Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Tuesday, August 12
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»மாநிலம்»திருவனந்தபுரத்தில் இருந்து 5 எம்பிக்கள் உட்பட 150 பயணிகளுடன் டெல்லி சென்ற விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு: சென்னையில் அவசரமாக தரையிறக்கம்
    மாநிலம்

    திருவனந்தபுரத்தில் இருந்து 5 எம்பிக்கள் உட்பட 150 பயணிகளுடன் டெல்லி சென்ற விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு: சென்னையில் அவசரமாக தரையிறக்கம்

    adminBy adminAugust 12, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    திருவனந்தபுரத்தில் இருந்து 5 எம்பிக்கள் உட்பட 150 பயணிகளுடன் டெல்லி சென்ற விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு: சென்னையில் அவசரமாக தரையிறக்கம்
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    சென்னை: ​திரு​வனந்​த​புரத்​தில் இருந்து 5 எம்​பிக்​கள் உட்பட 150 பயணி​களு​டன் டெல்​லிக்கு புறப்​பட்ட விமானத்​தில் தொழில்​நுட்பக் கோளாறு ஏற்​பட்​ட​தால் சென்​னை​யில் அவசர​மாக தரை​யிறக்​கப்​பட்​டது. விமானி​யின் திறமை​யால் உயிர் பிழைத்​த​தாக காங்​கிரஸ் எம்பி வேணுகோ​பால் தெரி​வித்​தார்.

    கேரள மாநிலம், திரு​வனந்​த​புரத்​தில் இருந்து டெல்லி செல்​லும் ஏர் இந்​தியா பயணி​கள் விமானம் நேற்று முன்​தினம், இரவு 8.17 மணிக்கு புறப்​பட்​டது. அந்த விமானத்​தில் எம்பி வேணுகோ​பால், கொடி குன்​னில் சுரேஷ், அடூர்பிர​காஷ், கே.​ரா​தாகிருஷ்ணன் உட்பட 5 எம்​பிக்​கள் மற்​றும் 150 பயணி​கள் இருந்​தனர்.

    இரவு 10 மணி​யள​வில் விமானம் நடு​வானில் பறந்து கொண்​டிருந்த போது, விமானத்​தில் திடீரென தொழில்​நுட்பக் கோளாறு ஏற்பட்டது. விமானத்தை அவசர​மாக தரை​யிறக்க முடிவு செய்த விமானி, திரு​வனந்​த​புரம் மற்​றும் டெல்​லி​யில் உள்ள விமான கட்டுப்​பாட்டு அறை​களு​டன் தொடர்பு கொண்டு தகவலை தெரி​வித்​தார்.

    சென்னை விமான நிலை​யத்​தில் விமானத்தை தரை​யிறக்​கு​மாறு விமானிக்கு உத்​தரவு பிறப்​பிக்​கப்​பட்​டது. இதையடுத்​து, சென்னை விமான நிலை​யத்​தில் விமானம் அவசர​மாக தரை​யிறங்​கு​வதற்​கான பாது​காப்பு ஏற்​பாடு​கள் செய்​யப்​பட்​டதையடுத்​து, இரவு 11.20 மணி​யள​வில் விமானம் சென்​னை​யில் பத்​திர​மாக தரை​யிறக்​கப்​பட்​டது.

    பின்னர், நேற்று அதி​காலை 1 மணி​யள​வில் மாற்று விமானம் மூலம் 5 எம்​பிக்கள் உட்பட 150 பயணி​களும் டெல்லி சென்​றனர். விமானத்​தில் ஏற்​பட்ட தொழில்​நுட்பக் கோளாறை விமானி சரி​யான நேரத்​தில் கண்​டு​பிடித்​த​தால் 5 எம்​பிக்​களும், 150 பயணிகளும் உயிர் தப்​பினர், விசா​ரணை நடத்த வலி​யுறுத்​தல் காங்​கிரஸ் எம்பி வேணுகோ​பால் தனது எக்ஸ் வலை​தளப்​ப​தி​வில், “திரு​வனந்​த​புரம் விமான நிலை​யத்​தில் இருந்து டெல்லி புறப்​பட்ட விமானத்​தில் சிக்​னல் கோளாறு ஏற்​பட்​டதையடுத்​து, உடனடியாக விமானம் சென்​னைக்கு திருப்பி விடப்​பட்​டு, அங்கு தரை​யிறங்க வந்த போது, அதே ஓடு​பாதை​யில் மற்​றொரு விமானம் குறுக்​கிட்​டது.

