Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Saturday, July 5
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»மாநிலம்»திருமாவளவனுக்கு எதிராக செல்வப்பெருந்தகை செயல்படுகிறார் – விசிக குற்றச்சாட்டால் திமுக கூட்டணியில் சலசலப்பு
    மாநிலம்

    திருமாவளவனுக்கு எதிராக செல்வப்பெருந்தகை செயல்படுகிறார் – விசிக குற்றச்சாட்டால் திமுக கூட்டணியில் சலசலப்பு

    adminBy adminJuly 5, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    திருமாவளவனுக்கு எதிராக செல்வப்பெருந்தகை செயல்படுகிறார் – விசிக குற்றச்சாட்டால் திமுக கூட்டணியில் சலசலப்பு
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    சென்னை: ​திரு​மாவளவனுக்கு எதி​ராக செல்​வப்​பெருந்​தகை செயல்​படு​வ​தாக விசிக குற்​றம்​சாட்​டி​யுள்​ளது. மேலும், காங்​கிரஸ் குறித்த விசிக நிர்​வாகி​யின் கருத்து திமுக கூட்​ட​ணி​யில் சலசலப்பை ஏற்​படுத்​தி​யுள்​ளது.

    திமுக கூட்​ட​ணி​யில் இருந்து சில கட்​சிகள் வெளி​யேறி​னாலும், அதற்கு ஈடாக பாமகவை கூட்​ட​ணி​யில் இணைப்​ப​தற்​கான நடவடிக்​கையை தமிழக காங்​கிரஸ் தலை​வர் செல்​வப்​பெருந்​தகை மூலம் திமுக செய்து வரு​வ​தாக கூறப்​படு​கிறது. இதையொட்​டி, பாமக நிறு​வனர் ராம​தாஸை சந்​தித்த பிறகு , “2011-ம் ஆண்டு போல் விசிக​வும், பாமக​வும் ஒரே கூட்​ட​ணி​யில் இருக்க வேண்​டும்” என செல்​வப்​பெருந்​தகை தெரி​வித்​திருந்​தார்.

    செல்​வப்​பெருந்​தகை​யின் கருத்தை கடுமை​யாக விமர்​சித்து தனி​யார் தொலைக்​காட்சி விவாத நிகழ்ச்​சி​யில் விசிக துணை பொதுச் செய​லா​ளர் வன்​னியரசு பேசி​ய​தாவது: காங்​கிரஸ் கட்​சிக்கு அதிக தொகு​தி​களை ஒதுக்​கு​கின்​றனர். தமிழகத்​தில் காங்​கிரஸ் வலிமை​யாகவா இருக்​கிறது. எங்​களுக்கு அதிக தொகு​தி​களை ஒதுக்க வேண்​டும் என கூறுகிறோம். நான் கூட்​டணி கட்​சியை குறைத்து மதிப்​பிட​வில்​லை.

    அதே​நேரம், காங்​கிரஸின் வலிமை குறித்து தமிழகத்​தில் கருத்​துகணிப்பு நடத்​தி​னால் உண்மை தெரிய​வரும். தமிழகத்​தில் காங்​கிரஸுக்கு என்ன இருக்​கிறது? அகில இந்​திய அளவில் ராகுல்​காந்தி என்​னும் தலை​வர் சிறப்​பாக செயல்​படு​கிறார். அதன் தொடர்ச்​சி​யாகவே காங்​கிரஸை பார்க்க வேண்​டி​யிருக்​கிறது. விசிக​வுக்கு செல்​வப்​பெருந்​தகை தலை​வர் இல்​லை. இன்று அவர் ஒரு கட்​சி​யில் இருப்​பார், நாளை ஒரு கட்​சிக்கு செல்​வார். இது​தான் அவருடைய கடந்த கால வரலாறு. விசிக குறித்து பேச அவருக்கு தார்​மீக உரிமை இல்​லை. பாஜக, பாமகவோடு சேர மாட்​டோம் என விசிக தலை​வர் தெளி​வாக கூறிய நிலை​யில், பாமகவோடு சேருங்​கள் என சொல்​வது அவர் வேலை​யல்ல. பாஜக​வும், காங்​கிரஸும் சேர வேண்​டும் என நாங்​கள் சொன்​னால் அவர் ஏற்​றுக் கொள்​வா​ரா. இவ்​வாறு அவர் கூறி​யுள்​ளார்.

