Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Tuesday, July 8
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»மாநிலம்»திருவள்ளூர் | தெப்பக் குளத்தில் தவறி விழுந்து வேத பாடசாலை மாணவர்கள் 3 பேர் உயிரிழப்பு
    மாநிலம்

    திருவள்ளூர் | தெப்பக் குளத்தில் தவறி விழுந்து வேத பாடசாலை மாணவர்கள் 3 பேர் உயிரிழப்பு

    adminBy adminMay 6, 2025No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    திருவள்ளூர் | தெப்பக் குளத்தில் தவறி விழுந்து வேத பாடசாலை மாணவர்கள் 3 பேர் உயிரிழப்பு
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    திருவள்ளூர்: திருவள்ளூர் வீரராகவபெருமாள் கோயில் தெப்பக் குளத்தில் தவறி விழுந்து, சேலையூர் வேத பாடசாலை மாணவர்கள் 3 பேர் உயிரிழந்த சம்பவம், பக்தர்கள், பொதுமக்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    திருவள்ளூரில் உள்ள பிரசித்தி பெற்ற வீரராகவபெருமாள் கோயிலில் தற்போது சித்திரை பிரம்மோற்சவ விழா நடைபெற்று வருகிறது. இந்த விழாவில், செங்கல்பட்டு மாவட்டம், சேலையூர் பகுதியில் உள்ள மடம் ஒன்றில் உள்ள வேத பாடசாலை மாணவர்களான ஹரிஹரன்(16), வெங்கட்ராமன்(17), வீரராகவன்(24) ஆகிய 3 பேர் வேத பாராயணம் படித்து வந்தனர்.

    இந்நிலையில், ஹரிஹரன், வெங்கட்ராமன், வீரராகவன் ஆகிய 3 பேரும் இன்று (மே 6) காலை வீரராகவபெருமாள் கோயில் தெப்பக் குளத்தின் படிக்கட்டுகளில் நீரில் நின்றவாறு சந்தியா வதனம் செய்து கொண்டிருந்தனர். இதில் ஒரு மாணவர், தெப்பக் குளத்தினுள் தவறி விழுந்து நீரில் மூழ்கினார். இதனை கண்ட மற்ற இரு மாணவர்கள், நீரில் மூழ்கிய மாணவரை காப்பாற்ற குளத்தில் குதித்தபோது, அவர்களும் நீரில் மூழ்கினர்.

    இதுகுறித்து, தகவலறிந்த திருவள்ளூர் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடம் விரைந்து குளத்தில் மூழ்கிய வேதபாட சாலை மாணவர்களை தேடும் பணியில் ஈடுபட்டு, 3 மாணவர்களை சடலங்களாக மீட்டனர். தொடர்ந்து, திருவள்ளூர் டவுன் போலீஸார், 3 மாணவர்களின் உடல்களை பிரேத பரிசோதனைக்காக திருவள்ளூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து, போலீஸார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    மாநிலம்

    கடலூர் ரயில் விபத்துக்கு மாவட்ட நிர்வாகம்தான் காரணமா? – முதல்வர் பதிலளிக்க பாஜக வலியுறுத்தல்

    July 8, 2025
    மாநிலம்

    ராமதாஸ் Vs அன்புமணி: பாமக போட்டிக் கூட்டங்களின் தீர்மானங்கள் என்னென்ன?

    July 8, 2025
    மாநிலம்

    நீதிமன்ற அவமதிப்பு வழக்கு: சென்னை மாநகராட்சி ஆணையருக்கு உயர் நீதிமன்றம் ரூ.1 லட்சம் அபராதம்

    July 8, 2025
    மாநிலம்

    காவல் நிலைய மரணங்களை தடுக்க தமிழக காவல் துறையில் சீர்திருத்தம் தேவை: கார்த்தி சிதம்பரம்

    July 8, 2025
    மாநிலம்

    ஆம்பூர் துப்பாக்கி பறிமுதல் விவகாரம்: என்ஐஏ விசாரணைக்கு தமிழக பாஜக வலியுறுத்தல்

    July 8, 2025
    மாநிலம்

    செல்வப்பெருந்தகைக்கு அநீதி இழைத்து சமூக பாகுபாடு: முத்தரசன் குற்றச்சாட்டு

    July 8, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • விஜய் தேவரகொண்டாவின் ‘கிங்டம்’ ஜூலை 31-ல் ரிலீஸ்
    • கடலூர் ரயில் விபத்துக்கு மாவட்ட நிர்வாகம்தான் காரணமா? – முதல்வர் பதிலளிக்க பாஜக வலியுறுத்தல்
    • தமிழில் அறிமுகம் ஆகிறார் ‘கோர்ட்’ நாயகி!
    • ராமதாஸ் Vs அன்புமணி: பாமக போட்டிக் கூட்டங்களின் தீர்மானங்கள் என்னென்ன?
    • நீதிமன்ற அவமதிப்பு வழக்கு: சென்னை மாநகராட்சி ஆணையருக்கு உயர் நீதிமன்றம் ரூ.1 லட்சம் அபராதம்

    Recent Comments

    No comments to show.

    Archives

    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.