Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Saturday, July 26
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»மாநிலம்»திருச்செந்தூர் கோயில் கும்பாபிஷேகத்துக்கு தடை கோரிய மனு தள்ளுபடி
    மாநிலம்

    திருச்செந்தூர் கோயில் கும்பாபிஷேகத்துக்கு தடை கோரிய மனு தள்ளுபடி

    adminBy adminJune 18, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    திருச்செந்தூர் கோயில் கும்பாபிஷேகத்துக்கு தடை கோரிய மனு தள்ளுபடி
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    மதுரை: திருச்செந்தூர் கோயில் கும்பாபிஷேகத்துக்கு தடை கோரிய மனுவை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

    திருச்செந்தூரைச் சேர்ந்த ராம்குமார் ஆதித்தன், உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் தாக்கல் செய்த மனுவில், “திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஜூலை 7-ல் கும்பாபிஷேகம் நடைபெறுகிறது. இதையொட்டி கோயில் திருப்பணிகளுக்காக அமைக்கப்பட்ட குழுவில் ஆகம நிபுணர்கள் இடம் பெறவில்லை. கடலோர கட்டுப்பாட்டு மண்டலத்துக்கு உட்பட்ட பகுதியில் உரிய அனுமதி பெறாமல் கட்டிடங்கள் கட்டப்பட்டுள்ளன.

    கோயிலில் 24 புனித தீர்த்தங்களில் நாழிக்கிணறு என்ற தீர்த்தம் மட்டுமே இப்போது உள்ளது. தீர்த்தங்களின் பெயர்களை குறிப்பிட்டு கல் தூண்கள் அமைக்கப்பட்டிருந்தன. இந்த தூண்கள் கோயில் திருப்பணிகளில் மறைக்கப்பட்டுள்ளது. இந்தக் கல் தூண்களை மீண்டும் நிறுவ வேண்டும். கும்பாபிஷேகத்தின் போது ஹெலிகாப்டரில் மலர் தூவும் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதனால் கும்பாபிஷேகத்தின் போது கருடன் வருவதில்லை.

    ஹெலிகாப்டரில் மலர் தூவும் சடங்கு மிகப் பழமையானது. இதற்கு கோயில் நிதி செலவிடப்படுவது தவறானது. இதற்கு தடை விதிக்க வேண்டும். எனவே, கோயில் கும்பாபிஷேகத்துக்கு ஆகம நிபுணர்கள் குழு அமைக்கவும், 24 தீர்த்த தூண்களை மீண்டும் அமைக்கவும், அதுவரை திருச்செந்தூர் கோயில் கும்பாபிஷேகம் நடத்த தடை விதித்தும் உத்தரவிட வேண்டும்,” என்று மனுவில் கூறப்பட்டிருந்தது.

    இந்த மனு நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம், ஏ.டி.மரிய கிளாட் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அறநிலையத் துறை தரப்பில், “கும்பாபிஷேகம் மற்றும் திருப்பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இதனை கண்காணிக்க நீதிமன்ற உத்தரவின் படி ஆகம நிபுணர்கள் கொண்ட குழு அமைத்து அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மனுதாரர் தரப்பில், “கும்பாபிஷேகத்தின் போது ஹெலிகாப்டர் மூலம் மலர் தூவ அல்லது புனித நீர் ஊற்றுவது ஆகம விதிகளுக்கு எதிரானது,” என வாதிடப்பட்டது.

    இதையடுத்து நீதிபதிகள், “நிம்மதி தேடி கோயிலுக்கு வரும் ஏழை பக்தர்கள் ஏமாற்றப்படுகிறார்கள். அவர்களுக்கு குடிநீர், கழிவறை போன்ற அடிப்படை வசதிகள் செய்து தரப்படுவதில்லை. முதலில் அதற்கு தீர்வு காண வேண்டும். திருச்செந்தூர் கோயில் கும்பாபிஷேக விவகாரத்தில் ஏற்கெனவே நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் நிபுணர் குழு அமைக்கப்பட்டுள்ளது. மனுதாரர் தேவையெனில் இந்து சமய அறநிலையத் துறை இணை ஆணையரிடம் மனு அளிக்கலாம். மனு தள்ளுபடி செய்யப்படுகிறது” என உத்தரவிட்டனர்.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    மாநிலம்

    தமிழக மக்கள் உரிமை மீட்பு என்ற தலைப்பில் நடைபயணத்தை தொடங்கினார் அன்புமணி

    July 26, 2025
    மாநிலம்

    யார் அணியில் புதுக்கோட்டை மாநகர் திமுக? – வெடித்தது அடுத்த சர்ச்சை

    July 26, 2025
    மாநிலம்

    ‘தமிழக பண்பாட்டை உலகம் முழுவதும் பரப்பிய பெரியபுராணம்’ – தெய்வ சேக்கிழார் விழாவில் தருமபுரம் ஆதீனம் புகழாரம்

    July 26, 2025
    மாநிலம்

    தேவநாதன் யாதவ் சொத்து பட்டியலில் இருந்த 2 ஆயிரம் கிலோ தங்கம் மாயமான குற்றச்சாட்டு: போலீஸார் பதிலளிக்க ஐகோர்ட் உத்தரவு

    July 26, 2025
    மாநிலம்

    சத்யா வீட்டுக்கு லஞ்ச ஒழிப்புத் துறையை அனுப்பியது யார்? – சம்பத் மீது சந்தேகக் கொக்கி போடும் ஆதரவாளர்கள்

    July 26, 2025
    மாநிலம்

    அன்புமணி நடைபயணத்துக்கு காவல் துறை தடையா? – சலசலப்பும் பின்னணியும்

    July 26, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • தமிழக மக்கள் உரிமை மீட்பு என்ற தலைப்பில் நடைபயணத்தை தொடங்கினார் அன்புமணி
    • கோல்ட் பிளே ஸ்டாரின் முன்னாள் க்வினெத் பேல்ட்ரோ வானியலாளரின் “செய்தித் தொடர்பாளர்” ஆகிறது: சமூக ஊடகங்கள் வெடிக்கும் | – டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • கார்கில் வெற்றி தினம்: போரில் உயிர்நீத்த தியாகிகளுக்கு குடியரசுத் தலைவர், பிரதமர் புகழஞ்சலி!
    • யார் அணியில் புதுக்கோட்டை மாநகர் திமுக? – வெடித்தது அடுத்த சர்ச்சை
    • தொடர்ந்து 3-வது நாளாக குறைந்த தங்கம் விலை: இன்றைய நிலவரம்!

    Recent Comments

    No comments to show.

    Archives

    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.