Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Friday, July 11
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»மாநிலம்»திருவண்ணாமலை மாநகராட்சியை கண்டித்து ஜூலை 16-ல் அதிமுக ஆர்ப்பாட்டம்
    மாநிலம்

    திருவண்ணாமலை மாநகராட்சியை கண்டித்து ஜூலை 16-ல் அதிமுக ஆர்ப்பாட்டம்

    adminBy adminJuly 10, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    திருவண்ணாமலை மாநகராட்சியை கண்டித்து ஜூலை 16-ல் அதிமுக ஆர்ப்பாட்டம்
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    சென்னை: திருவண்ணாமலை மாநகராட்சி மற்றும் அண்ணாமலையார் கோயில் நிர்வாகத்தை கண்டித்து அதிமுக சார்பில் ஜூலை 16-ம் தேதி ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.

    இது தொடர்பாக அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி வெளியிட்ட அறிக்கையில், “திருவண்ணாமலை மாநகரில் அறநிலையத் துறை, மாநகராட்சி நிர்வாகம், மாவட்ட நிர்வாகம் மற்றும் அரசுத் துறைகளின் அலட்சியத்தாலும், ஆமைவேகப் பணிகளினாலும் பக்தர்கள், வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் அனைவரும் திண்டாடுகின்றனர்.

    பக்தர்கள் தரிசனம் செய்வதற்கு முறையான வழிமுறைகளைக் கையாளாததால் அண்ணாமலையார் கோயிலுக்கு நாள்தோறும் வரும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பலமணி நேரம் காத்துக்கிடக்கும் அவலம் நிலவுகிறது. குறைந்தது 4 மணி நேரத்துக்கும் மேலாக வரிசையில் காத்திருக்கும் பக்தர்களுக்கு உணவு மற்றும் குடிநீர் வசதி ஏற்பாடு செய்யவில்லை.

    பக்தர்களின் வாகனங்களை நிறுத்துவதற்கு முறையான வசதிகள் செய்து தரப்படவில்லை. இதனால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகின்றன. ஆமை வேகத்தில் மாட வீதிகளில் சிமெண்ட் சாலைகள் அமைப்பதால் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. மாட வீதிக்கு வாகனங்கள் வரத் தடை இருக்கின்ற காரணத்தால் வியாபாரிகள் மற்றும் நடைபாதை வியாபாரிகள் கடும் நஷ்டத்தை சந்தித்து வருகின்றனர்.

    15 நாட்களுக்கு ஒருமுறை மட்டுமே குடிநீர் வழங்கப்படுவதால் கடுமையான குடிநீர் தட்டுப்பாடும் ஏற்பட்டுள்ளது. மோசமான சாலைகள், சாலைகளில் கழிவுநீர் மற்றும் குப்பைகள் தேங்கியுள்ளதால் பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் அவதிக்குள்ளாகின்றனர். திருவண்ணாமலையைச் சுற்றியுள்ள 18 கிராமங்களில் எந்தஒரு அடிப்படை வசதிகளும் இல்லாத நிலையில், அதை மாநகராட்சியுடன் இணைத்து ஏழை, எளிய மக்களிடமிருந்து கூடுதல் வரிகளை மட்டுமே வசூலிக்கின்றனர்.

    இந்நிலையில், அண்ணாமலையார் கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை ஏற்படுத்தித் தராத அறநிலையத் துறையைக் கண்டித்தும், அடிப்படைத் தேவைகளை பூர்த்தி செய்யாத மாநகராட்சி நிர்வாகத்தைக் கண்டித்தும், ஆமை வேகத்தில் பணிகளை மேற்கொண்டு வரும் அரசுத் துறையினரைக் கண்டித்தும், இவற்றை வேடிக்கை பார்க்கும் திமுக அரசை கண்டித்தும் திருவண்ணாமலை கிழக்கு மாவட்ட அதிமுக சார்பில் வரும் 16-ம் தேதி காலை 10 மணிக்கு, திருவண்ணாமலை மாநகராட்சி, அண்ணா சிலை அருகில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்.

    இந்த ஆர்ப்பாட்டம் முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணி தலைமையிலும், முன்னாள் அமைச்சர் எஸ்.ராமச்சந்திரன் முன்னிலையிலும் நடைபெறும்” என்று அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    மாநிலம்

    2026-ல் ஸ்டாலினுக்கு ‘பை பை’ சொல்ல மக்கள் தயாராகிவிட்டனர் – இபிஎஸ் ஆரூடம்

    July 11, 2025
    மாநிலம்

    பாஜக தொடர்ந்த அவமதிப்பு வழக்கு: உயர் நீதிமன்றத்தில் மன்னிப்பு கேட்ட 5 ஐஏஎஸ் அதிகாரிகள் – முழு விவரம்

    July 11, 2025
    மாநிலம்

    அவமதிப்பு வழக்கில் மன்னிப்பு: சென்னை மாநகராட்சி ஆணையருக்கு விதிக்கப்பட்ட ரூ.1 லட்சம் அபராதம் ரத்து

    July 11, 2025
    மாநிலம்

    தமிழகத்தில் 16-ம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு

    July 11, 2025
    மாநிலம்

    கடலூர் ரயில் விபத்து சம்பவம் எதிரொலி: கேட்களில் பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் வெளியீடு

    July 11, 2025
    மாநிலம்

    “அதிமுக ஆட்சி நீடித்திருந்தால் இந்தி பேசும் நிலை உருவாகி இருக்கும்!” – உதயநிதி ஸ்டாலின்

    July 11, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • உயர் இரத்த அழுத்த அறிகுறிகள்: 3 உயர் இரத்த அழுத்தத்தின் அறிகுறிகள் பெரும்பாலும் கவனிக்கப்படாமல் போகின்றன | – டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • 2026-ல் ஸ்டாலினுக்கு ‘பை பை’ சொல்ல மக்கள் தயாராகிவிட்டனர் – இபிஎஸ் ஆரூடம்
    • தொற்று மற்றும் செரிமான சிக்கல்களைத் தடுக்க இந்த பருவமழை பருவத்தில் தவிர்க்க 5 பழங்கள் | – டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • பாஜக தொடர்ந்த அவமதிப்பு வழக்கு: உயர் நீதிமன்றத்தில் மன்னிப்பு கேட்ட 5 ஐஏஎஸ் அதிகாரிகள் – முழு விவரம்
    • உயர் பி.எம்.ஐ மார்பக புற்றுநோயின் அபாயத்தை அதிகரிக்கிறது: மாதவிடாய் நின்ற பிறகு பெண்களில் அதிகப்படியான எடை எவ்வாறு புற்றுநோய் அபாயத்தை அதிகரிக்கிறது | – டைம்ஸ் ஆஃப் இந்தியா

    Recent Comments

    No comments to show.

    Archives

    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.