் சேவை நேற்று முன் தினம் நிறுத்தப்பட்டது. தீயணைப்பு வீரர்கள் சுமார் 11 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். தொடர்ந்து, சேதமடைந்த ரயில் பாதைகள் மற்றும் மேல்நிலை மின் கம்பங்கள், மின் கம்பிகள் ஆகியவற்றை சீரமைக்கும் பணி தொடங்கியது.

    4-வது ரயில் பாதையில் சீரமைப்பு பணி முடிவுக்கு வந்து, நேற்று முன் தினம் இரவு விரைவு ரயில் சேவை தொடங்கியது. 3-வது ரயில் பாதையில் சீரமைப்பு பணி நேற்று காலை நிறைவு பெற்று, காலை 7 மணி முதல் புறநகர் மின்சார ரயில்கள் சேவை தொடங்கியது.

    விரைவு ரயில் பாதைகளான 1 மற்றும் 2-வது ரயில் பாதைகளில் இருந்த, தீக்கிரையான டேங்கர்கள் அப்புறப்படுத்தப்பட்டு, அப்பாதைகள் மற்றும் மேல்நிலை மின்கம்பங்கள், மின் கம்பிகள் சீரமைக்கும் பணி நேற்று தீவிரமாக நடைபெற்றது. இதில், விரைவு ரயில் பாதைகள் இரண்டிலும் தலா சுமார் அரை கி.மீ., தூரத்துக்கு தண்டவாளங்கள் கடுமையாக சேதமடைந்ததால், அத்தண்டவாளங்களை மாற்றும் பணி மற்றும் புதிய மின் கம்பங்கள், மின் கம்பிகளை மாற்றும் பணியில், 4 ஜேசிபி இயந்திரங்கள், 2 கிரேன்கள் சகிதம் ரயில்வே ஊழியர்கள் சுமார் 400 பேர் ஈடுபட்டனர்.

    இப்பணியில், நேற்று மாலை 4.45 மணியளவில் 3-வது ரயில் பாதை சீரமைப்பு பணி நிறைவு பெற்றது. 4-வது ரயில் பாதை சீரமைப்பு பணி தொடர்ந்து நடைபெற்ற நிலையில், இடை இடையே மழை பெய்ததால், அப்பணியில் தொய்வு ஏற்பட்டது. இதனால், இன்று அதிகாலை 2.55 மணியளவில் 4-வது ரயில் பாதை சீரமைப்பு பணி நிறைவு பெற்றது. ஆகவே, 46 மணி நேரம் நடைபெற்ற ரயில் பாதைகள் சீரமைப்பு பணிக்குப் பிறகு, திருவள்ளூர்- அரக்கோணம் இடையே 4 வழித்தடங்களிலும் மின்சாரம் மற்றும் விரைவு ரயில், சரக்கு ரயில் சேவை இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளது.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    மாநிலம்

    “தவறு செய்பவர்கள் யாராக இருந்தாலும் நடவடிக்கை” – செந்தில் பாலாஜி உறுதி

    July 15, 2025
    மாநிலம்

    வானிலை முன்னறிவிப்பு: கோவை, நீலகிரியில் 5 நாட்களுக்கு மிக கனமழை வாய்ப்பு

    July 15, 2025
    மாநிலம்

    கொள்ளிடம் ஆற்று நீர் பயன்பாடு விவகாரம்: அறிக்கை தாக்கல் செய்ய அரசுக்கு ஐகோர்ட் உத்தரவு

    July 15, 2025
    மாநிலம்

    குறிஞ்சிப்பாடி அருகே காலணி தொழிற்பூங்கா; 12,000 பெண்களுக்கு வேலைவாய்ப்பு – முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு

    July 15, 2025
    மாநிலம்

    ”பொதுமக்கள் அளிக்கும் மனுக்கள் அப்படியே உள்ளன” – அதிகாரிகள் மீது துரைமுருகன் ஆதங்கம்

    July 15, 2025
    மாநிலம்

    அமெரிக்கா செல்ல அனுமதி கோரி செந்தில் பாலாஜியின் சகோதரர் மனு: அமலாக்கத் துறைக்கு ஐகோர்ட் உத்தரவு

    July 15, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • மீண்டும் இணையும் ‘பிளாக்’ படக்குழு
    • “தவறு செய்பவர்கள் யாராக இருந்தாலும் நடவடிக்கை” – செந்தில் பாலாஜி உறுதி
    • இந்தியாவில் டெஸ்லாவின் முதல் ஷோரூம்: மும்பையில் திறந்து வைத்தார் தேவேந்திர பட்னாவிஸ்
    • ஃபால்சாவின் சிறந்த ஆரோக்கிய நன்மைகள்: வெப்பத்தை வெல்ல 6 குளிரூட்டும் சமையல், நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்துதல் மற்றும் சிறுநீர் நோய்த்தொற்றுகளைத் தணித்தல் | – டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • சஞ்சய் தத் பேசிய விவகாரம்: லோகேஷ் கனகராஜ் பதில்

    Recent Comments

    No comments to show.

    Archives

    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.