Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Wednesday, September 17
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»மாநிலம்»திருப்பரங்குன்றம் கும்பாபிஷேக விழாவை ஒட்டி 24 மணி நேரமும் நடைபெற்ற தூய்மைப் பணி
    மாநிலம்

    திருப்பரங்குன்றம் கும்பாபிஷேக விழாவை ஒட்டி 24 மணி நேரமும் நடைபெற்ற தூய்மைப் பணி

    adminBy adminJuly 14, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    திருப்பரங்குன்றம் கும்பாபிஷேக விழாவை ஒட்டி 24 மணி நேரமும் நடைபெற்ற தூய்மைப் பணி
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    மதுரை: லட்சக்கணக்கான மக்கள் திரண்ட மதுரை திருப்பரங்குன்றம் முருகன் கோயில் கும்பாபிஷேக விழாவில் மாநகராட்சி சார்பில் இரவு, பகலாக குப்பைகள் அகற்றும் பணி கடந்த 10-ம் தேதி முதல் 24 மணி நேரமும் நடந்து வருகிறது.

    மதுரை மாநகராட்சி ஆணையாளர் சித்ரா, கும்பாபிஷேகத்திற்கு முந்தைய நாளான நேற்று நள்ளிரவு வரை முகாமிட்டும், இன்று அதிகாலை 4 மணிக்கு சென்றும் கோயில் பகுதிகளில் சுகாதாரப் பணிகள், குடிநீர் விநியோகப் பணிகளை ஆய்வு மேற்கொண்டார்.

    மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் முருகன் கோயில் கும்பாபிஷேகம் இன்று கோலாகலமாக நடைபெற்றது. கும்பாபிஷேகம் சரியாக அதிகாலை 5.31 மணிக்கு நடைபெற்றது. இதில், லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டனர். இதில் பக்தர்கள், தமிழகம் முழுவதும் இருந்து குடும்பத்துடன் வந்ததால், திருப்பரங்குன்றம் கோயில் பகுதியில் வழக்கத்தை விட 6 மடங்கு குப்பைகள் சேர்ந்தன.

    கும்பாபிஷேகம் நடந்த அதிகாலை நேரத்தில் பக்தர்களுக்கு மாநகர காவல்துறை பல்வேறு கட்டுப்பாடுகள் விதித்திருந்ததால், கும்பிஷேகம் முடிந்த பிறகு இன்று காலை முதல் இரவு வரை பக்தர்கள் திருப்பரங்குன்றம் கோயிலுக்கு சாரைசாரயாக குடும்பத்துடன் வந்து கொண்டிருந்தனர். கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு மாநகராட்சி ஆணையாளர் சித்ரா உத்தரவின் பேரில், நகர் நல அலுவலர் அபிஷேக் தலைமையில் சுகாதாரப் பணியாளர்கள், தூய்மைப் பணியாளர்கள் கடந்த 10-ம் தேதி முதல் திருப்பரங்குன்றம் பகுதியில் முகாமிட்டு 24 மணி நேரமும் தீவிர தூய்மைப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    ஆணையாளர் சித்ரா, கும்பாபிஷேகத்துக்கு முந்தைய நாளான நேற்று 13-ம் தேதி நள்ளிரவு 11.30 மணி வரையும், இன்று கும்பிஷேகம் நடப்பதற்கு முன்பே அதிகாலை 4 மணிக்கு வந்தும், தூய்மைப் பணி, குடிநீர், கழிப்பறை, மருத்துவ முகாம் பணிகளை ஆய்வு செய்து, மாநகராட்சி அதிகாரிகளுக்கு ஆலோசனைகளை வழங்கினார்.

    இது குறித்து மாநகராட்சி நகர் நல உதவி அலுவலர் அபிஷேக், கூறுகையில், “சித்திரைத் திருவிழா மாநகராட்சி தூய்மைப் பணி பொதுமக்கள், பக்தர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றதால், அதே பார்முலாவை பின்பற்றி திருப்பரங்குன்றம் கும்பாபிஷேக விழாவிலும் தூய்மைப் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மாநகராட்சி தூய்மைப் பணியாளர்கள் 250 பேர் தவிர, வெளியூர்களில் இருந்து 150 சிறப்பு தற்காலிக பணியாளர்களையும் தூய்மைப் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.

    திருவிழா நேரம் என்பதால் கிரிவலப் பாதைகளில் பக்தர்கள் வீசும் குப்பைகள், அன்னதானம் பகுதியில் சேரும் குப்பைகள், சாலை, வீதிகளில் சேரும் குப்பைகளை சேகரித்து உரக்கிடங்கிற்கு உடனக்குடன் கொண்டு செல்வதற்கு 36 இலகு ரக வாகனங்கள், 9 டிராக்டர்கள் பயன்படுத்தப்பட்டன. வழக்கமாக திருப்பரங்குன்றம் பகுதியில் ஒரு நாளைக்கு 40 டன் குப்பைகள் மட்டுமே சேரும். ஆனால், நேற்று ஒரே நாளில் 250 டன் குப்பைகள் சேர்ந்தன.