    இதன் தொடர்ச்​சி​யாக காங்​கிரஸார் சமூக வலைதள பதிவு​களில், “2014 மக்​கள​வைத் தேர்​தலில் தனித்து களம் கண்ட காங்​கிரஸ் கட்​சி​யின் வாக்கு சதவீதம் 4.37. அதே​நேரத்​தில் மக்​கள் நல கூட்​டணி என்ற பெயரில் விசிக​வின் வாக்கு சதவீதம் 0.77. யார் வலிமை என்று இப்​போது புரி​கிற​தா. வன்​னியரசின் இந்த பேச்சை முதலிலேயே கட்​சித் தலை​வர் தடுத்து நிறுத்த வேண்​டும்” என கண்​டனக் குரல்​களை எழுப்பி வரு​கின்​றனர்.

    விசிக​வில் இருந்து கருத்து வேறு​பாட்​டால் வெளி​யேறிய செல்​வப்​பெருந்​தகை, காங்​கிரஸ் தலை​வ​ரான பிறகே திரு​மாவளவனை சந்​தித்து வாழ்த்து பெற்​றார். அப்​போது, செய்​தி​யாளர்​களிடம் பேசிய செல்​வப்​பெருந்​தகை, “2024 மக்​கள​வைத் தேர்​தலில் திரு​மாவளவனை வெற்றி பெறச் செய்ய காங்​கிரஸ் தொண்​டர்கள உழைப்​பார்​கள்” என தெரி​வித்​திருந்​தார். ஏற்​கெனவே கட்​சி​யில் இருந்​து, காங்​கிரஸ் கட்​சிக்கு தலை​வ​ராக செல்​வப்​பெருந்​தகை வந்​த​தில் எவ்​வித சங்​கட​மும் இல்லை என விசிக பொதுச்​செய​லா​ளர் துரை.ரவிக்​கு​மாரும் தெரி​வித்​திருந்​தார்.

    இவ்​வாறு இரு தரப்​பினரும் இணக்​க​மாகி ஓராண்டே ஆன நிலை​யில், தற்​போது வெடித்​துள்ள மோதல் எங்கு வரை செல்​லும் என்​பதை பொறுத்​திருந்தே பார்க்​க வேண்​டும்​ என அரசி​யல்​ நோக்​கர்​கள்​ கூறுகின்​றனர்​.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    மாநிலம்

    மதுரையில் எய்ம்ஸ் கல்லூரி ஜனவரி முதல் செயல்படும்: தலைமை நிர்வாக அதிகாரி தகவல்

    July 5, 2025
    மாநிலம்

    மேட்டூர் அணையிலிருந்து நீர் திறப்பு: 30,000 கன அடியாக அதிகரிப்பு

    July 5, 2025
    மாநிலம்

    அஜித்குமார் கொலை வழக்கில் சிபிசிஐடி விசாரணையே போதும்: குடும்ப வழக்கறிஞர் கணேஷ்குமார் வலியுறுத்தல்

    July 5, 2025
    மாநிலம்

    அஜித்குமார் சகோதரருக்கு அரசு வேலை வழங்கியது கண்துடைப்பு:​ நயினார் நாகேந்திரன் விமர்சனம்

    July 5, 2025
    மாநிலம்

    காதர் மொய்தீனுக்கு ‘தகைசால் தமிழர்’ விருது: சுதந்திர தின விழாவில் முதல்வர் ஸ்டாலின் வழங்குகிறார்

    July 5, 2025
    மாநிலம்

    புதிய ஊட்டச்சத்து வேளாண் இயக்கம் திட்டம்: முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்

    July 5, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • மதுரையில் எய்ம்ஸ் கல்லூரி ஜனவரி முதல் செயல்படும்: தலைமை நிர்வாக அதிகாரி தகவல்
    • இந்த காய்கறியை சாப்பிடுவது இயற்கையாகவே இரத்த சர்க்கரையை குறைக்கும், நீரிழிவு நோயாளிகளில் கூட | – டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • இந்தியாவுக்கு முதல் 3 அபாச்சி ஹெலிகாப்டரை வழங்குகிறது அமெரிக்கா
    • மேட்டூர் அணையிலிருந்து நீர் திறப்பு: 30,000 கன அடியாக அதிகரிப்பு
    • அமெரிக்காவின் ஜேன் ஸ்ட்ரீட் நிறுவனம் இந்திய சந்தைகளை ஏமாற்றி ரூ.36,500 கோடி சம்பாதித்தது எப்படி?

    Recent Comments

    No comments to show.

    Archives

    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.