Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Tuesday, September 9
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»மாநிலம்»திருப்பூரில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாமில் முன்னேற்பாடுகள் இல்லாததால் நெரிசல் – பொதுமக்கள் அவதி
    மாநிலம்

    திருப்பூரில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாமில் முன்னேற்பாடுகள் இல்லாததால் நெரிசல் – பொதுமக்கள் அவதி

    adminBy adminSeptember 9, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    திருப்பூரில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாமில் முன்னேற்பாடுகள் இல்லாததால் நெரிசல் – பொதுமக்கள் அவதி
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    திருப்பூர்: திருப்பூர் நல்லூர் பகுதியில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம் நடந்தது. அதில் முறையான திட்டமிடல் இல்லாத காரணத்தினால் லேசான தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

    திருப்பூர் மாவட்டத்தில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ 2-ம் கட்ட முகாம், பல்வேறு பகுதிகளில் நடந்து வருகிறது. திருப்பூர் மாநகரில் 3-வது மண்டலத்துக்கு உட்பட்ட 46, 47 மற்றும் 48-வது வார்டுகளுக்கு, திருப்பூர் கூலிபாளையம் சாலை ஆர்.கே.ஜி. மண்டபத்தில் இன்று (செப்.9) நடைபெற்றது. இதில் அளவுக்கதிகமான பொதுமக்கள் திரண்டதால் கடும் நெரிசல் மற்றும் லேசான தள்ளு முள்ளு ஏற்பட்டதால் பொதுமக்கள் அவதி அடைந்தனர்.

    ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாமில், மகளிர் உரிமைத் தொகை விண்ணப்பிக்காதவர்கள் துவங்கி, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை, மின் கட்டணம் பெயர் மாற்றம், வீடுகளுக்கான புதிய மின் இணைப்பு, கட்டிட அனுமதி, பிறப்பு, இறப்பு சான்றுகள், ஆதார் திருத்தம், குடும்ப அட்டைக்கு விண்ணப்பிப்பது, பட்டா மாறுதல் உள்ளிட்டவற்றுக்கு விண்ணப்பிப்பது, வாரிசு சான்று, வருவாய்த் துறை என 44 துறைகளுக்கு மனுக்களை பொதுமக்கள் தமிழ்நாடு முழுவதும் அளித்து வருகின்றனர்.

    அதன் ஒருபகுதியாக திருப்பூரில் நடந்த முகாமில் போதிய முன்னேற்பாடுகளை அதிகாரிகள் செய்யத் தவறியதால் பொதுமக்கள் அவதி அடைந்தனர். இது தொடர்பாக அங்கிருந்தவர்கள் கூறியது: ”மண்டபத்துக்கு வெளியே சாமியானா அமைக்கப்பட்டிருந்தது. பொதுமக்கள் பலர் வெயிலின் தாக்கத்தால் சோர்வடைந்தனர். வரிசையில் நிற்கும் பகுதியில் குடிநீர் உள்ளிட்ட வசதிகள் இல்லை. விண்ணப்பத்துக்கு சீல் வைக்க, ஒரே வரிசையில் பொதுமக்கள் நிறுத்தப்பட்டதால் கால்கடுக்க நிற்க முடியாமல், பலரும் முண்டியடித்துக்கொண்டு விண்ணப்பங்களை வழங்கியதால் குழப்பம் ஏற்பட்டது.

    மகளிர் உரிமைத் தொகைக்கு விண்ணப்பிப்பவர்களை, கதவை அடைத்து வைத்துக்கொண்டு, ஆண்கள் நின்று கொண்டதால் பெண்கள் உள்ளே செல்லவே சிரமப்பட்டனர். அங்கு போதிய பெண் காவலர்கள் மற்றும் ஊர்க்காவல் படையினரை நியமித்திருந்தால் பெண்கள் நிம்மதியாக உள்ளே சென்றிருக்க முடியும்.

    அதேபோல் துறைவாரியாக தடுப்புகள் அமைத்து உரிய முன்னேற்பாடுகளை செய்யாமல் விட்டதால் பலரும் அவதி அடைந்தனர். குறிப்பாக மண்டபத்தின் தரைதளத்தில் கடும் வெயிலின் காரணமாக, போதிய காற்றோட்டம் உள்ளிட்டவை இல்லாத காரணத்தால் குழந்தைகளை அழைத்து வந்த தாய்மார்கள் உட்பட பலரும் அவதி அடைந்தனர்” என்று அவர்கள் தெரிவித்தனர்.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    மாநிலம்

    தமிழகத்தில் குரு பூஜைகளுக்கு தடை விதிக்க கோரிய வழக்கும், முன்வைக்கப்பட்ட வாதங்களும்!

    September 9, 2025
    மாநிலம்

    திருட்டு வழக்கில் கைதான ஊராட்சி மன்ற தலைவர் பாரதியை கட்சியில் இருந்து நீக்கி திமுக நடவடிக்கை!

    September 9, 2025
    மாநிலம்

    “அதிமுகவின் முதல்வர் வேட்பாளரை மாற்றினால் பாஜக கூட்டணிக்கு ஆதரவு” – டிடிவி தினகரன்

    September 9, 2025
    மாநிலம்

    “செங்கோட்டையனின் முன்முயற்சிகள் வெற்றியடைய வேண்டும்” – ஓபிஎஸ்

    September 9, 2025
    மாநிலம்

    “சனிக்கிழமைகளில் மட்டுமே மக்களை பார்ப்பேன் என்பது…” – விஜய் மீது அண்ணாமலை விமர்சனம்

    September 9, 2025
    மாநிலம்

    “பிராட்வேக்கு மாற்றாக விரைவில் தற்காலிக பேருந்து நிலையங்கள்” – அமைச்சர் சேகர்பாபு தகவல்

    September 9, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • போராட்டக்காரர்கள் தீ வைத்ததில் நேபாள முன்னாள் பிரதமரின் மனைவி உயிரிழப்பு
    • தமிழகத்தில் குரு பூஜைகளுக்கு தடை விதிக்க கோரிய வழக்கும், முன்வைக்கப்பட்ட வாதங்களும்!
    • கைப்பற்றப்பட்டது: அருணாச்சல பிரதேசத்தில் புகைப்படம் எடுக்கப்பட்ட அரிதான இமயமலை பல்லாஸின் பூனை; கூச்ச சுபாவமுள்ள பூனை கண்டுபிடிக்க 5 இடங்கள் | – தி டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • திருட்டு வழக்கில் கைதான ஊராட்சி மன்ற தலைவர் பாரதியை கட்சியில் இருந்து நீக்கி திமுக நடவடிக்கை!
    • உயர் இரத்த அழுத்தம்: உங்கள் இரத்த அழுத்தத்தை அதிகரிக்கும் 10 தினசரி தவறுகள்

    Recent Comments

    No comments to show.

    Archives

    • September 2025
    • August 2025
    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.