Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Tuesday, July 1
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»மாநிலம்»திருச்செந்தூர் கோயில் கும்பாபிஷேகத்தின்போது தமிழில் மந்திரங்கள் ஓதப்படும்: நீதிமன்றத்தில் தமிழக அரசு தகவல்
    மாநிலம்

    திருச்செந்தூர் கோயில் கும்பாபிஷேகத்தின்போது தமிழில் மந்திரங்கள் ஓதப்படும்: நீதிமன்றத்தில் தமிழக அரசு தகவல்

    adminBy adminJune 25, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    திருச்செந்தூர் கோயில் கும்பாபிஷேகத்தின்போது தமிழில் மந்திரங்கள் ஓதப்படும்: நீதிமன்றத்தில் தமிழக அரசு தகவல்
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    மதுரை: ​திருச்​செந்​தூர் சுப்​பிரமணிய சுவாமி கோயில் கும்​பாபிஷேகத்​தின்​போது தமிழில் மந்​திரங்​கள் ஓதப்​படும் என்று உயர் நீதி​மன்​றத்தில் அரசு தரப்​பில் தெரிவிக்​கப்​பட்டது. தூத்​துக்​குடி மாவட்​டம் ஆழ்​வார் திருநகரியைச் சேர்ந்த வியனரசு, உயர் நீதி​மன்ற மதுரை அமர்​வில் தாக்​கல் செய்த மனு​வில், ‘திருச்​செந்​தூர் கோயில் கும்​பாபிஷேகம் ஜூலை 7-ம் தேதி நடை​பெறுகிறது. கும்​பாபிஷேகத்​தின்போது யாக​சாலை, கரு​வறை, கோபுர விமான பூஜை​யில் தமிழில் மந்​திரங்​கள் ஓதுமாறு உத்​தர​விட வேண்​டும்’ என்று கூறியிருந்தார்.

    இந்த மனு நீதிப​தி​கள் எஸ்​.எம்​. சுப்​பிரமணி​யம், ஏ.டி.மரிய கிளாட் அமர்​வில் விசா​ரணைக்கு வந்தது. அரசு தரப்​பில், “யாக​சாலை​யில் மந்​திரங்​கள் ஓது​வது தொடங்கி, திரு​முறை பாடு​வது, திருப்​பு​கழ் பாடு​வது, 64 ஓது​வார்​கள் பூஜை செய்​வது ஆகிய நிகழ்​வு​கள் தமிழ் மொழி​யில் நடை​பெறும்” எனத் தெரிவிக்​கப்​பட்​டது.

    இதை பதில் மனு​வாக தாக்​கல் செய்ய உத்​தர​விட்​டு, திருச்​செந்​தூர் கோயில் கும்​பாபிஷேகம் தொடர்​பாக நிலு​வையில் இருக்​கும் மனுக்களு​டன் சேர்த்து ஜூலை 2-ம் தேதி விசா​ரணைக்​குப் பட்​டியலிட நீதிப​தி​கள் உத்தர​விட்​டனர்.

    இதற்கிடையே கும்​பாபிஷேகம் நடை​பெறும் நேரத்தை மாற்​றக்கோரி சிவ​ராம சுப்​பிரமணிய சாஸ்​திரி, உயர் நீதி​மன்ற அமர்​வில் மனு தாக்கல் செய்தார். இதை விசா​ரித்த உயர்நீதிமன்​றம், கும்​பாபிஷேக நேரத்தை முடிவு செய்யசபரிமலை மேல் சாந்தி தலை​மையில் குழு அமைத்து உத்​தர​விட்​டது.

    இதையடுத்​து, அந்​தக் குழு கூடி, ஜூலை 7-ம் தேதி காலை 6.15 மணி முதல் 6.50 மணி வரை கும்​பாபிஷேகம் நடத்த முடிவு செய்​தது. இந்த நேரத்​துக்​கு, குழு​வில் இடம் பெற்​றிருந்த சிவ​ராம சுப்​பிரமணிய சாஸ்​திரி ஆட்​சேபம் தெரி​வித்​தார். இருப்​பினும் மேல்​சாந்தி குறித்த நேரமே இறுதி செய்​யப்​பட்​டது.