    தொடர்ந்து குப்பைகளை அள்ளிக் கொண்டிருக்கிறோம். இதுதவிர, பக்தர்கள் பயன்பாட்டிற்காக கட்டிடங்களுடன் கூடிய 15 நிரந்தர கழிப்பறைகள், 15 மொபைல் கழிப்பறைகள் வைக்கப்பட்டன. கழிப்பறைகளை ஒரு மணி நேரத்திற்கு ஒரு முறை சுத்தம் செய்வதற்கு பணியாளர்கள் ஷிஃப்ட் முறையில் பணியமர்த்தப்பட்டனர். திருவிழாவுக்கு முதியவர்கள், பெண்கள், மாற்றுத்திறனாளிகள், நோயாளிகள், குழந்தைகளும் வருவார்கள்.

    அவர்களுக்கு அவசர முதலுதவி சிகிச்சை வழங்குவதற்குகாக, கோயிலுக்கு வெளியேள்ள பகுதிகளில் வெளியே 20 இடங்களில் மருத்துவ முகாம்கள் நடந்தது. மாநகராட்சி நகர் நல ஆரம்ப நிலைகளில் பணிபுரியும் மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவப் பணியாளர்கள், நோயாளிகளுக்கு மருத்துவ சிகிச்சைகள், ஆலோசனைகளை வழங்கினர்.

    கும்பிஷேகம் நடந்த விமானத்திற்கு அருகே விஐபிகள் வருவார்கள் என்பதால் அவர்களுக்காக அருகேயும் ஒரு மருத்துவ முகாம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. கோயிலுக்கு உள்ளே 2 ஆம்புலன்ஸ்கள், வெளியே 5 ஆம்புலன்ஸ்கள் நிறுத்தப்பட்டிருந்தன. 50 இடங்களில் பக்தர்களுக்காக குடிநீர் தொட்டிகள் வைக்கப்பட்டிருந்தன, இந்த தொட்டிகளில் 2 மணி நேரத்திற்கு ஒரு முறை குளோரினேஷன் செய்யப்பட்டது.

    குடிநீர் தொட்டிகள், கழிப்பறைகளில் தண்ணீர் இருப்பை கண்காணித்து, சுகாதாரப் பணியாளர்கள் பொறியியல் பிரிவுக்கு தகவல் தெரிவித்து உடனுக்குடன் தண்ணீர் வரவழைக்கப்பட்டது. இன்று 15ம் தேதி மாலைக்குள் திருப்பரங்குன்றம் கோயில், மலையை சுற்றியுள்ள அனைத்து வகை குப்பைகளையும் அகற்றிவிடுவோம்” என்று அபிஷேக் கூறியுள்ளார்.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    மாநிலம்

    பெரியார் பிறந்தநாள்: முதல்வர் ஸ்டாலின், அரசியல் கட்சித் தலைவர்கள் புகழஞ்சலி

    September 17, 2025
    மாநிலம்

    பிரதமர் மோடியின் 75-வது பிறந்தநாள்: முதல்வர் ஸ்டாலின், அரசியல் கட்சித் தலைவர்கள் வாழ்த்து!

    September 17, 2025
    மாநிலம்

    டெல்லியில் அமித் ஷாவை சந்தித்தது ஏன்? – இபிஎஸ் விளக்கம்

    September 17, 2025
    மாநிலம்

    சுதந்திரப் போராட்ட வீரர் ராமசாமி படையாட்சியின் 108-வது பிறந்தநாள்: முதல்வர், அரசியல் தலைவர்கள் மரியாதை

    September 17, 2025
    மாநிலம்

    பாமக தலைமை அலுவலக முகவரியை மாற்றி மோசடி செய்துள்ளனர்: ஜி.கே.மணி குற்றச்சாட்டு

    September 17, 2025
    மாநிலம்

    கைலாஷ் யாத்திரை ரத்தான விவகாரம்: முன்பதிவு செய்தவருக்கு ரூ.75 ஆயிரம் இழப்பீடு – நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவு

    September 17, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • பெரியார் பிறந்தநாள்: முதல்வர் ஸ்டாலின், அரசியல் கட்சித் தலைவர்கள் புகழஞ்சலி
    • சுதந்திர இந்தியா 100 வயதை எட்டும்வரை மோடியின் சேவை தொடர வேண்டும்: முகேஷ் அம்பானி
    • இன்ஸ்டாகிராமின் விண்டேஜ் AI படங்கள் போக்கு விளக்கப்பட்டது: உங்கள் ரீல் வைரலாக மாற்ற சிறந்த 30+ தூண்டுதல்களுடன் படிப்படியான வழிகாட்டியைச் சரிபார்க்கவும்
    • 20 ஆண்டு பணியாற்றி விருப்ப ஓய்வு பெறும் மத்திய அரசு ஊழியர்களுக்கு முழு ஓய்வூதிய பயன் கிடைக்கும்
    • பிரதமர் மோடியின் 75-வது பிறந்தநாள்: முதல்வர் ஸ்டாலின், அரசியல் கட்சித் தலைவர்கள் வாழ்த்து!

    Recent Comments

    No comments to show.

    Archives

    • September 2025
    • August 2025
    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.