Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Tuesday, September 23
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»மாநிலம்»திருத்தணி பட்டாபிராமபுரம் ஏரிக்கரையில் மண் கடத்தல்: சீமான் குற்றச்சாட்டு
    மாநிலம்

    திருத்தணி பட்டாபிராமபுரம் ஏரிக்கரையில் மண் கடத்தல்: சீமான் குற்றச்சாட்டு

    adminBy adminJune 28, 2025No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    திருத்தணி பட்டாபிராமபுரம் ஏரிக்கரையில் மண் கடத்தல்: சீமான் குற்றச்சாட்டு
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    சென்னை: திருத்தணி பட்டாபிராமபுரம் ஏரிப் பகுதியில் மணல் கடத்தல் நடைபெறுவதாகவும், அதை தமிழக அரசு தடுத்து நிறுத்த வேண்டும் எனவும் நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தியுள்ளார்.

    இதுதொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கை: சென்னை – திருப்பதி நெடுஞ்சாலையில் வாகன நெரிசல் மற்றும் பயண நேரத்தைக் குறைப்பதற்காக இருவழிச் சாலை, 4 வழிச்சாலையாக மாற்றப்படுகிறது. இந்நிலையில், அதற்கு தேவையான சவ்வூடு மணல், திருத்தணி பட்டாபிராமபுரம் ஏரிப் பகுதியிலிருந்து எடுக்கப்படுகிறது. 5 அடி ஆழம் வரை மட்டுமே மணல் எடுக்க அனுமதிக்கப்பட்ட நிலையில் சாலை ஒப்பந்த நிறுவனத்தாரால் 12 அடி ஆழத்துக்கும் அதிகமாக சவ்வூடு மணல் நாள்தோறும் வெட்டி எடுக்கப்படுகிறது.

    அதிகளவில் மணல் கொள்ளையடிக்கப்படுவது குறித்து திருத்தணி பகுதி மக்கள் புகார் அளித்ததை தொடர்ந்து, அப்பகுதியில் மணல் அள்ள தடை விதித்து கோட்டாட்சியர் உத்தரவிட்டார். ஆனால் அதன் பிறகும் பட்டாபிராமபுரம் ஏரிப்பகுதியில் தொடர்ச்சியாக மணற்கொள்ளை நடைபெற்று வருகிறது. தமிழக அரசால் இதை தடுக்க முடியவில்லை. இது திமுக அரசின் நிர்வாகத் திறமையின்மையையே காட்டுகிறது.

    கேரளாவில் மணல் கொள்ளையே இல்லை என சொல்லும் அளவுக்கு அங்குள்ள ஆட்சியாளர்கள் தங்களது இயற்கை வளத்தைப் பாதுகாத்து வைத்திருக்கின்றனர். ஆனால், தமிழகத்தில் ஆறுகள் மட்டுமின்றி ஏரிக்கரை பகுதிகளில் இருந்தும் மணல் அள்ளப்பட்டு வருகிறது. எனவே திருத்தணி பட்டாபிராமபுரம் ஏரிப் பகுதியில் கட்டுங்கடங்காது நடைபெறும் மணல் கடத்தலை தடுத்து நிறுத்த தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் வலியுறுத்தியுள்ளார்.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    மாநிலம்

    திமுகவை கண்டித்து 2 மாதம் பாஜக தொடர் ஆர்ப்பாட்டம்

    September 23, 2025
    மாநிலம்

    துரைமுருகன் மீதான சொத்துக் குவிப்பு வழக்கு: தமிழக அரசு பதில் அளிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு

    September 23, 2025
    மாநிலம்

    காவல், தீயணைப்புத் துறைக்கு புதிய கட்டிடங்கள்: முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார்

    September 23, 2025
    மாநிலம்

    தமிழகம் முழுவதும் 1,231 கிராம சுகாதார செவிலியர்கள் நியமனம்: பணி ஆணைகளை முதல்வர் ஸ்டாலின் வழங்கினார்

    September 23, 2025
    மாநிலம்

    70 புதிய துணை மின்நிலையங்கள் அமைக்க டெண்டர்: தமிழக மின் வாரிய அதிகாரிகள் தகவல்

    September 23, 2025
    மாநிலம்

    காந்தி ஜெயந்தி தினத்தில் கிராம சபைக் கூட்டம்: ஆசிரியர்கள் பங்கேற்க பள்ளிக் கல்வித் துறை உத்தரவு

    September 23, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • உலக ஆயுர்வேத நாள்: 6 ஆயுர்வேத சடங்குகள் பல நவீன சுகாதார பிரச்சினைகளுக்கு ஒரு தீர்வாகும்
    • திமுகவை கண்டித்து 2 மாதம் பாஜக தொடர் ஆர்ப்பாட்டம்
    • லுகோவோரின் என்றால் என்ன? மன இறுக்கத்திற்கு இது எவ்வாறு உதவுகிறது? – தி டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • துரைமுருகன் மீதான சொத்துக் குவிப்பு வழக்கு: தமிழக அரசு பதில் அளிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு
    • ஜிஎஸ்டி சீர்திருத்தம்: ஆவின் நெய், பனீர் விலை குறைப்பு

    Recent Comments

    No comments to show.

    Archives

    • September 2025
    • August 2025
    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.