    இந்​நிலை​யில், கும்​பாபிஷேக நேரத்தை மாற்​றக் கோரி உயர் நீதி​மன்ற மதுரை அமர்​வில் சிவ​ராம சுப்​பிரமணிய சாஸ்​திரி சீராய்வு மனு​வைத் தாக்​கல் செய்​தார். அதில் “ஜூலை 7-ம் தேதி பகல் 12.05 மணி முதல் 12.47 மணி​தான் முகூர்த்த நேரம். தோஷங்​கள் இல்லாத இந்த நேரத்​தில் கும்பா​பிஷேகம் நடத்த உத்​தர​விடவேண்​டும். அது​வரை கும்​பாபிஷேக அழைப்​பிதழ் வழங்​கத் தடை விதிக்க வேண்​டும்” எனக் கூறி​யிருந்​தார்.

    இந்த மனு நீதிப​தி​கள் எஸ்​. ம​தி, ஆர்​.​விஜயகு​மார் அமர்​வில் விசா​ரணைக்கு வந்​தது. பின்​னர் நீதிப​தி​கள், “நீ​தி​மன்​றம் அமைத்த குழு கும்​பாபிஷேக நேரத்தை முடிவு செய்​துள்​ளது. அந்த நேரத்​தில் கும்​பாபிஷேகம் நடத்​தலாம். கும்​பாபிஷேகத்​தைப் பொறுத்​தவரை, கோயில் விதாயகர் குறிக்​கும் நேரம்​தான் முக்​கி​யம். இனி வரும் காலங்​களில் கோயில் விதாயகர் குறிப்​பிடும் நேரத்தை எழுத்​துப்பூர்​வ​மாக பெற்​று, அந்த நேரத்​தில் கும்​பாபிஷேகம் நடத்த வேண்​டும்” என உத்​தரவிட்​டனர்.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    மாநிலம்

    21 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி புதுச்சேரியில் ஜூலை 9 தொழிற்சங்கங்கள் பந்த்

    July 1, 2025
    மாநிலம்

    பாமக-வை சிதைக்கும் நோக்கத்துடன் திமுக செயல்படுகிறது: கட்சி நிர்வாகிகள் கூட்டாக பேட்டி

    July 1, 2025
    மாநிலம்

    புதுச்சேரியில் சூதாட்ட சுற்றுலா கப்பலுக்கு அனுமதி: முதல்வர், ஆளுநருக்கு அதிமுக கேள்வி

    July 1, 2025
    மாநிலம்

    தமிழகத்தின் மீது அக்கறையுள்ள கட்சி திமுக: அமைச்சர் துரைமுருகன்

    July 1, 2025
    மாநிலம்

    ஞானசேகரன் குறித்த ஆதாரங்கள் இருப்பதாக கூறிய அண்ணாமலையிடம் விசாரிக்கக் கோரிய மனு தள்ளுபடி 

    July 1, 2025
    மாநிலம்

    காலி மது பாட்டில்களை திரும்பப் பெறும் பணி: அரசு அமைத்த குழுவை அணுக ஐகோர்ட் உத்தரவு

    July 1, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • 21 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி புதுச்சேரியில் ஜூலை 9 தொழிற்சங்கங்கள் பந்த்
    • இந்த மாலை உணவுகள் மற்றும் பானங்கள் உங்கள் மூளை ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும் மற்றும் அல்சைமர் ஆபத்தை அதிகரிக்கும் | – டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • பெண்களுக்கான வாக்குறுதிகளை நிறைவேற்றும் தமிழகம் உள்ளிட்ட 18 மாநிலங்கள்: செலவு என்ன?
    • பாமக-வை சிதைக்கும் நோக்கத்துடன் திமுக செயல்படுகிறது: கட்சி நிர்வாகிகள் கூட்டாக பேட்டி
    • ஆப்டிகல் மாயை: 4502 களின் மத்தியில் மறைக்கப்பட்ட 4052 ஐக் கண்டறியவும் | – டைம்ஸ் ஆஃப் இந்தியா

    Recent Comments

    No comments to show.

    Archives

    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.