    இதைக் கண்டு அதிர்ச்​சி​யான எங்​கள் விமானி, உடனடி​யாக தனது விமானத்தை மீண்​டும் உயரே பறக்க செய்து அனை​வரின் உயிரை​யும் காப்​பாற்​றி​னார். சென்​னை​யில் விமானம் தரை​யிறங்க அனு​மதி வழங்​கி​விட்​டு, அதே நேரத்​தில் மற்​றொரு விமானத்​துக்கு அதே ஓடு​பாதை​யில் எப்​படி அனு​மதி வழங்​கப்​பட்​டது. இதுதொடர்​பாக, டைரக்​டர் ஜெனரல் ஆஃப் சிவில் ஏவி​யேசன், சிவில் விமான போக்​கு​வரத்து துறை அமைச்​சகம் முழு விசா​ரணை நடத்த வேண்​டும்” என்று தெரி​வித்​துள்​ளார்.

    இதற்கு பதில் அளித்​த ஏர் இந்​தி​யா, “தொழில்​நுட்​பக் கோளாறு மற்​றும் மோச​மான வானிலை காரண​மாக விமானம் சென்​னைக்கு திருப்பி விடப்​பட்டது. நீங்​கள் சொல்​வது போல் சம்​பவம் நடக்​க​வில்​லை. விமானம் திருப்பிவிடப்​பட்​ட​தால் உங்​களுக்கு ஏற்​பட்ட சிரமத்​துக்கு வருந்​துகிறோம்” என்று தெரி​வித்​துள்​ளது.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    மாநிலம்

    ‘தாயுமானவர் திட்டம்’ இந்தியாவுக்கே முன்மாதிரி முயற்சி: முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்

    August 12, 2025
    மாநிலம்

    தூய்மை பணியாளர்களுக்கு எதிராக செயல்படுவதுபோல் போலி பிம்பம்: ஐகோர்ட்டில் தமிழக அரசு வாதம்

    August 12, 2025
    மாநிலம்

    ஆட்டோ, பைக் டாக்ஸி, கார் கட்டணத்துக்கு புதிய கொள்கை: தமிழக அரசு விரைவில் அறிமுகம் செய்கிறது

    August 12, 2025
    மாநிலம்

    நோயாளிகளின் விவரங்கள், ஆவணங்கள் முறையாக பராமரிக்க வேண்டும்: மருத்துவக் கல்லூரிகளுக்கு அறிவுறுத்தல்

    August 12, 2025
    மாநிலம்

    சென்னையில் 135 மின்சார ஏசி பேருந்துகள் சேவை: உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார்

    August 12, 2025
    மாநிலம்

    சட்டவிரோத வருவாயை பிரிக்கவே மாதந்தோறும் கூட்டம்: கனிமவள அதிகாரிகள் மீது நீதிபதி கடும் அதிருப்தி

    August 12, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைக்குப் பிறகு என்ன நடக்கும்? முன்னெச்சரிக்கை உதவிக்குறிப்புகள், சிக்கல்கள், மீட்பு ஆலோசனை மற்றும் பலவற்றை அறிந்து கொள்ளுங்கள் | – டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • நாடு முழுவதும் 6,115 ரயில் நிலையங்களில் மத்திய அரசு இலவச வை-ஃபை சேவை
    • ‘தாயுமானவர் திட்டம்’ இந்தியாவுக்கே முன்மாதிரி முயற்சி: முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்
    • சென்னையில் இன்று சற்றே குறைந்த தங்கம், வெள்ளி விலை
    • ஆப்பிரிக்க சாம்பல் கிளி செல்லப்பிராணியாகப் பெறுவதற்கு முன் தெரிந்து கொள்ள வேண்டிய 10 விஷயங்கள்

    Recent Comments

    No comments to show.

    Archives

    • August 2025
    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.